Pages

Wednesday, February 3, 2010

கர்மா அடுத்த சுற்று -காலையில் எழுந்து




காலை எப்போது எழுந்திருக்கணும்?

பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்னேயே எழுந்திருக்கணும்.

அதாவது 6 மணிக்கு சூரிய உதயம்ன்னா 4-30 க்கு முன்னேயே.

சரிப்பா, அடுத்த அஞ்சலை பாக்கப் போகலாம் என்கிறீர்களா?

:-)))

நம்மில் பலருக்கும் இரவு சீக்கிரம் தூங்கப் போகும் பழக்கம் இல்லை, சர்வ சாதாரணமாக 10 -11 ஆகிவிடுகிறது. அப்படி தாமதமா தூங்கபோனா இது கஷ்டம்தான். நான் சின்ன பையனா இருக்கும் போது ஹோசூரில் சீக்கிரம் இருட்டி 7 மணிக்கெல்லாம் வீடு அடங்கிவிடும். மின் விளக்குகளும் அதிகம் கிடையாது. இப்போது எப்போ தூங்கப் போறோம் என்கிறதை சீரியல்கள்தான் நிர்ணயிக்குது. சரி, சரி! நாம்தான் இதை நிர்ணயம் செய்யணும். இரவு ஒன்பதுக்குப் பிறகு தூங்கப்போனால் காலை நாலரைக்கு எழுந்திருப்பது கஷ்டம்தான்.

அது சரி! இவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன செய்ய?
ஜபம், த்யானம் இதுக்கெல்லாம் இதே மிக நல்ல நேரம்.

இரவு படுக்கப்போகும்போது மனமும் உடலும் களைத்து இருக்கும். மனம் தேவையான தேவையில்லாத பல விஷயங்களையும் எதிர்கொண்டு எதிர்வினையை தூண்டி தூண்டியே களைத்து போயிருக்கும். நாள் முழுதும் பறந்து பறந்து இரை தேடிய பறவை களைப்பாகி சுகம் அனுபவிக்க கூட்டில போய் பட்டென்று விழுவது போல, அப்பாடா என்று படுத்து விடுகிறோம்.

இரவு மூளையில் உள்ள ரசாயனங்கள் மீண்டும் உற்பத்தி ஆகிறது. ஜீவாத்மா மனம் ஒடுங்கி - கருவி கரணங்கள் எல்லாம் ஒடுங்கி நித்திரையில அனுபவிக்கிற சுகம் பிரமாநந்தம்.

இந்த பிரம்மானந்தத்தாலே காலையிலே புத்துணர்ச்சியோட எழுந்திருக்கிறோம்.

இதனாலத்தான் யோகிகள் தவிர யாராலேயும் தூக்கம் இல்லாம இருக்க முடியாது. ஓரளவு தள்ளிப்போடலாமே ஒழிய, இல்லாமலே இருக்க முடியாது.

இருக்கட்டும். காலை எழும் போது மனம் புதுசா இருக்கா? அது மலினமான எண்ணங்களுக்கு போகு முன்னே அதை கொஞ்சம் சீர் செஞ்சு நல்ல வழியிலே திருப்பி விட்டோம்னா நாள் முழுதும் நல்ல படியா போகும். அதனால மனசளவில இறைவனோட ஒன்றி இருக்கப் பார்க்கணும். இதுக்குத்தான் விடிகாலையிலே ஜபம், த்யானம்.

என்ன ஜபம்?

யாருக்கு என்ன உபதேசம் ஆகியிருக்கோ அதுதான்.

காயத்ரி உபதேசம் ஆனவங்களுக்கு சந்தேகமில்லாமல் அதுவே. அப்புறம்தான் அவருக்கு உபதேசமான மற்ற மந்திரங்கள்.

ஏதுமில்லையானால் நமக்கு பிடிச்ச நாம ஜபம். இதுல ஒரு சாதகமான விஷயம், இதையே நாள் முழுதும் தொடர முடியும் என்கிறதுதான். அதைப்பத்தி அப்புறம் பார்க்கலாம்.

ஜபம் செய்ய காலை குளியலை முடிச்சும் செய்யலாம். இந்த குளிரிலே யார்ப்பா குளிக்கிறதுன்னு கேட்டா, சரி சரி - குளிக்க வேண்டாம். ( இப்போதைக்குத்தான்!) கழிவறையை பயன்படுத்திவிட்டு, பல் தேய்த்து, கை கால் சுத்தி செய்து, முகம் கழுவி, நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஜபம் செய்ய அமரலாம்.

த்யானத்திலே உக்காந்தா ஒரு சப்தமும் கேட்கக்கூடாது; குளிரோ வெயிலோ தெரியக்கூடாது; கொசு கடிச்சாலும் தெரியக்கூடாது ன்னு எல்லாம் வீண் கற்பனை வேண்டாம். அதெல்லாம் அட்வான்ஸ்ட் லெவெல். அந்த மட்டத்துக்கு போகும் / பழகும் வரை தொந்திரவு ஏதும் இல்லாதபடிக்கு பாத்துக்கலாம். செல் போனை ஆஃப் பண்ணிடலாம். கொசு விரட்டி இருக்கான்னு பாத்துக்கலாம். மின் விசிறியை தேவையான வேகத்துக்கு போட்டுக்கலாம். இப்படி பலதை யோசிச்சு செய்துக்கலாம். இதுக்கும்தான் இந்த அதிகாலை நேரம் வசதின்னு சொல்கிறது.

இந்த நேரம் நாம் ஜபம் த்யானம் செய்கிற நேரம்ன்னு தெரிஞ்சா மத்தவங்களும் இதுக்கு அட்ஜஸ்ட் பண்ணிண்டு போயிடுவாங்க. தொந்திரவு செய்ய மாட்டாங்க.

3 comments:

yrskbalu said...

ji,

what about visara sangaraham?

திவாண்ணா said...

அன்புள்ள பாலு, இதுவும் விசார சங்கிரஹமும் மாறி மாறி இனி வரும்.ஒரு படம் வரைய வேண்டி இருந்ததாலும் மாக புராணத்தை மாக் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டி இருந்ததாலும் தடைப்பட்டது. இனி தடை இல்லை.

தக்குடு said...

பெங்களூரில் தொடங்கிய இந்த அதிகாலை 4.30 மணி schedule இங்க வந்தும் தொடர்ந்து(4 years) கொண்டிருக்கிறது.