Pages

Tuesday, February 5, 2019

பறவையின் கீதம் - 107





நசருதீன் அப்போதுதான் தன் சொற்பொழிவை முடித்திருந்தார். கூட்டத்தில் ஒருவன் எழுந்து "ஐயா, நிறைய தத்துவம் பேசறீங்க! எங்களுக்கு ஏன் ப்ராக்டிகலா ஏதாவது காட்டக்கூடாது?” என்று கேட்டான்.

நசருதீன் திகைத்துப்போனார். “ப்ராக்டிகலான்னா என்ன மாதிரி காட்டச்சொல்லறிங்க?”

ஆஹா! இவரை மாட்டிவிட்டுட்டோம், மக்கள் நம்மையே பாக்கறாங்க பாரு என்ற பெருமிதத்தில் அவன் சொன்னான்: "உதாரணமா சொர்கத்து தோட்டத்திலேந்து ஒரு ஆப்பிளை காட்டுங்களேன்!”

நசருதீன் உடனே பக்கத்தில் இருந்த ஒரு கூடையில் இருந்து ஒரு ஆப்பிளை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

ஆனா இந்த ஆப்பிள் ஒரு பக்கம் அழுகி போயிருக்கே? நிச்சயமா சொர்க லோகத்து ஆப்பிள்ன்னா அப்பழுக்கு இல்லம தானே இருக்கும்?”

ஆமா. சொர்கத்து ஆப்பிள் அப்படித்தான் அப்பழுக்கு இல்லாம இருக்கும். ஆனா உன் லெவலுக்கு இதுவே அதிகம்!”

ஊனக்கண்ணால் அப்பழுக்கு இல்லாத ஆப்பிளை பார்க்க முடியுமா?
அல்லது தன்னலம் மிக்க மனதிருக்கும்போது மற்றவரிடம் நல்லதை பார்க்க முடியுமா?

No comments: