Pages

Friday, February 23, 2018

கிறுக்கல்கள் - 175





சீடர் கேட்டார்: "கடவுளை செயலில் எப்படி அறிவது?"
மாஸ்டர் சொன்னார் "உன் வேலை உனக்கு என்ன தரும் என்பதைப்பற்றி சிந்தனை இல்லாமல் அதை நேசி.”

அதை செயல்படுத்த நினைத்த சீடரால் அதை சாதிக்க முடியவில்லை.

மாஸ்டர் சொன்னார்: ஒரு ஆசாமி கோடி ரூபாய் கொடுத்து ஒரு சித்திரத்தை வாங்கினார். பின் அதற்கு கொடுத்த காசோலையை வங்கி பெற்று 'கான்சல்' செய்த பிறகு அதை வாங்கி சட்டமிட்டு சுவரில் மாட்டினார்.

அவர் விரும்பியது சித்திரத்தை இல்லை; அவருடைய பணக்காரத்தனத்தை வெளிக்காட்டிகொள்வது மட்டுமே.

No comments: