Pages

Wednesday, October 7, 2015

கிறுக்கல்கள்! - 42


ஒரு சித்திரக்காரருடன் மாஸ்டர் பேசிக்கொண்டு இருந்தார்.


ஒவ்வொரு ஓவியனும் வெற்றி அடைய பல மணி நேரம் கடுமையாக உழைக்க வேண்டும்.
அப்படி செய்கையில் சிலருக்கு அகங்காரம் அகன்று விடுகிறது. அந்த நேரத்தில் ஒரு தலை சிறந்த - மாஸ்டர்பீஸ் - ஓவியம் பிறக்கிறது!

பின்னால் ஒரு சீடன் கேட்டான்: மாஸ்டர் என்பவர் யார்?

யாருக்கு அகங்காரத்தை விட்டுவிட வாய்த்ததோ அவரே மாஸ்டர். அவருடைய வாழ்க்கை ஒரு மாஸ்டர்பீஸ்!

Tuesday, October 6, 2015

கிறுக்கல்கள்! - 41


மாஸ்டர் தெருவில் நடந்து போய்க்கொண்டு இருந்தார். ஒரு வீட்டிலிருந்து ஒரு மனிதன் வெகு வேகமாக வெளியே ஓடி வந்தான். இருவரும் மோதிக்கொண்டனர். கீழே விழுந்து சுதாரித்து மெதுவாக எழுந்தனர். அந்த மனிதன் காச் மூச் என்று கத்தி மாஸ்டரை கன்னா பின்னா என்று திட்ட ஆரம்பித்தான்.

மாஸ்டர் அமைதியாக தலை சாய்த்து வணங்கினார். பின் சொன்னார்:”நண்பா நாம் மோதிக்கொண்டதில்  இருவரில் யார் தவறு செய்தோம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதை நிர்ணயிக்க உங்களுடன் வாக்குவாதம் செய்யப்போவதில்லை. ஒரு வேளை நான் தவறு செய்திருந்தால் மன்னித்து விடு. ஒரு வேளை தவறு உனதானால் பரவாயில்லை; மன்னித்துவிட்டேன்!”

புன்னகையுடன் நடக்கலானார்!

Saturday, October 3, 2015

கிறுக்கல்கள்! - 40


மாஸ்டர் ஒரு புதி போட்டார்: ஒரு ஞானி, ஒரு தேர்ந்த கலைஞன் –ஓவியனோ, இசை அமைப்பவனோ= இவர்களுக்குள் என்ன சம்பந்தம்?

எல்லோரும் யோசித்துவிட்டு தோல்வியை ஒப்புக்கொண்டார்கள்.

மாஸ்டர் பதில் சொன்னார்: வெறும் நாக்கில் இருந்தது அருமையான சொற்பொழிவு வருவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்தவர்கள்!

Friday, October 2, 2015

கிறுக்கல்கள்! - 39



உங்க ஆன்மீகம் அப்டேட் ஆகணும் என்றார் ஒரு சீடர்.


மாஸ்டர் விழுந்து விழுந்து சிரித்தார். பிறகு ஒரு கதை சொன்னார்.

மருத்துவ கல்லூரி மாணவன் ஒருவன் கடைக்குபோய் அனாடமி புத்தகம் வேண்டும் என்றான். கொடுத்த புத்தகத்தை பார்த்து இது வந்து பத்து வருடம் ஆகிவிட்டது! என்றான். கடைக்காரர் அமைதியாக சொன்னார்: தம்பி, மனுஷ உடம்பில பத்து வருஷத்துல புதுசா ஒரு எலும்பைகூட சேர்க்கலை!"

அது போல மனித இயல்புக்கு பத்தாயிரம் வருஷமா ஒன்னும் சேர்க்கலை!

Thursday, October 1, 2015

கிறுக்கல்கள்! - 38


இங்க வந்து நாலு மாசமாச்சு. இன்னும் நீங்க எனக்கு ஒரு வழிமுறையோ பயிற்சியோ
கத்துக்கொடுக்கலை!

வழிமுறையா? எதுக்கு?

உள்ளே விடுதலை பெற!

மாஸ்டர் இடிஇடி என்று சிரித்தார். “வழிமுறை என்கிற பொறியை தாண்டி உள்ளே விடுதலை பெறனும்ன்னா அதுக்கு ரொம்பவே சாமர்த்தியம் வேணும்!”