Pages

Wednesday, August 1, 2012

கங்கா ஸ்தோத்ரம் -6


(11)

वरम् इह नीरे कमठो मीनः किं वा तीरे शरटः क्षीणः ।
अथवा श्वपचो मलिनो दीनः तव न हि दूरे नृपतिः कुलीनः ॥

வரம் இஹ நீரே கமடோ² மீந:
கிம்ʼ வா தீரே ஶரட: க்ஷீண:
அத²வா ஶ்வபசோ மலிநோ தீ³ந:
தவ ந ஹி தூ³ரே ந்ருʼபதி: குலீந:

(தேவீ!) உன் நீரில் ஆமையாகவோ, மீனாகவோ அல்லது உன் கரையில் ஒரு மெலிந்த பச்சோந்தியாகவோ ஒரு தீனமான அழுக்கடைந்த சண்டாளனாகவோ வசிப்பது உன்னை விட்டு தூரத்தில் பெருங்குடியில் உதித்த அரசனாக இருப்பதைவிடச் சிறந்தது.

varam iha nīre kamaṭho mīnaḥ kiṁ vā tīre śaraṭaḥ kṣīṇaḥ
athavā śvapaco malino dīnaḥ tava na hi dūre nṛpatiḥ kulīnaḥ


(12)

भो भुवनेश्वरि पुण्ये धन्ये देवि द्रवमयि मुनि-वर-कन्ये ।
गङ्गा-स्तवम् इमम् अमलं नित्यं पठति नरो यः स जयति सत्यम् ॥

போ⁴ பு⁴வனேஶ்வரி புண்யே த⁴ந்யே
தே³வி த்³ரவமயி முநி-வர-கந்யே
க³ங்கா³-ஸ்தவம் இமம் அமலம்ʼ நித்யம்ʼ
பட²தி நரோ ய: ஸ ஜயதி ஸத்யம்

ஓ உலகுக்கெல்லாம் தலைவியே! புண்ணியமானவளே, பாக்கியம் நிறைந்தவளே! உருகிய தன்மை படைத்த தேவி! சிறந்த (ஜஹ்நு) முனிவரின் புதல்வியே! பவித்திரமான இந்த (உனது) கங்கா ஸ்தோத்திரத்தை தினமும் படிப்பவர்கள் நிச்சயம் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவர்!

bho bhuvaneśvari puṇye dhanye devi dravamayi muni-vara-kanye
gaṅgā-stavam imam amalaṁ nityaṁ paṭhati naro yaḥ sa jayati satyam

No comments: