Pages

Wednesday, November 11, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-7




சுமார் ஏழு வருடங்கள் டவுண் ஹாலில் கொட்டகை போட்டு நடத்தி வந்தோம்.
அதே சமயம் முக்கால் வாசி சாதகர்கள்  திருப்பாதிரிப்புலியூர் பகுதி, அதைத்
தாண்டிய பகுதிகளில் இருந்து வந்து கொண்டு இருந்ததாலும், நெய்வேலி மக்கள்
திருப்பாதிரிப்புலியூருக்கு பேருந்தில் வருவது சுலபம் என்பதாலும் இடத்தை
மாற்றிவிட தீர்மாணித்தோம். அங்கே இருக்கிற பள்ளி ஒன்றில் கொட்டகை அமைத்து
நடத்தினோம்.

அடுத்த வருடம்  கும்பகோணத்தில் தீ விபத்து நடக்கவே கொட்டகைகள் போட தடை
விதிக்கப்பட்டது. ஷீட் போட்டு கொட்டகை அமைத்தால் சூடும் உள்ளே
இருப்பவர்களுக்கு தாங்காது, புகையும் வாங்காது.

அப்போது திருப்பாபுலியூரில் இருக்கும் சங்கர பக்த ஜன சபா கமிட்டியினர்
அவர்களாகவே வந்து அவர்களுடைய ஹாலில் நடத்தும்படி கேட்டுக்கொண்டார்கள்.
சில காரணங்களால் அந்த இடம் சரியாக பயன்படுத்தப்படாமல் இருந்தது.

ஹால் என்றால் எப்படி குழி தோண்டி ஹோமம் செய்வது?

பரவாயில்லை வருடா வருடம் தோண்டிக்கொள்ளலாம். நாங்களே சரி செய்து
கொள்கிறோம் என்றார்கள்.
மனசாகவில்லை.
எங்கள் வீட்டுக்கு வரும் நண்பரை கலந்தாலோசித்ததில் அவர் ஒரு வகையில்
செங்கல் வைத்து ஹோமம் செய்ய கற்றுக்கொடுத்தார். இந்த முறையில்
பயமில்லாமல் தரைக்கு ஒரு பாதகமும் வராமல் ஹோமம் செய்யலாம். அக்னியும்
நன்றாக ஜ்வாலை விட்டு எரியும்.
இப்படியே செய்து பார்க்க முடிவு செய்தோம்.

எங்களுக்கு வீடு கட்டிக்கொண்டு இருந்த மேஸ்த்ரியை கூப்பிட்டு செங்கல்
வேண்டும் என்று  கேட்டோம்.அவரும் தருகிறேன் என்றார். அப்புறம் இன்னொரு
பிரச்சினை. ஹோமம் முடிந்தபின் இத்தனை செங்கல்லையும் என்ன செய்வது?
யோசித்து மேஸ்த்ரியை நீங்களே இதை எடுத்துபோய் கட்டிடம் கட்ட உபயோகிக்க
முடியுமா என்றோம்? அவரும் செய்யலாம் சார் என்றார்.
அதே போல ஹோமத்துக்கு முன் தினம் வந்து எங்கள் வழி காட்டுதலில் ஹோமம்
குண்டம் தயார் செய்து கொடுத்துவிட்டு போய்விட்டார்.

ஆரம்பத்தில் இருந்து எங்கள் நிதி நிலை இப்படி அப்படிதான் இருந்தது.
அதனால் மேஸ்த்ரி என்ன பணம் வேண்டும் என்றூ கேட்டேன்.அவரோ ஒண்ணும்
வேண்டாம் சார். இது என் பங்காக இருக்கட்டும் என்றார்.

அடுத்த வருடம் அவரே எப்போ சார்  ஹோமம் என்று  விசாரித்தார்.

குண்டம் அமைத்து கொடுத்தார். அந்த வருஷம் கையில் கொஞ்சம் பணம் தேறியது.
அதனால் கூலி கொடுக்க முன் வந்தேன்.
"வேண்டாம் சார்! என்றார்.
"ஏன் மேஸ்த்ரி?"
சார், இந்த ஹோமம் முடிஞ்ச பிறகு அந்த கல்லை வெச்சு கட்டிடம் கட்ட
ஆரம்பிச்சா ஸ்டாப் ஆகாம வேல ஓடிப்போகுது சார். அதிலே அவ்வளொ பவர்
இருக்குது என்றார்!

அண்மையில் அவர் ஒரு - அவர் லெவல் க்கு மிகப்பெரிய கட்டிடம் -
மருத்துவ மனை கட்டி இருந்தார். அதனால் எனக்கு அது உண்மை என்று  தெரியும்.
சாதாரணமாக என்னதான் செல்வ சீமானாக இருந்தாலும் ஏதோ காரணமாக கட்டிட வேலை
தடை பெறுவது உண்டு. இதிலோ ஒரு தடையும் இல்லை. வேலை படு வேகமாக
நேர்த்தியாகவே முடிந்தது.

இதை கேள்வி பட்ட சிலர் அடுத்த வருடம் என்னிடம் வந்து அந்த ஹோமத்தில்
வைத்த செங்கல் தர முடியுமா என்று கேட்டர்கள். நான் கல் எல்லாமே
மேஸ்த்ரியுடையது., அவருக்கு கொஞ்சம் திரவியம் கொடுத்துவிட்டு
வாங்கிக்கொள்ளுங்கள் என்றேன். அவர்களும் அதே போல பணம் கொடுத்து
வாங்கிச்சென்றனர்.
எனக்கே நன்றாக தெரிந்த ஒரு ஆசிரியை அப்படி வாங்கிச்சென்று தடை இல்லாமல்
கட்டிட வேலை முடிந்தது. இத்தனைக்கும் அவர்கள் வருமானம் அப்படி ஒன்றும்
அதிகமில்லை.

கூட்டங்களில்  சொல்வதற்கு எனக்கு இன்னும் ஒரு விஷயம் அகப்பட்டது.
ஏன்பா காயத்ரியின் பெருமை ஒரு மேஸ்த்ரிக்கு தெரிகிறது. உனக்கு தெரியலையே? :-))

1 comment:

Geetha Sambasivam said...

எங்க ஊர்க்கோயிலுக்கு எங்களுக்கு ஒரு செங்கல் இப்போவே சொல்லி வைக்கிறேன்.