Pages

Wednesday, February 17, 2010

விசார சங்கிரஹம் - 17




26.ப்ராண பந்தனம் மனோலயத்திற்கு மாத்திரம் சாதன மாகிறதே யன்றி மனோலயத்திற்கு சாதன மாகாமையான் மனோநாசத்திலேயே தாத்பரியமுடைய விசாரத்திற்கு இது சாதனமா வதெப்படி?
ஆன்ம சாக்ஷாத்காரம் சித்தித்தற்குரிய சாதனங்களை அஷ்டாங்க யோகம் அஷ்டாங்க ஞானமென இரு பிரிவுகளாகச் சுருதிகறிற் கூறியுள்ள படியால் அந்த யோகாஷ்டாங்களி லொன்றாகிய ப்ராணாயாமத்தினாலாவது அல்லது கேவல கும்பகத்தினாலாவது பந்தப்பட்ட மனதை அதோடு விட்டுவிடாமல் மேற்சாதனங்காகிய ப்ரத்யாகார முதலியவற்றில் கிரமமாக பழகி வரின் முடிவில் விசார பல ரூப சொரூப சாக்ஷாத்காரம் பெறுதல் திண்ணம்.

ப்ராணனை ஒடுக்கினா மனசு ஒடுங்குமே தவிர நாசமாகாது இல்லையா? அப்போ நமக்கு மனோநாசத்திற்கு எப்படி அது சாதனமாகும்?

சரிதான். வேதங்களிலே என்ன சொல்லி இருக்குன்னா ஆன்ம சாக்ஷாத்காரம் சித்திக்க உரிய சாதனங்கள் அஷ்டாங்க யோகம், அஷ்டாங்க ஞானம்னு இரண்டு பிரிவுகள். இதில அஷ்டாங்க யோகத்தில ஒண்ணு ப்ராணாயாமம். இதாலேயோ அல்லது கேவல கும்பகத்தாலேயோ அது மனோநாசத்திற்கு நேரடியா சாதனமாகாது. ஒரு பிடிப்புக்கு வந்த மனசை அப்படியே விடாம அதுக்கும் மேலே ப்ரத்யாகாரம் முதலானவற்றில முறையா பழகி வரணும். அப்படி செய்தா விசாரணையோட பலனா சொரூப சாக்ஷாத்காரம் அடைவது நிச்சயம்.


No comments: