Pages

Wednesday, August 26, 2015

கிறுக்கல்கள்! - 9


குரு பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார். அவரது சிஷ்யை ஒருவரின் தந்தை பயங்கர கோபத்துடன் கூடத்துக்குள் நுழைந்தார். யாரையும் பொருட்படுத்தாமல் மகளைப்பார்த்து இரைந்தார். “ கல்லூரியை விட்டுவிட்டு இங்கே இவர் காலடியில் கிடக்கிறாயே! இவர் என்ன சொல்லிக்கொடுத்தார் உனக்கு?”

மகள் அமைதியாக எழுந்தார். தந்தையை வெளியே அழைத்துப்போனார்.

இங்கே இருப்பதில் நான் எந்த கல்லூரியிலும் சொல்லிக்கொடுக்காததை கற்றுக்கொண்டேன். உங்களை பார்த்து பயப்படாமல் இருக்கவும்; உங்கள் மரியாதைக்கேடான நடத்தையால் வெட்கப்படாமல் இருக்கவும்!”

No comments: