Pages

Tuesday, June 21, 2011

கோரிக்கை



அயர்லாந்தில் பெல்பாஸ்டில் மூன்று பேர்களுக்கிடையே காரசார ஆன்மீக விவாதம். ஒருவர் கத்தோலிக்க பாதிரி; ஒருவர் ப்ராடெஸ்டென்ட் மினிஸ்டர்; மூன்றாவது ஒரு யூத ராபி. கிட்டத்தட்ட அடி தடியில் இறங்கும் நிலமை.
திடீரென்று அவர்களிடையே ஒரு தேவதை தோன்றியது, "உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். நாட்டில் அமைதி நிலவ ஆளுக்கொரு வரம் கேளுங்கள். ஆண்டவன் அதை கொடுப்பார்.”
கத்தோலிக்கர் சொன்னார் , “எங்கள் அழகிய அயர்லாந்தில் இருந்து எல்லா ப்ராடெஸ்டென்ட்களும் காணாமல் போகட்டும். அப்போது அமைதி நிலவும்.”
கோபமான ப்ராடெஸ்டென்ட் முழங்கினார், "எங்கள் புனித அயர்லாந்தில் இருந்து எல்லா கத்தோலிக்கர்களும் வெளியேறட்டும். அப்போது அமைதி திரும்பும்.”

"உங்களுக்கு?” என்று ராபியை பார்த்து கேட்டது தேவதை.
"எனக்கு ஒன்றும் வேண்டாம். இவங்களோட கோரிக்கைகளை நிறைவேத்துங்க. அது போதும்.”