Pages

Wednesday, November 25, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள் -13








கடைசியாக முன் சொன்னது போலவே ஒருவரது அனுபவம். இந்த கடிதம் போன வருடம் எங்களுக்கு வந்து சேர்ந்தது. கை எழுத்து இட்டு இருந்தாலும் யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை. இதை வெளியிடலாமா என்ற பலத்த யோசனைக்குப்பிறகு வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். ஏன் என்றால் இப்படிப்பட்ட வேலைகளில் இறங்க உத்தேசிப்போருக்கு விளைவுகள் இப்படியும் இருக்கும் என்று தெரியவேண்டும் என்பதே. இந்த மாதிரி நல்ல உள்ளங்களின் நற்சிந்தனைகள்தான் எங்களுக்கு தொடர்ந்து வேலை செய்ய உற்சாகத்தை தருகிறது.
இதன் படத்தை இங்கே பார்க்கலாம்.(தேடி அப்புறம் போடுகிறேன்) கீழே அதில் உள்ளதை (எ.பி உடன்) எழுத்து வடிவில் கொடுத்து இருக்கிறேன்.

கடலூர் 5/8/08
நமஸ்காரம்.
நான் தினமும் காயத்ரி ஜபம் செய்து வருகிறேன்.
தாங்கள் வேத பாடசாலை துவக்கி வேதம் சொல்லிககொடுப்பது வேதத்தை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்துவது அறிந்து தாங்கள் நீண்ட நாட்கள் எல்லா நன்மைகளும் பெற்று வாழ இறைவனிடம் தினமும் பிரார்த்திக்கிறேன்.

எனக்கு ஏற்கெனவே உள்ள கஷ்டத்தை விட தற்போது ஏற்பட்ட உச்சநிலை கஷ்டத்தை அனுபவிக்கும் போது ஏற்கெனவே ஜபம் செய்யாத போது நான் பட்ட மன உளச்சலை விட தற்சமயம் எந்த ஒரு கஷ்டமும் இல்லாதது போல் மனதில் முழு நிம்மதியுடன் இருப்பது கண்டு காயத்ரியை நினைப்பது அல்லாமல் தங்களையும் நினைத்துக்கொள்கிறேன். ஏற்கெனவே உள்ள 100% கோபதாபங்களில் தற்சமயம் 5% கூட கோபம் இல்லையே என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கஷ்டங்களிடையே மன 100% உளைச்சலை குறைத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பொருமையாக தீர்மானிக்கும் எண்ணத்தை அருளிய காயத்ரி தேவிக்கும் அந்த காயத்ரி தேவியை நித்தம் பூஜிக்க வழிகாட்டிய தங்களுக்கும் எனது கோடானு கோடி நமஸ்காரங்கம். தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ காயத்ரி தேவியை தினம் வேண்டுகிறேன்
அநேக நமஸ்காரம்.
(கையெழுத்து)

No comments: