Pages

Monday, May 9, 2022

ஶ்ராத்தம் - 50 தீர்த்த ஶ்ராத்தம் - 2




கங்கையில் பித்ருக்கள் நித்யவாசம் செய்வதால் வர்க த்வய பித்ரூன் இதம் ஆசனம் என்று ஆரம்பிக்கவும். த்யாயாமி ஆவாஹயாமி என்று ஆவாஹனம் இல்லை.

வர்கத்வய பித்ருக்களுக்கு முடிந்த பின் நான்காவது செட் தர்ப்பைகளில் காருண்ய பித்ருக்கள் ஆவாஹனம். ஐந்தாவதில் க்ஷேத்ர பிண்டங்களுக்கு

அஸ்மத் குலே ம்ருதா யே ச கதிர் யேஷாம் ந வித்யதே ஆவாஹயிஷ்யே தான் ஸர்வான் இதமஸ்து திலோதகம்

என்று எள்ளும் நீரும் நெடுக்க இறைக்க வேண்டும்பொருள்: என் குடும்பத்தில் யார் மறைந்து விட்டார்களோ எந்த பித்ருக்களுக்கு கதி இல்லையோ அவர்களை இங்கு ஆவாஹனம் செய்து  இங்கே எள்ளும் நீரும் அளிக்கிறேன்.

ஆ ப்ரம்ஹணோ யே பித்ரு வம்ஸ ஜாதாமாதுஸ்ததா வம்ஸ பவா: நதீயா: வம்ஸ த்வயே அஸ்மின் மம தாஸ பூதா: ப்ருத்யா: ததைவ ஆஸ்ரித சேவகாஶ்ஶ மித்ராணி ஸக்ய: பஶவஶ்ஶ வ்ருக்‌ஷா: ஸ்ப்ருஷ்டாஶ்ஶ த்ருஷ்டாஶ்ஶ க்ருதோபகாரா: ஜன்மாந்தரே யே மம ஸங்கதாஶ்ஶ தேப்யஸ்ஸ்வதா பிண்டமஹம் ததாமி|


- ‘என் தந்தை வழி வந்தவரோ என் தாய் வழி வந்தவரோ  எனக்கு தாஸர்களாக இருப்பவரோ வேலைக்காரர்களோ நண்பர்களோ சக்யர்களோ பசுக்களோ விருக்ஷ வர்கமோ (மரங்களோதொட்டவர்களோ பார்த்தவர்களோ ஹிதம், உபகாரம் செய்தவர்களோ இன்னொரு ஜன்மாவில் எனக்கும் யாருக்கும் தொடர்பு இருந்ததோ அவர்களுக்கும்’ என்று இவ்வளவு பேருக்கு இங்கே பிண்டம் இருக்கிறது.

 
 

பித்ரு வம்ஸே ம்ருதாயேச மாத்ரு வம்ஸே ததைவச குரு ஸ்வஶுர பந்தூனாம் யே சான்யே பாந்தவா: ம்ருதா: யே மே குலே லுப்த பிண்டா: புத்ர தார விவர்ஜிதா: க்ரியாலோப ததாஸ்சைவ ஜாத்யந்தா: பங்கவஸ்ததா விரூபா: ஆமகர்பாஶ்ஶ க்ஞாதாக்ஞாதா: குலே மம தேஷாம் பிண்ட: மயா தத்தஅக்‌ஷய்யம் உபதிஷ்டது.

அடுத்து என் தந்தை வழி வந்தவரோ என் தாய் வழி வந்தவரோ குருவோ மாமனாரோ பந்துக்களோ என் குடும்பத்தில் எந்த பித்ருக்களுக்கு கர்மா இல்லாமல் இருக்கிறதோ புத்திரன் பத்னி இல்லாமல் இறந்தார்களோ யாருக்கு செய்ய வேண்டிய கர்மா செய்யப்படவில்லையோ பிறவியிலிருந்தே கண் தெரியாதவர்களோ கால் ஊனமானவர்களோ ரூபமே அடையாமல் தெரிந்தோ தெரியாமலோ இயற்கையாகவோ செயற்கையாகவோ நடந்த கர்ப ஸ்ராவம் என்னும் கலைந்த கர்ப்பத்தில் நழுவியர்களோ  அவர்களுக்கு தர்ம பிண்டம் தருகிறேன்; அழிவில்லாத த்ருப்தி உண்டாகட்டும்

 

அஸி பத்ர வனே கோரே கும்பீ பாகேச யே (ஸ்திதா:) கதா: தேஷாம் உத்தரண அர்த்தாய இமம் பிண்டம் ததாம்யஹம்

- அஸி பத்திரம் என்னும் நரகம் (இலைகள் கத்தி போல் இருக்கும்; அதன் வழியாக போகும் போது கோரமாக கிழிக்கும். சந்தியாவந்தனம் செய்யாதவர்கள் இதில் மாட்டிக்கொள்வர் என்கிறார்கள்)  

கும்பி பாகம் என்னும் நரகம் (அதிதிகளுக்கோ மற்றவருக்கோ அன்னமிடாமல் தான் மட்டும் சாப்பிடுபவர்கள் போகுமிடம்) தந்தை தாய் வேதாத்யயனம் செய்வோர்களை / குருவை நிந்திப்பவர்கள், 1000 மைல் விஸ்தீரண தாமிர தட்டு மேல் போக வேண்டும்; மேலே சூரியன் தஹிப்பார். பசு மாட்டின் மீதுள்ள ரோமங்களின் எண்ணிக்கை அளவு வருடங்களில் இதில் உழல வேண்டும்

இந்த கும்பி பாகத்தில் உழல்வோருக்கு காப்பாற்ற இந்த பிண்டம்.


யே கே ச ப்ரேத ரூபேன வர்த்தந்தே பிதரோ மம தே ஸர்வே த்ருப்தி மாயாந்து குச ப்ருஷ்டை: திலோதகை:. 

ப்ரேத ரூபமாக இருக்கும் பித்ருக்களுக்கு த்ருப்தி  என தர்ப்பத்தின் அடிபாகத்தை கீழே பிடித்துக் கொண்டு தர்ப்பணம்.

 ஆ ப்ரம்ஹ ஸ்தம்ப பர்யந்தம் யத்கிஞ்சித் சராசரம் மயா தத்தேன தோயேன த்ருப்திமேவ அபி கச்சது

ப்ரம்மம் முதல் புழு வரை எல்லாருக்கும் அசையும் அசையா எல்லாவற்றுக்கும் நான் கொடுக்கும் நீரால் த்ருப்தி உண்டாகட்டும்.. 

உத்ஸ்ஸன்ன குல கோடீனாம் யேஷாம் தாதா குலே மயி?? தர்ம பிண்ட: மயா தத்த: அக்‌ஷய்யம் உபதிஷ்டது

நான்காவது பிண்டம் தர்ம பிண்டம் – பிண்டம் கிடைக்காது தவிக்கும் மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் இடப்படுகிறது.

No comments: