Pages

Thursday, June 9, 2011

இப்படித்தான் இருக்க வேண்டும்....



ஒருவன் ஒரு மாஸ்டரைத்தேடி சென்று கொண்டு இருந்தான். இதைப்பார்த்த சாத்தான் எப்படியாவது அவனை மனமாற்றம் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டான்.

பொன், பொருள், புகழ் என்ன ஆசை காட்டியும் ஆசாமி அசைந்து கொடுக்கவில்லை. மனத்திண்மை அவ்வளவு இருந்தது. தோல்வியை ஒப்புக்கொண்ட சாத்தான் என்னதான் நடக்கிறது என்று காண அவனை பின் தொடர்ந்தான்.

அவன் குரு முன்னிலையில் போய் சேர்ந்தான். என்ன இது? பெரிசா சிம்மாசனம் போட்டுக்கொண்டு நிறைய பக்தர்கள் காலடியில.... ம்ம்ம்.. அடக்கம் போறலை. ம்ம்ம்ம்ம் என்னைக்கண்டுக்கக்கூட இல்லை..... உண்மையான ஆன்மீக தாகம் இருக்கிற நபரை அடையாளம் காணக்கூட தெரியலை...... நான் மத்தவங்களைப்போல அவரை போற்றி புகழலைன்னு உதாசீனம் செய்யராரோ..... இவருக்கு பட்டு பீதாம்பரம் வேற எதுக்கு?... அப்புறம் அந்த பேச்சில ஒரு அலட்சியம்.... ம்ஹூம் இவர் உண்மையான குரு இல்லை. வேறு இடம் பார்க்கலாம் என்று அவன் வெளியே சென்றான்.
மாஸ்டர் அறையின் மூலையில் இருந்த சாத்தானைப்பார்த்து சொன்னார், “ நீ கலங்கி இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவன் ஆரம்பத்தில் இருந்து உன்னவன்தான்!”

கடவுள் இப்படித்தான் இருப்பார், இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தவர்கள் கதியும் இதுதான்!

4 comments:

Maheshwaran Ganapati said...

Hi Diva
This short sweet story is just superb
regards
Mahesh

திவாண்ணா said...

மஹேஸ்வரன், நல்வரவு! நன்றி!

Geetha Sambasivam said...

உண்மைதான். சாத்தான் எங்கும் இல்லை, நம்முள்ளேயே இருக்கிறான். :(((((

Geetha Sambasivam said...

மிச்சம் அப்புறமா! :D