Pages

Wednesday, February 6, 2019

பறவையின் கீதம் - 108





ஒரு முஸ்லிம் ராஜா ஒரு அடிமைப்பெண்ணிடம் மனதை முழுதுமாக பறி கொடுத்துவிட்டான். அவளை அடிமைகளின் கொட்டிலில் இருந்து தன் அரண்மனைக்கு இடம் மாற்றிவிட்டான். அவலை திருமணம் செய்து கொண்டு தன் முக்கிய ராணியாக்கிக்கொள்ள திட்டமிட்டு இருந்தான்.

அரண்மனைக்கு வந்து சேர்ந்த அன்றே அவள் நோய்வாய்ப்பட்டாள். நாளாக ஆக நிலமை மோசமானது. அரண்மனை வைத்தியர்கள் எந்த மருந்து கொடுத்தும் நிலை சீரடையவில்லை. ஏறத்தாழ மரணப்படுக்கைக்கே போய்விட்டாள்.

செய்வதறியாத ராஜா அவளை குணப்படுத்துவோருக்கு பாதி ராஜ்யத்தை கொடுப்பதாக அறிவித்தான். ராஜ வைத்தியர்களே கைவிட்ட நபரை குணப்படுத்த யார் முன் வருவர்?
கடைசியாக ஒரு ஹக்கிம் வந்தார். அந்த பெண்ணை தனியாக பார்த்து பேச வேண்டுமென்றார். அனுமதித்தார்கள். என்ன சொல்லுவாரோ என்று ராஜா பதைபதைப்புடன் காத்திருந்தான். ஒரு மணி கழித்து ஹக்கிம் ராஜாவின் முன் வந்தார்.

ராஜா. இவளை குணப்படுத்த நிச்சயமான வழியை எனக்குத்தெரியும். அது வேலை செய்யவில்லை என்றால் என் தலையை தாராளமாக வெட்டிவிடுங்கள். ஆனால் அந்த தீர்வு பெரும் துன்பத்தை தரும். துன்பம் அவளுக்கல்ல. உங்களுக்கு!”

"பரவாயில்லை. நீங்கள் என்ன சொன்னாலும் அது நிறைவேற்றப்படும்.”
வார்த்தை மாற மாட்டீர்களே?'
மாட்டேன்!”

நல்லது ராஜா. அவள் உங்களுடைய அடிமை ஒருவனை காதலிக்கிறாள். அவனுக்கு அவளை திருமணம் செய்து வைத்துவிட்டால் அவள் குணமாகிவிடுவாள்.”

பாவம் ராஜா! அவளை மிகவும் காதலித்தான். அவளை விட்டுவிலகவும் மனதில்லை. அவளை சாகவிடவும் விருப்பமில்லை!

No comments: