Pages

Thursday, October 26, 2017

கிறுக்கல்கள் -164





சீடர் ஒருவரிடம் புதிதாக வந்த ஒருவர் கேட்டார் "எனக்கு மாஸ்டர் புனிதமாகிவிட்டாரா என்று இப்போதே தெரிய வேண்டும்.

சீடர் கேட்டார் "எதற்கு? அதனால் என்ன ஆகப்போகிறது?”

அவரே புனிதத்தை அடையவில்லை என்றால் நான் ஏன் அவரை பின் பற்ற வேண்டும்?”

அவர் புனிதராகி இருந்தால் மட்டும் ஏன் நீங்கள் அவரை பின் பற்ற வேண்டும்? அவர் அடிக்கடி சொல்லுவார் 'நீ என்றைக்கு ஒருவரை பின் பற்ற ஆரம்பிக்கிறாயோ அன்றே உண்மையை பின் பற்றுவதை நிறுத்திவிட்டாய்!”

சற்று நேரம் கழித்து சொன்னார்: “பாபிகளும் சமயத்தில் உண்மை பேசுகின்றனர். புனிதர்களும் சமயத்தில் மக்களை திசை திருப்பி விடுகின்றனர். என்ன சொல்லுகிறார்கள் என்பதை கவனி. சொல்லுபவரை அல்ல!”

No comments: