Pages

Thursday, August 20, 2015

கிறுக்கல்கள்! - 6


மாஸ்டர் வீட்டில் விருந்து நடைபெற்றது. முடிந்த பிறகு விருந்தினர் ஒருவர் சமையல் பாத்திரங்களை எல்லாம் தான் கழுவி வைப்பதாகச் சொன்னார்.

மாஸ்டர் கேட்டார்: அது உனக்கு தெரியுமா?

நான் நினைவு தெரிஞ்சது முதல் இதை செய்து கொண்டு இருக்கேன்.
ம்ம்ம்…. பாத்திரத்தை எல்லாம் சுத்தம் செய்து விடுவாய், தெரியும்; ஆனால் கழுவி வைக்க முடியுமா?

பின்னால் ஒரு நேரம் அவருடைய சீடர்கள் இது பற்றி கேட்ட போதுவிளக்கம்கொடுத்தார். பாத்திரங்களை கழுவி வைக்க இரண்டு வழிகள் இருக்கு. ஒண்ணு அதை எல்லாம் சுத்தம் செய்யறத்துக்காக கழுவுவது. இன்னொன்னு கழுவுவதற்காக கழுவுவது.

அப்போதும் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.


மேலும் சொன்னார்: முதல் செயல் இறந்து போன ஒன்று. ஏன் என்றால் உடம்பு கழுவுகிறது; மனதோ சுத்தம் செய்வதில் இருக்கிறது. இரண்டாவது உயிர்ப்புள்ளது. மனதும் உடம்பும் ஒரே செயலில் ஈடுபட்டு இருக்கிறது.

No comments: