Pages

Monday, February 19, 2018

கிறுக்கல்கள் -171





ஒரு சர்வாதிகாரி நாட்டில் ஆட்சியை பிடித்தார். கடுமையான தணிக்கை நடைமுறைகள் செயலில் இருந்தன. போலீஸார் மாஸ்டரை ஒரு தெருக்கோடியில் நோட்டிஸ்களை வினியோகம் செய்ததாக கைது செய்தனர்.

காவல் நிலையத்தில் அவரது மூட்டையை சோதனை செய்தவர்கள் திடுக்கிட்டனர். ஏனெனில் அதில் இருந்தது வெற்று நோட்டீஸ் தாள்களே!

இதன் அர்த்தம் என்ன என்று மாஸ்டரை கேட்டார்கள். மாஸ்டர் சிரித்துக்கொண்டே சொன்னார்: "இதன் அர்த்தம் ஜனங்களுக்கு புரியும்”!

இந்த நிகழ்ச்சி நாட்டில் வெகுவாக பரவிவிட்டது!

இதனால் பல வருஷங்கள் கழித்து வழிபாட்டுத்தலத்தில் மாஸ்டர் அதே போல வெற்று நோட்டிஸ்களை வினியோகித்த போது அதன் நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை!

No comments: