Pages

Tuesday, November 15, 2011

என் மகன்...


ராபி ஆப்ரஹாம் ஆதர்ச வாழ்கை வாழ்ந்த உத்தமர். இந்த உலகை விட்டு போக வேண்டிய நேரம் வந்தபோது அவரது ஊரே திரண்டு வந்து வழி அனுப்பி வைத்தது. கடவுளிடம் இருந்த தாங்கள் பெற்ற அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் ஆப்ரஹாமே காரணம் என்பது அவர்கள் எண்ணம். அந்த அளவு நல்ல மதிப்பை அவர் பெற்றிருந்தார்.

 போன இடத்திலும் பலத்த வரவேற்பு! தேவதைகள் ஒன்றாக வந்து மலர் தூவி வரவேற்றன. இசை,ஆட்டம், பாட்டம்...
ஆனால் ஆப்ரஹாமோ கைகளை கட்டிக்கொண்டு சோகமாக அமர்ந்திருந்தார்.

தீர்ப்பு கூறும் நேரம் வந்தது. ஒரு இருக்கையில் அமர வைக்கப்பட்டார். உடனே எல்லையில்லா அன்பு அவரை சூழ்வதை உணர்ந்தார். மென்மையான அன்பான ஒரு குரல் அவருக்கு கேட்டது.
 மகனே, ஏன் வருந்துகிறாய்?
கடவுளே, இங்கு கிடைத்த வரவேற்புக்கு நான் அருகதை அற்றவன். நான் ஆதர்ச வாழ்கை வாழ்ந்ததாக சொல்கிறார்கள். ஆனால் நான் ஏதோ தப்பு செய்திருக்க வேண்டும். ஆதர்ச வாழ்கையை நான் வாழ்ந்து காட்டியும் என் மகன் என்னைவிட்டு பிரிந்து போய் தான் ஒரு கிறிஸ்துவன் என்று சொல்லிக்கொண்டான்.
கடவுள் சொன்னார், மகனே உன் வேதனை எனக்குப்புரிகிறது. எனக்கும் அப்படித்தான், ஒரு மகன் இருந்தான்.....

 

1 comment:

Geetha Sambasivam said...

யாரோ குழப்பம்னு சொல்லி இருக்காங்க. குழப்பம் இல்லை; கதையை மீண்டும் படிச்சால் புரியும்!