Pages

Wednesday, February 22, 2012

அண்ணா



அண்ணா
காஞ்சி மஹா ஸ்வாமிகளின் பல உபதேசங்களை எழுத்து வடிவில் கொண்டு வந்து மகத்தான சேவையை செய்த ஸ்ரீராகணபதி இரு தினங்களுக்கு முன் உடலைவிட்டுவிட்டார்பல வருஷங்களாகவே பெரும்பாலும் படுக்கையில் கழிக்க வேண்டிய நிலையில் இருந்த அவர் சமீபகாலமாக உணவு உட்கொள்வதை குறைத்துக்கொண்டே வந்தார்சுமார் இரு வாரங்களாக உணவு எதுவுமே எடுத்துக்கொள்ளவில்லைஎந்த மருத்துவ சிகிச்சையையும் பலமாக மறுத்தார்குறிப்பாக ஐவி வழியாக க்ளூக்கோஸ்சலைன் ஏற்ற வேண்டாம் என்று சைகையில் சொன்னார்.
 சிவராத்திரி மாலை டாய்லெட் போய் வந்து எல்லா ஜன்னல் கதவுகளையும் திறந்து வைக்கச்சொன்னார்வழக்கம் போல படுத்தவாறே ஜபங்கள் ஓடிக்கொண்டு இருந்தனஅவரது தமக்கைஇது வரை அவருக்கு சேவை செய்து வந்த தொண்டர்கள் ஆகியோர் அறையில் குழுமி இருந்தனர்சுமார் மாலை 7-25 க்கு கண்களை திறந்து அறை சுவற்றில் இருந்த படங்களை தலையை திருப்பி வரிசையாக பார்த்துக்கொண்டு வந்தார்பகவான் ரமணரின் படத்தில் ஆரம்பித்து ஷீரடி சத்ய பாபாராம் சுரத் குமார்புட்டபர்த்தி சாய் பாபா போன்றோர் படங்கள்வகை வகையாக அம்பாள் படங்கள் எல்லாவற்றிலும் அவரது பார்வை சற்று சற்று நிலைத்ததுபின் அதே வரிசையில் பின் திரும்பி எல்லாப் படங்களையும் பார்த்தார்பகவான் ரமணரின் படத்தில் பார்வை நிலைத்ததுபின் கண்களை மூடிக்கொண்டார்அமைதியாக உயிர் பிரிந்ததுபிள்ளையார் சதுர்த்தி அன்று பிறந்தவர் சிவராத்ரி அன்று தன் உலக பயணத்தை முடித்துக்கொண்டார்.
அண்ணா என்று அன்புடன் பலராலும் அழைக்கப்பட்ட ராகணபதி என்ற தொண்டனை மஹா பெரியவாள் அழைத்துக் கொண்டார்.
ராம க்ருஷ்ண மடத்தை சேர்ந்த 'அண்ணாவிற்கு பின் அண்ணா என்றால் பலரும் இவரையே குறிப்பதாக பொருள் கொள்வர்நடுவில் ஒரு முறை இவரை அத்தான் என்ற உறவு முறையில் விளித்து கடிதம் எழுதிய போது 'தொண்டுக்கிழம் முதல் குஞ்சு குளுவான் வரை எல்லாருக்கும் நான் அண்ணாதான்அப்படியே எழுதுஎன்று பதில் வந்தது!
இவரது தந்தையாருக்கு சொந்த ஊர் சிதம்பரம்பெயர் சி.விராமசந்திரன்இவரது தாய் கடலூர்ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி. (எனக்கு சொந்த அத்தைபலரும் இவரை மஹா ஒல்லியான எலும்பும் தோலுமான உருவத்தையே பார்த்திருக்கிறார்கள்ஆனால் சின்ன வயதில் "குண்டு குஸ்க்என்று இருந்த குழந்தை!
இன்டர் படித்துக்கொண்டு இருந்த போது காசநோய் தாக்கியதுஅப்போது குலைந்து போன உடல்நலம் திரும்பி வரவே இல்லை.
பிஏ லிட்ரேசர் முடித்தார்இதற்குள் வட பழனி ஆண்டவன் இவரை ஆட்கொண்டு விட்டான்கோவிலுக்கு போவதில் ஒரு ஈர்ப்பும் இல்லாத இவரை பெற்றோர் வற்புறுத்தி வட பழனி கோவிலுக்கு அழைத்துப்போக தரிசன மாத்திரத்தில் உள்ளம் துள்ள அப்படியே ஆட்கொள்ளப்பட்டார்.
மெய்ல் பத்திரிகையில் ரிப்போர்டராக பணியாற்றி இருக்கிறார்மாநகராட்சி தலைமைக்கு தேர்தல் நடந்து கொண்டிருந்ததுநிருபர்கள் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள குழுமி இருக்கிறார்கள்சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் ரிசல்ட் வந்ததால் மறு எண்ணிக்கை கேட்கப்பட்டு அதை ஏற்று மறு எண்ணிக்கையும் துவங்கியதுஇவருக்கு ஏற்கெனெவே மூச்சிரைப்பு (ஆஸ்த்மா என்று குறிப்பிட்டு இருக்கிறார்.) கொஞ்சம் தாக்குப்பிடித்து ரிசல்ட் வந்ததும் ரிபோர்ட் பண்ணிவிட்டு வீட்டுக்குப்போக உத்தேசித்து இருந்தவர் மறு எண்ணிக்கை என்றதும் ஆயாசப்பட்டுப்போனார்எப்படி வேண்டுமானாலும் போகட்டும்இனிமேல் தாங்காது என்று வடபழனி முருகா பார்த்துக்கொள் என்று வேண்டியபடி வீட்டுக்குத்திரும்பினார்பால் சாதம் கொஞ்சம் சூடாக சாப்பிட்டு படுத்து உறங்கி விட்டார்காலை எழுந்த பின்னரே இரவு செய்த காரியத்தின் முழு தாக்கம் உணர முடிந்ததுஎல்லாரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் தேர்தல் ரிசல்டை கொடுக்காமல் போய்விட்டோமேநேராக ப்ரஸுக்கு போனார்.
"தேர்தல் ரிசல்ட்..”
அது நேத்தே வந்தாச்சே சார்ப்ரிண்ட்ல ஏத்தியாச்சு!”
ஓஹோஎதோ நியூஸ் ஏஜென்சி ரிபோர்ட்டாக இருக்கும்.
"ஏஜென்சி ரிபோர்ட்டா?”
ப்ரூபை பார்த்து விட்டுஇல்லையே சார்நம்ம ஸ்டாஃப் ரிபோர்ட்தான் என்றார் ப்ரஸ் ஆசாமி. "அடநியூஸை யார் பைல் செய்ததுநியூஸ் ரிப்போர்ட்டை பார்த்தால் தெரிந்துவிடும்எப்படியும் நாம் நம் வேலையை செய்யாததற்கு பாட்டு வாங்க வேண்டும்என்று நினைத்தவாரே அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
கண்ணில் பட்ட நபர் "ஏன் சார்அவ்வளவு லேட்டா வேலை செய்திருக்கீங்கஆஃப் எடுத்துக்கறதுதானே?” என்று கேட்டவாரே போனார்.
லேட்டா வேலைச் செய்தேனாஒன்றும் புரியவில்லை.
அடுத்து பார்த்தவர் இரவுப் பணி ஆசிரியர். "ஏன் சார்நேத்து உங்களுக்கு அந்த நேரத்தில் டாக்ஸி கிடைத்ததாப்ரஸுக்கு செய்தியை அனுப்பிவிட்டு ஆபீஸ் கார் கூப்பிட்டு உங்களை கொண்டு விடச் சொல்லலாம்ன்னு பாத்தா அதுக்குள்ள போய்விட்டிங்களே?” என்றார்பின்னாலேயே "களைப்பா இருக்குமே ஆஃப் எடுத்துக்கொள்ளுங்களேன்என்றார். "ஆமாம்அப்படி சொல்லிவிட்டு போகத்தான் வந்தேன்!” என்று ஏதோ சொல்லிவிட்டுவட பழனி ஆண்டவனே காப்பாத்தினாய்ந்யூஸ் ரிப்போர்டில் யார் பெயர் இருக்கும் என்று இனி பார்க்க வேண்டியதில்லை என்று நினைத்துக்கொண்டே கிளம்பினார்.

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

அன்னாரின் ஆன்மா அமதி கொள்ள பிரார்த்தனைகள்...

Geetha Sambasivam said...

ஆண்டவா! எப்படி எல்லாம் வருகிறாய்!

sury siva said...

May his soul rest in Peace.
subbu rathinam

Jayashree said...

அடடா!! தெய்வத்தின் குரல் எழுதினவரா!! அவரா அண்ணா!! பாத்தது இல்ல . பெரியவரை பாக்காதவாளுக்கு அருமையான வாயப்பைத் தந்த அந்த பெரியவருக்கு என் மனமார்ந்த நன்றியும் நமஸ்காரமும் .

வழக்கப்படி ஏழுலேந்து ஆரம்பிச்சு இங்க வந்திருக்கு!! எல்லாருக்கும் ஒருவழின்னா இடும்பிக்கு ஒரு வழின்னு என் அம்மா சொல்லுவது ந்யாபகம் வருது!:) சரி! மறுபடி இங்கேந்து ஆரம்பிச்சு ஒருதரம் படிச்சுட்டா போச்சு :)