Pages

Wednesday, February 13, 2019

பறவையின் கீதம் - 112





ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார்?
சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்"
ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். நீ இதை எந்த மனிதனிடமும் கேட்கவில்லை. என் தந்தையே இதை உனக்குச்சொன்னார்!”
வாழ்க்கையிலிருந்து ஒரு உரையாடல்:
ஜீசஸ்: நீ சொல். நான் யார்?
கிறிஸ்துவன்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்"
ஜீசஸ்: "சரிதான். ஆனால் நீ இதை ஒரு மனிதன் வாயிலாக கேட்டது துரதிருஷ்டம். என் தந்தை இதை உனக்குச்சொல்லவில்லை!”
கிறிஸ்துவன்: "உண்மைதான். நான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன். உங்கள் தந்தை இதை என்னிடம் சொல்லுவதற்கு முன் யாரோ இந்த விடைகளை எல்லாம் எனக்கு சொல்லிவிட்டார்கள். சைமனிடம் உங்கள் தந்தை இதை சொல்லும் வரை நீங்கள் சைமனிடம் இந்த கேள்வியை கேட்கவில்லை. உங்கள் சாமர்த்தியத்தை கண்டு வியக்கிறேன்!”

No comments: