Pages

Wednesday, October 25, 2017

கிறுக்கல்கள் -163




ஒரு நாள் ஒரு சீடர் மாஸ்டரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். நீங்கள் புனிதர் ஆகிவிட்டீர்களா?

மாஸ்டர் சொன்னார், எனக்கு எப்படித்தெரியும்?

உங்களுக்கே தெரியாது என்றால் யாருக்குத்தான் தெரியும்?

மாஸ்டர் சொன்னார்: சாதாரணமாக இருக்கும் ஒருவரிடம் போய் நீ சாதாரணமாக இருக்கிறாயா என்று கேள்; ஆமாம், சாதாரணமாக இருக்கிறேன் என்பார். அப்படியே பைத்தியக்காரர் ஒருவரிடம் போய் கேள். அவரும் ஆமாம், சாதாரணமாக இருக்கிறேன் என்பார்!

குறும்பு சிரிப்புடன் தொடர்ந்தார்: நீ பைத்தியம் என்று உனக்குத்தேரிந்தால் நீ அவ்வளவு ஒன்றும் பைத்தியம் இல்லை அல்லவா? அதே போல நீ புனிதனா என்று யோசிக்க வேண்டுமானால் நீ அவ்வளவு புனிதன் இல்லை சரியா? புனிதத்துவம் எப்போதும் அகங்காரம் போவதில் இருக்கிறது.

No comments: