Pages

Friday, June 10, 2011

காயத்ரி-2



8. ஜபமாலை சமாசாரம் என்ன?
ஜபமாலையும் பயன்படுத்தலாம். அதற்கு அதிக பலன் உண்டு. ருத்திராக்ஷம், ஸ்படிகம், துளசி, மணி, போன்றவற்றை மாலையாக உபயோகிக்கலாம். இவை 108, 54, 27 என்ற எண்ணிக்கையில் கட்டப்படும்.

9. பின்னே ஏன் ஜபமாலையை எல்லோரும் பயன்படுத்தச்சொல்லலை?
ஏதாவது கூடுதல் சக்தி உண்டு என்றால் அதற்கான சட்ட திட்டமும் அதிகமாக இருக்கும். ஜபமாலை பயன்படுத்தினால் அதிக பலன் என்றால் அதற்கு கூடுதலாக கட்டுப்பாடுகள் உண்டு. ஜபத்தின் போது மாலை அசங்கக்கூடாது. மாலையில் கோர்த்த மணிகளுக்கு தலைபாகம் கீழ் பாகம் என்று உண்டு. தலை தலைபாகத்தை தொட்டுக்கொண்டும் கீழ் பாகம் கீழ் பாகத்தை தொட்டுக்கொண்டும் மாலை கோர்க்க வேண்டும். இதிலும் மேரு உண்டு. அது தனியாக கோர்த்திருக்கும். அந்த இடம் வந்த பிறகு தாண்டக்கூடாது. ஆள் காட்டிவிரல் படாமல் மாலையை தன்னை நோக்கியே உருட்ட வேண்டும். மாலை தொப்புளுக்கு கீழ் இறங்கக்கூடாது.

10. சரி சரி, நான் விரல்லியே எண்ணிக்கறேன்.
ஆமாம், அதுவே எளிது, நல்லது, ரிஷிகள் பரிந்துரைத்ததும் அதுவே.

11. அக்ஷர மாலைன்னு சொன்னீங்களே அது என்ன?
ஸக்ஸ்க்ருதத்தில் உள்ள எழுத்துக்கள் அ முதல் ஹ வரை 54. ஒவ்வொரு மந்திரத்துக்கும் அம் முதல் ஹம் வரை ஒவ்வொரு எழுத்தும் சொல்லி 54 ஆ கணக்கு வெச்சுக்கலாம். அதையே திருப்பி ஹம் முதல் அம் வரை இன்னொரு 54 செய்ய மொத்தம் 108. இதுக்கு நல்ல நினைவாற்றல் வேணும்.

12. நின்னு கொண்டு செய்யணுமா? சிலர் அப்படி சொல்லறாங்களே?
ஆமாம். காலையும் மதியமும் நின்று கொண்டும் மாலையில் உட்கார்ந்து கொண்டும் செய்யணும். உட்காரும்போது எந்த வித ஆசனம் போட்டு உட்காரணும்ன்னு முன்னேயே சொல்லியிருக்கோம். எப்படியும் முதுகுத்தண்டு வளையாம இருக்கணும்.

13. நல்லதுதான், அப்பதான் தூக்கம் வராம இருக்கும். சரி உட்கார்ந்து கொண்டு செய்யறது?
மாலையிலும் ஸஹஸ்ர காயத்ரி மாதிரி அதிக ஜபம் செய்யவும் உட்கார்ந்து செய்யலாம். நாம் வழக்கமா உட்காருகிறது போலவே உட்கார்ந்து செய்யலாம்.

14. பூணூலை பிடிச்சு கொண்டுதானே செய்யணும்?
இல்லை. அது தப்பு. எண்ணுகிற கைகளுக்கு மேலே துணியால மூடிகிட்டு செய்யணும். பூணூலை பிடிச்சுக்க கூடாது.
பின்ன பலர் செய்யறாங்களே?
மேல் துணி போட்டுக்கற பழக்கம் இல்லாததாலேயும், மூன்றாவது பூணூல் த்ருதீய வஸ்தரம்ன்னு சொல்கிறதாலேயும் துணியை போட்டு மூடாமல் பூணூலால மூடிக்கற மாதிரி இது வந்து இருக்கலாம்.

3 comments:

எல் கே said...

சில விஷயங்கள் இப்பதான் தெரிஞ்சது

திவாண்ணா said...

:-))

R.DEVARAJAN said...

பல விஷயங்கள் தெளிவாகின்றன
நன்றி

தேவ்