Pages

Wednesday, October 7, 2015

கிறுக்கல்கள்! - 42


ஒரு சித்திரக்காரருடன் மாஸ்டர் பேசிக்கொண்டு இருந்தார்.


ஒவ்வொரு ஓவியனும் வெற்றி அடைய பல மணி நேரம் கடுமையாக உழைக்க வேண்டும்.
அப்படி செய்கையில் சிலருக்கு அகங்காரம் அகன்று விடுகிறது. அந்த நேரத்தில் ஒரு தலை சிறந்த - மாஸ்டர்பீஸ் - ஓவியம் பிறக்கிறது!

பின்னால் ஒரு சீடன் கேட்டான்: மாஸ்டர் என்பவர் யார்?

யாருக்கு அகங்காரத்தை விட்டுவிட வாய்த்ததோ அவரே மாஸ்டர். அவருடைய வாழ்க்கை ஒரு மாஸ்டர்பீஸ்!

No comments: