Pages

Monday, November 21, 2011

கதை


ஓம்!

அந்தோனி டி மெல்லோ! எவ்வளவு பேர் இந்த பெயரை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று யோசிக்கிறேன். அதிகம் இராது.

மும்பையில் 1931 இல் பிறந்த இவர் தான் எழுதிய புத்தகங்களால் பிரபலமானார். ஜெசூய்ட் பாதிரியாராக பணியாற்றினார். கிறிஸ்துவ பாதிரியார் என்றாலும் இவர் உண்மையான ஆன்மீகத்தை தேடியவர். அதனால் கத்தோலிக கட்டுப்பாடுகளை இவர் மீறினார். கிறிஸ்துவ வட்டாரங்களில் சர்ச்சைக்கு உரியவராகவே விளங்கினார். இவரது விமர்சனங்கள், எழுத்துக்களுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை என்று கத்தோலிகர்கள் விலக வேண்டி இருந்தது. இதற்கு காரணம் இவர் ஒரு தாய்லாந்து புத்த துறவியால் ஈர்க்கப்பட்டு அவருடைய உபதேசங்களை கேட்டதுதான்.

இவரது உரைகளைப் போலவே இவரது எழுத்துக்களும் மிகப்பிரபலம். ஒரு காலகட்டத்தில் யாரைப்பார்த்தாலும் ஒரு குட்டிக்கதை கேட்பார்; அல்லது சொல்லுவார். கேட்பவர் பல சமயம் சிரித்துவிட்டு போவர். ஆனால் யோசித்தால் அதில் சில ஆழமான கருத்துக்கள் இருக்கும். அவை சாதாரணமாக நாம் ஆன்மீகம் என்று நினைப்பதை தாண்டியவை. ஆன்மீகத்தில் பல நிலைகள் இருப்பதால் சில நிலைகளில் இருப்பவருக்கு அவை உவப்பாக இல்லாமல் போகலாம். அங்கேதான் இவருடைய சாமர்த்தியத்தை காண்கிறேன். குட்டிக்கதை - பெரும்பாலும் சிரிக்க வைக்கக்கூடியவை - கதையாகவும் பார்க்கலாம் அல்லது யோசிப்பவர்க்கு தீனியாகவும் இருக்கலாம்.

இவரது கதைகள் பற்றி இவரே சொல்வதை படியுங்கள்! “எப்படி படிப்பது? மூன்று வழிகள் உள்ளன.
முதலாவது ஒரு கதையை படியுங்கள். அப்புறம் அடுத்த கதையை படியுங்கள். நன்றாக பொழுது போகும்!
இரண்டாவது ஒருகதையை இருமுறை படியுங்கள். அதை அசை போடுங்கள். வாழ்கையில் பொருத்துங்கள். இறையியல் விளங்கும். பலருடன் சேர்ந்து யோசித்தால் சத்சங்கம் கிடைக்கலாம்.
மூன்றாவது கதையைப்பற்றி அசை போட்ட பின் மீண்டும் படியுங்கள். உள்ளே ஒரு அமைதியை கொண்டு வாருங்கள். கதை உள்ளே நிறையட்டும். வார்த்தைகள், நினைப்புகளை தாண்டி.... அதை நாள் முழுவதும் உணருங்கள். மறை பொருள் தெரிய வரலாம். அது உங்கள் இதயத்தோடு பேசட்டும், உங்கள் புத்தியுடன் அல்ல. இதற்குத்தான் இந்த கதைகள் எழுதப்பட்டன....

உதாரணத்துக்கு கடைசியாக இட்ட கதையை பார்க்கலாம்.  ஆமாம், சமீப காலமாக இந்த பதிவுகளில் எழுதிவரும் பலகதைகள் இவருடையதை தழுவி எழுதியதே! சிலது அப்படியே, சிலது சின்ன மாற்றங்களுடன்..... கதையை இரண்டாம் முறை படித்தோர் என்ன தோன்றுகிறது என்று எழுதுங்கள். (பெரிய ஆன்மீக கருத்து என்றில்லை. வித்தியாசமாக மேற்போக்கான கதையை தாண்டியதாக இருந்தாலே போதும். .)

எனக்குத்தோன்றியதை சில நாட்களில் எழுதுகிறேன். வணக்கம்.

6 comments:

yrskbalu said...

we can get lot good stories by ramakrishna pramasar.

that stories better than you mentioned writer.

you can catchup zen , tatse , kabir,even kalidasan.

you mentioned writer stories not at all matched and so childish.

Maybe his level of expression.

yrskbalu said...

ji-

you discontiued panchadasi ?

yrskbalu said...

others readers
--

such a wonderful writer still writing small stories . are you accept this ?

pl comment. i want know others opinion.

for me - he is wasting god gift./

திவாண்ணா said...

பாலு சார், பஞ்ச தசியும், கதைகளும் இனி மாறி மாறி வெளி வரும்!

Geetha Sambasivam said...

கேள்விப்பட்டதில்லை. ஆனால் இந்தக் கதைகள் சில படித்துள்ளேன். ஜென் கதைகள் என நினைத்திருந்தேன்.

Geetha Sambasivam said...

pl comment. i want know others opinion.

for me - he is wasting god gift./

இதுவும் ஒருவகை இறைப்பணியே. என் போன்ற சிலருக்கு இதன் மூலம் ஆன்மீகத்தின் அருகிலே சென்று வேடிக்கை பார்க்கவாவது இயலும்.