Pages

Friday, February 1, 2019

பறவையின் கீதம் - 105






அவன் எல்லாரையும்விட வித்தியாசமானவனாக இருந்தான். அவனுடன் பழகுவதே மிகக்கடினம். எல்லாவற்றையும் கேள்வி கேட்பான். இவன் புரட்சியாளனா இறைதுதனா, பைத்தியமா ஹீரோவா? “யார் சொல்ல முடியும்?” என்றோம்.”அத்துடன் யாருக்கு அதைப்பற்றி கவலை?”
ஆகவே நாங்கள் அவனுடன் பழகினோம். எப்படி பொதுமக்களின் மற்றவர்களின் கருத்துக்கு உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று சொன்னோம். அவனை அதன்படி நடந்து கொள்ல வைத்தோம். இப்போது அவன் கூட வாழ்வதற்கு ஏற்றவனாகிவிட்டான். நன்றாக ஒத்திசைந்து கொண்டு. கட்டுப்படுத்த முடிபவனாகவும் அமைஹியாகவும் ஆக்கிவிடோம்.
தன்னைத்தானே வென்றதற்கு நாங்கள் அவனுக்கு வாழ்த்து சொன்னோம். அவனும் தன்னைத்தானே வாழ்த்திக்கொண்டான். அவனுக்கு புரியவில்லை நாங்கள்தான் அவனை ஜெயித்தோம் என்று.
---
ஒரு ராட்சச மனிதன் மதுவகத்தில் நுழைந்தான். “யாரடா இங்கே மர்ஃபி?”
ஒரு சின்ன மனிதன் எழுந்தான். “நான்தான்". வந்தவன் இவனை அடித்து துவைத்துப்போட்டுவிட்டு கோபத்துடன் போய்விட்டான். சில எலும்புகள் உடைந்தன. கண்கள் கருரத்தம் தோய்ந்து வீங்கிவிட்டன. மூக்கு உடைபட்டது.
வந்தவன் போன பிற்கு இவனோ சிரித்துக்கொண்டு இருந்தான். எங்களூக்கு புரியவே இல்லை. வலியுடன் சிரித்துக்கொண்டே சொன்னான்.” நான் அவனை ஏமாற்றி விட்டேன் நான் மர்பி இல்லை. ஹாஹாஹ்ஹா!”

No comments: