Pages

Saturday, September 30, 2017

ஸரஸ்வதி பூஜை





நேற்றும் இன்றும் ஸரஸ்வதி பூஜை பலரும் வீட்டில செஞ்சிருப்பீங்க.
ஸரஸ்வதி பூஜைன்னா எனக்கு நினைவுக்கு வரது நண்பர் ஶ்ரீரங்கம் மோஹன ரங்கன். (அவர் பெயரை எப்படி எழுதனும் என்கிறதுல அவர் குறிப்பா இருக்கார். அவரை மோஹன் ன்னோ ரங்கன்னோ கூப்பிட்டுவிடக்கூடாது! சரியாத்தான் எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்... இல்லை மோகன ன்னு எழுதறாரா? நினைவுக்கு வரலை. பார்க்கலாம். தேவையானா அப்புறம் திருத்தலாம்!)
ஏன் வருஷா வருஷம் இந்த காலகட்டத்தில அவர் நினைவுக்கு வரார்ன்னா, ஸரஸ்வதி பூஜைன்னா அன்னைக்குன்னு விசேஷமா நிறைய படிக்க வேண்டாமா? அதுதானே சரியான ஸரஸ்வதி பூஜையா இருக்கும்ன்னு கட்சி கட்டுவார்! அதுலேயும் ஒரு லாஜிக் இருக்கில்லை? :-)
கோளாறான சிந்தனைகள் அடிக்கடி வரும்னாலும் எல்லாத்தையும் வெளியே பகிர்ந்து கொள்ளறது இல்லை. உங்க எல்லார் மேலேயும் இருக்கிற கருணையே காரணம். இருந்தாலும் இன்றைய கோளாறான சிந்தனை பகிரப்படுகிறது!(நினைச்சதை விட பெரிசாபோயிடுத்து.சாரி!)
==
ஆன்மீகத்தில கொஞ்சம் ம்ம்ம்ம்ம்? கொஞ்சமென்ன நிறையவே முதிர்ந்த நிலைன்னா எல்லாவற்றிலும் இறைவனை பார்க்கிறது. எல்லாம் ப்ரஹ்மம்ன்னு உணருகிற நிலைக்கு போயிட்டா வேற ஒண்ணுமே வேணாம்! அதுக்கும் கொஞ்சமே கொஞ்சம் கீழ் லெவல் எல்லாத்துலேயும் ஒரே இறைவன் இருக்கிறான்னு உணருகிறது.
இந்த உணருவதுக்கும் தியரியா ஒப்புக்கறதுக்கு பெரிய இடைவெளி இருக்கு. என்னதான் தீவிரமா யோசனை செய்து ஆமாம், எல்லாத்துலேயும் இறைவன் இருக்கிறான்னு புத்தி பூர்வமா ஒத்துக்கொண்டாலும் அதை நடைமுறைப்படுத்துவதிலே நிறைய சிக்கல் இருக்கு.
காரணம் வாசனை. ஒரு விஷயத்துக்கு நம் எதிர்வினை எங்கிருந்து வரும்? நிதானமா யோசிச்சு செயலாற்றினா புத்தியிலேந்து வரும். ஆனா அது நமக்கு வழக்கம் இல்லே! எதிர்வினை நம்மோட வாசனைகளிலேந்துதான் சட்டுன்னு வரும். (மேலே தெரிஞ்சு கொள்ள எமோஷனல் இன்டலிஜென்ஸ் பத்தி படிக்கவும். http://innamuthu.blogspot.in/2016/10/blog-post.html இல் துவங்கிபடியுங்கள். கொஞ்சம் பெரிய தொடர்.)
வாசனைன்னா? இதைப்பத்தி முன்னேயே எழுதி இருக்கேன். அது பத்தி தெரிஞ்சவங்க அடுத்த பாராவுக்கு போயிடலாம். மத்தவங்களுக்காக: புதிதாக ஒரு காரியம் செய்கிறோம். புரியாத விஷயம் என்பதால் ஆரம்பத்தில் ஜாக்கிரதையாக கவனமாக செய்வோம். அதை திருப்பித்திருப்பிச்செய்ய அதில் ஒரு ’ப்லூயன்ஸி’ ஏற்படுகிறது. பல முறை செய்ததை ’அசால்டாக’ முழு கவனம் கொடுக்காமலே கூட செய்து விடுவோம். அதாவது செய்கையில் ஒரு பழக்கம் உண்டாகிவிட்டது! இன்னதுக்கு இப்படி செய்யணும் என்று ஒரு பழக்கம். ஒரு ரிப்லெக்ஸ்ன்னு கூட சொல்லலாம். இதை பண்புப்பதிவு - சம்ஸ்க்ருதத்தில் சம்ஸ்காரம்- என்போம். இதுவே நாளாக ஆக உள்ளே ஊறிப்போய்விடுகிறது. இப்படி பலப்பட்ட சம்ஸ்காரம்தான் வாசனை. இது அந்த ஜன்மத்தில் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த ஜன்மங்களிலும் வருகிறது. புரிவதற்காக ஒரு மோசமான உதாரணத்தை பார்க்கலாம். ஒருவன் ஏதோ அவசியம் ஏற்பட்டு திருடுகிறான். முதல் முறை பயந்து கொண்டே திருடுவான். அடுத்த முறை அவ்வளவு பயமில்லாமல்; சில முறை ஆனதும் பயமே இல்லாமல்; இன்னும் சில காலம் சென்றபின் ஆட்டோமேடிக் ஆக! இதுதான் சிலர் சில விஷயங்களை ஏன் சட்டென்று பிடித்துக்கொண்டு சிறப்பாக செய்கிறார்கள் என்பதற்கான விளக்கம். சிலருக்கு பாட்டு பாடுவது சட்டென்று வருகிறது. சிலருக்கு நடனம். சிலருக்கு திருடுவது! :-))
ரைட் மேலே போகலாமா?
இந்த வாசனை பலமானது. இதன் படி ஒரு விஷயத்தை செய்யாமல் இருக்க முடியாது. ஒன்றுமில்லாத விஷயத்துக்கு கோபப்பட்டே பழகியவர் அப்படி கோபப்பட்டுக் கொண்டேதான் இருப்பார். அப்படி இல்லாமல் அவர் இருப்பது ஏறத்தாழ இயலாத காரியம்.
இந்த வாசனைதான் திடீர்ன்னு ஒரு புது கான்செப்டை ஒத்துக்க, நடைமுறைப்படுத்த பெரிய தடையா இருக்கு. முயற்சி செய்தால் போக்கிக்கலாம். ஆனால் அதுக்கு நிறைய மனோ தைரியமும் நிறைய இடைவிடாத முயற்சியும் தேவை.
ரைட்! அப்ப சட்டுன்னு எல்லாவற்றிலும் ஒரே இறைவன் இருக்கறதா நடைமுறையில் செயலாற்றுவது கஷ்டம். என்ன செய்யலாம்?
கொஞ்சம் லெவல் கீழே இறங்கி வரலாம். எல்லாத்துலேயும் இறைத்தன்மை இருக்குன்னு ஒத்துக்க முடியுமா?
முடியும். ஏன்னா அது வாசனை சார்ந்தது! காலங்காலமா பல விஷயங்களில இறைவனை பார்க்கறா மாதிரி நம்மோட வாழ்க்கை அமைஞ்சிருக்கு. நதிகள் ஸ்வாமி; மரங்கள் ஸ்வாமி; மலைகள் ஸ்வாமி. கல்லுல ஸ்வாமி; மரத்தில ஸ்வாமி. தண்ணில ஸ்வாமி. மூஞ்சூறு? பிள்ளையார் வாகனம். காகம் - பித்ருக்கள் அந்த ரூபத்தில வராங்க. கிளி அம்பாள் கையில்னா இருக்கு? நாய் கூட பைரவரை நினைவு படுத்தும். வேப்ப மரம், அரச மரம் - கேட்கவே வேண்டாம்.
இப்படி ஏறத்தாழ எல்லா ஜீவராசிகளும் மலை நதி போன்ற 'உயிரில்லாதவையும்' ஏதோ ஒரு தேவதையுடன் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கு. (இந்த கொசு ஒண்ணுதான் விதி விலக்கு போலிருக்கு. தெரிஞ்ச வரை ஒரு தேவதை சம்பந்தமும் இல்லே! :)
இதை இன்னொரு விதமா பார்க்க எல்லாவற்றிலும் ஒரு தேவதை இருக்கு. மரம் செடி கொடிகள், மிருகங்கள்... அதைப்போற்றுகிற பக்குவமும் நம்மகிட்ட இருக்கு. இதை வலுப்படுத்திக்கணும்.
சமீபத்திய நாத்திக இயக்கத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் எளிய மக்கள்கிட்ட இருந்து இது பெருமளவுக்கு மறைந்து போச்சு. அதனாலத்தானே கோவில் குளங்களை ஆக்கிரமிக்கிறோம்? நதிகளை அசுத்தமாக்குகிறோம்? மணலை கொள்ளை அடித்து நதியே காணாமல் போக்குகிறோம்? மலைகளை உடைக்கிறோம்? மரங்களை வெட்டுகிறோம்?
இத்தனையும் செய்து விட்டு மழை இல்லை என்று திட்டிக்கொண்டு இருக்கிறோம். எப்படியோ மழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்தால் தண்ணீர் வெள்ளத்தை காணவில்லை. சோப்பு நுரைதான் பெருக்கெடுக்கிறது!
கிடக்கட்டும். மனுஷனை எப்பய்யா ஒண்ணா பார்ப்பீங்கன்னு சிலர் கேட்கிறது கேட்குது. அதுல சிக்கல் இருக்கு!
செடி மரம் மாதிரி இருக்கிறதுகளோட நல்ல உறவு வெச்சுக்கலாம். பிரச்சினையே இல்லை. பசு, நாய் மாதிரி மிருகங்களோட கூட நல்ல உறவு வெச்சுக்கலாம். நல்ல சுத்த மனசோட அணுகிணா அவை நல்லாவே உறவு கொண்டாடும்.. பிரச்சினை இராது.
ஆனா இந்த மனுஷன்....... காம்ப்லெக்ஸ் ஆசாமி. இவனோட எதிர்வினைதான், ஈகோ என்கிற அஹங்காரம்தான் பிரச்சினையா இருக்கும்! மிருகங்கள் பிரதிபலிக்கிற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு இவனிடம் காண்பது மிக அரிது! அதான் பிரச்சினை. இதையும் தாண்டி அன்பு செலுத்துகிற மஹான்கள் இருக்கவே இருக்காங்க.
இருக்கட்டும். மோஹனரங்கனுக்கு திரும்ப வருவோம்.
ஸரஸ்வதி பூஜையில் கல்பத்தில் இப்படி இருக்கிறது: ....ஶோபித மண்டபே பத்ர பீடே ஸர்வாணி புஸ்தகாணி ஸம்ஸ்தாப்ய....
மண்டபத்தில் சுத்த மங்கலமான பீடத்தில் எல்லா புத்தகங்களையும் வைத்து....
இதில் துர்கா லக்‌ஷ்மீ ஸரஸ்வதி ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும். முதல் நாள் பூஜை முடித்து அடுத்த நாள் புனர்பூஜை முடிக்கும் வரை அதில் தேவதா ஆவாஹனம் இருக்கிறது, ஆகவே அதை கலைத்து புத்தகம் எடுக்க முடியாது, படிக்க முடியாது. எல்லா புத்தகங்களையும் என்று சொல்லிவிட்டதால்.... என்னய்யா இது? எப்படி ஒத்தர்கிட்ட இருக்கிற எல்லா புத்தகங்களையும் வைக்க முடியும்? உதாரணமா மோஹன ரங்கனே வீடு கொள்ளாமல் இருக்கிற புத்தகங்களை மற்ற்வர்களுக்கு கூப்பிட்டு கூப்பிட்டு கொடுத்தார். சர்வ சாதாரணமாக பலர் வீட்டிலும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன.
ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். இந்த கல்பங்களை எழுதியபோது அப்படி நிலமை இல்லை. பலதும் ஓலைச்சுவடிகள். அச்சுப்பிரதிகள் ஸொல்பமே.
இந்த காலத்திலும் கடையில் நாம் வாங்கும் பலவித சஞ்சிகைகளை விட்டுவிடலாம். நாவல்களை விட்டுவிடலாம். பள்ளிப்பாட புத்தகங்கள், வேத புத்தகங்கள், ஆன்மீகம் சார் மற்ற புத்தகங்களைத்தான் எல்லாரும் பூஜையில் வைக்கின்றனர். பூஜையில் வைக்காத புத்தகங்களை இன்றைக்கு படிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இன்றைக்கு ஒண்ணுமே படிக்கக்கூடாது என்ற பழக்கம் பள்ளி மாணவர்கள் உருவாக்கியது என்ற பலத்த சந்தேகம் இருக்கு! அதே நாளைக்கு புனர் பூஜை முடித்து கட்டாயம் படிக்கணும்ன்னு சொல்லிப்பாருங்க!.... :-))))

No comments: