Pages

Monday, March 27, 2017

கிறுக்கல்கள் -185




எங்களுக்கு இன்றைக்கு ஹாப்பி கிறிஸ்துமஸ் என்று வாழ்த்து சொல்வீர்களா”? என்று ஒரு கிறிஸ்துவர் கேட்டார்.
மாஸ்டர் நாட்காட்டியை பார்த்தார். இன்னைக்கு வியாழக்கிழமையா? ம்ம்ம்… உங்களுக்கு ஹாப்பி வியாழக்கிழமை என்று வாழ்த்து சொல்லலாம் என்று தோணுகிறது!

மடாலயத்தில் இருந்த கிறிஸ்துவர்களுக்கு இது எரிச்சலை மூட்டியது.


அதை உணர்ந்த மாஸ்டர் சொன்னார்: முக்காலே மூணு வீசம் பேர் கிறிஸ்துமஸுக்கு சந்தோஷமாக இருப்பார்கள்; அதனால் அவர்களுடைய சந்தோஷம் ஒரு நாள்தான் நீடிக்கும். ஆனால் எப்பவும் இன்றைக்கு சந்தோஷமாக இருப்போமே என்று நினைக்கலாமே! அப்படி இருந்துவிட்டால் எல்லா நாளும் கிறிஸ்துமஸ்தானே?

No comments: