Pages

Thursday, October 31, 2019

#காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை -2








இந்த புண்ய ஸ்லோக மஞ்சரி ....விவரங்களையும் கிடைத்த அளவில் இது வழங்குகிறது.
எல்லா ஆச்சார்யர்களுக்கும் அனைத்து விவரங்களும் கிடைக்கவில்லை. மேலும் சில ஆச்சார்யர்களின் (உதாரணமாக 26 முதல் 30 ஆச்சார்யர்கள் போல)- அவர்களது தனித்துவமான செயல்களுக்கு எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று விவரங்கள் கிடைத்தபடி அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ளன; அவற்றை உருவாக்கும் அல்லது இல்லாத விவரங்களைச் சேர்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடவில்லை என்பது தெளிவாக புலப்படுகிறது. காமகோடி பரம்பரை வரலாற்றின் வரலாற்றாளர்களின் நேர்மைக்கு இது ஒரு சான்று.
குரு ரத்னா மாலா:
பிரபலமான அவதூத யோகீஸ்வர ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் குரு ரத்னா மாலாவை இயற்றினார். ஆதி குரு தக்‌ஷிணாமூர்த்தியிலிருந்து தொடங்கி, ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர் வரையிலான அத்வைத பரம்பரை குறித்தும், அதன் பின் காஞ்சி காமகோடி சர்வக்ஞ பீடத்தின் ஆச்சார்ய பரம்பரையின் 57 வது ஆச்சார்யர்கள் ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி -2 - அவரது குரு வரையிலான ஆசார்ய பரம்பரை குறித்தும் துதிக்கும் பாடல்கள் அடங்கியது இந்நூல். திரு ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் துணை சீடரும் ஶ்ரீ பரமஶிவேந்திரரின் சீடருமான 58 ஆவது ஆச்சார்யர் ஶ்ரீ ஆத்மபோதேந்திர ஸரஸ்வதி அவர்களது கோரிக்கையை ஏற்று எழுதியுள்ளதாக இந்த படைப்பின் கடைசி வசனம் வெளிப்படையாக கூறுகிறது.
இந்த படைப்பு பெரும்பாலும் பல்வேறு ஆச்சார்யர்களின் உயர்ந்த குணங்களைப் புகழ்ந்துகொண்டு, அவர்தம் தொடர்பான அக்கால வரலாற்று உண்மைகளை குறிப்பதாக உள்ளது. உதாரணமாக, வானியலாளர் ஆர்யபட்டா (பொது யுக ஆண்டு 476-550), 23 வது ஆச்சார்யர் ஶ்ரீ சச்சித்சுகேந்த்ர ஸரஸ்வதி (சித்தி: பொது யுக ஆண்டு 511) சமகாலத்தில் குறிப்பிடப்படுகிறது; 39 வது ஆச்சார்யரின் ஶ்ரீ சச்சித்விலஸேந்திர ஸரஸ்வதி (சித்தி: பொது யுக ஆண்டு 872) இன் கவிதை மற்றும் நாடக ஆசிரியரான ஆனந்த வர்தனா (பொது யுக ஆண்டு 820-890) முதலியன.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஶ்ரீ ஆதி ஶங்கரரின் தரிசனம் குறித்த அறிவுக்கு 'குரு ரத்ன மாலா' முக்கிய ஆதாரமாக உள்ளது. ஆச்சார்யரின் பரம்பரையில் இயற்றப்பட்ட 86 பாடல்களிலிருந்து, 21 பாடல்கள் அவரைப் பற்றி மட்டுமே உள்ளன, மேலும் அவருடைய அவதாரத்தில் முக்கிய நிகழ்வுகளான உபநயனம், சன்னியாசம், கோவிந்த பகவத்பாதரை குருவாக அடைதல், வியாசர் மற்றும் விஸ்வநாதரை காசியில் தரிசித்தல், குமாரில பட்டருடன் சந்திப்பு, மண்டன மிஸ்ரரை வெற்றி கொண்டது, கைலாசத்தில் ஸ்படிக லிங்கங்களை பெற்றுக்கொள்வது, திக்விஜயம், காஞ்சியை அடைதல், தேவி காமாஷியின் உக்ரமானவடிவத்தை சாந்திபடுத்துதல், மற்றும் அங்கு ஶ்ரீசக்ரத்தை ஸ்தாபித்தல், சர்வக்ஞபீடத்தில் ஏறுதல், காஞ்சிமடத்தை நிறுவுதல், மற்ற மடங்களை நிறுவி, இறுதியாக காஞ்சியில் சித்தியை அடைந்தல் ஆகியன குறிப்பிடப்படுகின்றன.
சுஷமா:
குரு ரத்னா மாலாவின் விளக்கவுரை சுஷமா.

No comments: