Pages

Thursday, August 27, 2015

கிறுக்கல்கள்! - 10


ஞானோதயம் பெற என்ன செய்ய வேண்டும் என்று ஒரு சீடன் கேட்டான்.

குரு சொன்னார்: தண்ணீரில் விழுந்தும் அலைகளை உண்டாக்காதது எதுவோ; மரங்களினூடே பரவியும் சத்தம் எழுப்பாதது எதுவோ வயலில் நுழைந்தும் ஒரு இலையையும் அசைக்காதது எதுவோ, அதை கண்டுக்கொள்.

பல வாரங்கள் இது பற்றி யோசித்தும் ஒன்றும் புரியாத சீடன் கேட்டான், குருவே, அந்த பொருள் என்னது?
பொருளா? அது ஒரு பொருளே இல்லையே!

அப்ப அது எதுவுமில்லையா?
ம்ம்ம் அப்படியும் சொல்லலாம்.

அப்படியானால் அதை எப்படி தேடுவது?
தேடுவதா? நான் அதை தேடவா சொன்னேன்? அதை கண்டு கொள்ளலாம்; ஆனால் தேடினால் கிடைக்காது!

No comments: