Pages

Tuesday, February 23, 2010

நியாஸம் -தொடர்ச்சி2




இது மாதிரி ஆகிவிடக்கூடாது!
சாதாரணமாக மனித மனசு கொஞ்சம் மலினமானது. அது கொஞ்சம் ஜாக்கிரதை குறைவாக இருந்தாலும் பலவித ஆசைகளுக்கும் அதன் தொடர்ச்சியாக பலவித கோப தாப பொறாமை முதலியதற்கும் இடம் கொடுத்துவிடும். அதைதான் ராமக்ருஷ்ணர் வேடிக்கையாக சொன்னார் என்று நினைக்கிறேன். எப்படி கங்கை குளியலால் பாபங்கள் விலகுமோ அப்படி ஜபத்தினால் மனசும் கொஞ்சம் தூய்மையாகும். இதை வளர்த்துகிட்டே போகணும். பழைய படி மலின எண்ணங்களுக்கு இடம் கொடுக்ககூடாது. அதுக்கு முயற்சியாவது செய்ய வேணும்.

இது சக்தி பஞ்சாக்ஷரீ சமாசாரம். இதைபோலவே மத்ததுக்கும் உண்டு. பீஜாக்ஷரங்கள் மாறும். த்யான ஸ்லோகம் மாறும். அடிப்படை ஒண்ணேதான்.
நியாஸம் கூட மந்திரத்தையே மூணாகவோ ஆறாகவோ பிரிச்சு பயன்படுத்தறதும் உண்டு.

நாம ஜபத்துக்கு இப்படி ஒரு நியமமும் இல்லை. ஆசமனம் பண்ணி உட்கார்ந்து மனசில இஷ்ட தேவதையை த்யானம் பண்ணி ஜபம் ஆரம்பிக்க வேண்டியதுதான். இந்த நாம ஜபத்திலே ஒரு சௌகரியம் என்னன்னா இதை அப்புறமும் நிறுத்தவே தேவையில்லை. நினைவு வரும்போதெல்லாம் சொல்லிகிட்டே இருக்கலாம்.
நாம ஜபமோ க்ரம ஜபமோ ஏதானாலும் மனசு அதிலே எவ்வளவு குவிப்போட ஈடுபடும் என்கிறதை பொறுத்துதான் பலன். அதனால இதுவா அதுவா என்கிற கேள்வியெல்லாம் தேவையில்லை. இருந்தாலும் க்ரம ஜபம் குரு மூலமா பெற்றவங்களுக்கு அதை விட்டுவிட்டு நாம ஜபத்திலே இறங்கறதுலே அவ்வளவு விசேஷம் இல்லை. சேர்த்து செய்வதிலே தப்பு இல்லை.
ஜபம் முடிஞ்சாச்சா? அடுத்து சூரியன் உதிக்கப்போகுது. சூரிய உபாசனைக்கு தயாராகலாம்.

No comments: