Pages

Thursday, November 12, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-8



கடலூரில் ஏழு வருஷம் ஜப யக்ஞம் நடந்த பிறகு மற்ற ஊர்களில் இதை பரப்பலாமா
என்று யோசித்தோம். பார்க்கும் வெளியூர் நண்பர்களிடம் இதைப்பற்றி பேசுவோம். ஆரம்ப முதலே சென்னை உள்பட சில ஊர்களில் இருந்து விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் அவர்கள் வருடா வருடம் வர முடியவில்லை. அவரவர் ஊரிலேயே நடக்க வேண்டும் என்று யோசித்தோம். முதல் கட்டமாக நெய்வேலியை பிரித்து அங்கேயே நடத்து முயன்றோம். அவர்கள் உறுதியாக கடலூருக்குத்தான் வருவோம் என்று சொல்லிவிட்டார்கள். வேலூரில் ஒரு வைதீகர் ஸ்ரீ க. அவருடைய பந்துக்கள் இங்கே கடலூரில் இருந்ததால் அவரை முன்னமேயே சந்தித்து இருந்தேன். அவரே இதைப்பற்றி ஒரு முறை பிரஸ்தாபித்தார். விவரங்கள் கேட்டுக்கொண்டு சிலரை அனுப்பலாமா என்றார். தாராளமாக என்றோம்.

5 பேர்களை தேர்ந்து எடுத்து அடுத்த ஹோமத்துக்கு அனுப்பி வைத்தார்.

அனைவரும் டாக்டர், ஆடிட்டர் போல நிலையில் இருப்போர். வந்தவர்கள் ஹோமம் செய்து மிகவும் மகிழ்ந்து போனார்கள். அவர்களிடம் "அடுத்த வருடம் உங்கள் ஊரிலேயே செய்கிறீர்களா?” என்றோம். "அவசியமாக!” என்று பதில் வந்தது.

கொஞ்சமும் காலம் தாழ்த்தாமல் அந்த வருஷமே துவக்கிவிட்டார்கள். ஆவணி மாதம் ஆரம்பித்து தை மாசியில் ஹோமம் செய்கிறார்கள். இந்த வருடம் மூன்றாவது முறை
ஜப யக்ஞ ஹோமம்.

பங்களூரில் ஒரு நண்பர் என் பையருக்கு. குடும்பத்தில் வேத சம்பந்தம் விட்டுப்போய் சில தலை முறைகள் ஆகிவிட்டாலும் இவருக்கு மட்டும் வேதத்தில் சிரத்தை ஏற்பட்டு முயன்று சில சூக்தங்கள், ருத்திரம், சமகம் போல சில பாடங்களை கற்று வந்தார். என் பையர் நெரூர் போக வேண்டி வந்தபோது தொலை தொடர்பு இல்லாததால் வழி காட்டுதலுக்கு என்னிடம் சொல்லிவிட்டு போனார்.

டாக்டர் என்று தெரிந்து கொண்ட நண்பர் ஸ்ரீ. ஹ. சில மருத்துவ பிரச்சினைகளையும் முன் வைத்தார். அவருடைய அம்மாவுக்கு மார்பக புற்று நோய் கண்டு மருந்து கதிர் மருத்துவங்களுக்கு பலனில்லாமல் அறுவை செய்து இருந்தார்கள். அதில் மீண்டும் புற்று வளர ஆரம்பித்துவிட்டது. டாக்டர்கள் ஜனவரி தாண்ட மாட்டார் என்று சொல்லிவிட்டார்கள். இதை அவர்கள் அம்மாவிடம் சொல்லவில்லை. பிப்ரவரியில் அவருடைய தம்பிக்கு திருமணம் ஏற்பாடு செய்ய முயற்சி நடந்து கொண்டு இருந்தது.  அதையாவது பார்த்துவிட்டு போகலாமே என்பது குடும்பத்தார் எண்ணம். மேலும் இவருக்கு குழந்தை பேறு இல்லாமல்
இருந்தது.

நான் சொன்னேன், "அப்பா! எங்கள் மருத்துவத்திலோ ஆகக்கூடியது எல்லாம் பார்த்து இருக்கிறீர்கள். இனி ஒன்றும் செய்வதற்கில்லை.”
ஏதாவது மந்திர ஜபம் செய்தால் பலிக்குமா?
யார் கண்டது பலித்தாலும் பலிக்கலாம். கர்மாவை பொறுத்து!
என்ன ஜபம் செய்யலாம்?
எனக்கு இருப்பது ஒன் பாய்ன்ட் ப்ரோக்கிராம். காயத்ரியை விட சிறந்த மந்திரம் இல்லை. பிராயச்சித்தம் இல்லை.
எவ்வளவு செய்ய வேண்டும்?
தினசரி ஆயிரம்?
யப்பா! அவ்வளவு எப்படி முடியும்?
சரி! நீங்கதானே கேட்டீங்க என்ன செய்யணும்ன்னு?
முடியுமா? நான் ஸாப்ட்வேர் எஞ்சினீர். நேரம் கிடைக்கிறது கஷ்டம்.
மனசு வைத்தால் நேரம் கிடைக்கும். முயற்சி பண்ணிவிட்டு அப்புறம் முடியும், முடியாதுன்னு தீர்மானம் செய்யலாமே?

சரி என்று அவரும் தன் ஜபத்தை ஆரம்பித்தார். கஷ்டமாக இருந்தாலும் முயற்சி தொடர்ந்தது. ஆனால் அதிகம் செய்ய ஒரு ஊக்கம் இல்லை.
அடுத்த முறை பேசியபோது "வேலூரில் ஜப யக்ஞம் துவங்குகிறார்கள். நீங்களும் சேர்ந்து கொள்ளுங்களேன்" என்றேன்.
ஸ்ரீ க. வின் தொலைபேசி எண்ணை அவருக்கு கொடுத்தேன்.
அடுத்த நாள் இரவு அழைப்பு வந்தது. ஸ்ரீ க விடம் தொலபேசி தொடர்பு கொண்டாராம். ஜப யக்ஞ விவரம் கேட்டுக்கொண்டார். "படிவம் அனுப்புகிறேன். கடைசி நாள் ஆகிவிட்டது, இருந்தாலும் பரவாயில்லை!” என்றார். ஸ்ரீ க.
முகவரி கேட்டு எழுதும் போது ஸ்ரீ கவின் பக்கத்தில் அதுவரை அவருடன் பேசிக்கொண்டு இருந்தவர் வியப்புடன் "அங்கேதானே என் வீடு!” என்றார்.
பார்த்தால் ஸ்ரீ ஹ. உடைய பக்கத்து வீட்டுக்காரர்! அவர் மூலமாகவே படிவம்
அனுப்பப்பட்டது.

ஒரு லட்சம் முடியவில்லை என்றாலும் கணிசமாக ஜபம் செய்தார். ஹோமத்திலும் கலந்து கொண்டார். நானும் அங்கே போயிருந்ததால் சந்திக்க முடிந்தது. இதற்குள் தம்பி கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது. பத்திரிகை கொடுத்தார்.
வேலை பளுவில் அவரை அப்புறம் மறந்தாயிற்று. சமீபத்தில் அவர் ஔபாசனம் ஆரம்பிக்க எண்ணி கேட்டுக்கொண்டதால் பையர் போய் ஆரம்பித்து வைத்துவிட்டு வந்தார். பையர் அங்கே இருக்கும்போது வேறு விஷயத்துக்காக தொடர்பு கொண்டேன். எதிரிலேயே ஸ்ரீ ஹ. இருந்ததால் பேசுகிறாயா என்றார்.
 பேசலாமே!
சுருக்கமாக,
தம்பி திருமணம் நன்றாக நடந்தது; அம்மா இன்னும் உயிருடன் இருக்கிறார். பிரச்சினை ஏதும் இல்லை. மனவி கர்ப்பமாக இருக்கிறார்!

அட இப்படித்தானே நடக்கும்!
பிகு: இதை எழுதிய பின் சமீபத்தில் அவரது அன்னை வேறு காரணங்களால் ஊருக்கு  போய்விட்டார்கள்.

3 comments:

Geetha Sambasivam said...

இது புதுசு! ம்ம்ம்ம்ம் நல்ல அனுபவங்கள். நல்லாவே இருக்கு எல்லாமும்.

vijayaragavan said...

Why there is no update sir?
Everyday (several times) I am getting disappointed.

Regards,
vijay S

திவாண்ணா said...

விஜய் மன்னிக்க. இன்று போட்டாச்சு. காரணமும் அதிலே சொல்லி இருக்கிறேன்.