Pages

Friday, March 24, 2017

கிறுக்கல்கள் -183




பிரசங்கி வித்தியாசமான மனிதர். சிரிக்கவே மாட்டார். துறவு வாழ்க்கையை கடைபிடிப்பதில் இம்மியும் தவற மாட்டார். தன்னை வருத்திக்கொள்வதில் நம்பிக்கை இருந்தது. அடிக்கடி உண்ணா நோம்பு இருப்பார். கடும் குளிர் காலத்தில் மிகக்குறைந்த உடைகளை மட்டுமே அணிவார்.

ஒரு நாள் மாஸ்டரை அணுகி தன் வலியை சொன்னார். என் மதத்தில் சொல்லியபடி எத்தனையோ விஷயங்களை கடைபிடித்துவிட்டேன். பலதையும் துறந்து வாழ்கிறேன். ஆனாலும் ஏதோ ஒன்று என்னிடம் இல்லாமல் இருக்கிறது. அதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை! உங்களால் முடிகிறதா?


வறண்டு இறுகிப்போன அவரை மாஸ்டர் நேரடியா பார்த்துக்கொண்டு சொன்னார். “ஆமாம். ஆன்மாவைக்காணவில்லை!”

No comments: