Pages

Monday, February 4, 2019

பறவையின் கீதம் - 106





மத போதனை செய்வோருக்கு ஒரு கதை.

வேலியில் ஒரு ஓட்டையை கண்டுபிடித்த ஆடு அதன் வழியாக வெளியே போய் விட்டது. மேய்ந்துக்கொண்டே வெகு தூரம் போய்விட்டது. திரும்பி வர வழியை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பின்னே ஒரு ஓநாய் தொடருவதை ஆடு உணர்ந்தது. ஓடு ஓடென்று ஓடியது. ஓநாய் விடாமல் துரத்தியது. ஒரு வழியாக ஆட்டிடையன் ஆட்டை கண்டு பிடித்து அரவணைத்துக்கொண்டான்.

யார் சொல்லியும் கேட்கவில்லை; ஆட்டிடையன் வேலியின் ஓட்டையை அடைக்க மறுத்துவிட்டான்.

1 comment:

vasu balaji said...

கமெண்டு டெஸ்டிங்கு