Pages

Thursday, October 31, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 3






ஶ்ரீ ரமண ஶர்மா ஆன்லைன் - பதிவுகளின் தமிழாக்கம்


சுஷமா:

குரு ரத்னா மாலாவின் விளக்கவுரை சுஷமா. இது ஶ்ரீ ஆத்மபோதேந்திர சரஸ்வதி அவர்களால் (58 வது ஆச்சார்யர் அல்ல, 60 வது மற்றும் 61 வது ஆச்சார்யர்களின் சீடர்) எழுதப்பட்டது. காமகோடி பீடத்தின் வரலாறு தொடர்பான விவரங்களைக் கொண்டிருக்கும் பல பாரதீய படைப்புகளில் இருந்து அவர் மேற்கோள் காட்டியதன் மூலம் இந்த ஆசிரியர் நன்கு கற்றறிந்த அறிஞர் எனத்தெரிகிறது.

ங்கரர் அவதாரம் குறித்த ஶ்ரீ பிரம்மேந்திரரின் விவரணத்தை அந்த காலத்தில் இருந்த பல பழைய ங்கர விஜயங்களை மேற்கோள் காட்டியதன் மூலம் இந்த எழுத்தாளர் உறுதிப்படுத்தினார். அதேபோல், 38 வது ஆச்சார்யரான ஶ்ரீ அபிநவ ஶங்கரரின் சரித்திரத்தையும் அவர் விவரிக்கிறார். காஷ்மீரில் உள்ள ஷாரதா க்ஷேத்திரத்தில் சர்வக்ஞ பீடத்தில் ஏறியதும். கேதார க்ஷேத்ரத்தில் இருந்து இமயமலையில் சித்தி அடைவதையும் விவரித்து இருக்கிறார். பலர் (17 ஆம் நூற்றாண்டில் கூட) ஶ்ரீ ஆதி ஶங்கரர் மற்றும் அபிநவ ஶங்கரரின் கதைகளை குழப்பியிருந்தார்கள் என்பதையும் அதனால் நிகழ்வுகள் வரிசையையும் குழப்பினார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார்.

இந்த ஆச்சார்யர் பல்வேறு பிற ஆச்சார்யர்களின் பல விவரங்களை அளிக்கிறார், இது அனைத்தும் சுஷ்மாவை மிகவும் சுவாரஸ்யமான பாரம்பரிய / வரலாற்று படைப்பாக உண்மையிலேயே சுவாரசியமான வாசிப்பாக்குகிறது.

தீர்மானம்:

நமது சொந்த மக்களின் மேற்கத்திய தாக்கம் மற்றும் கிட்டப்பார்வை உள்ளிட்ட பல காரணிகளால், நமது சொந்த பாரம்பரிய வரலாற்று கணக்குகளின் முக்கியத்துவம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றில் இது போன்ற ஆழமான விஷயத்தில் நேர்மையான தவறுகள் எப்பொழுதும் சாத்தியமானதாக இருந்தாலும், பாரம்பரிய கணக்குகள் எப்பொழுதும் கற்பனை செய்யப்படுகின்றன அல்லது ஒருதலைப்பட்சமானது என்று கருதுவது புத்திசாலித்தனமாகாது.

நாம் இன்று அறிந்திருக்கும் காஞ்சி காமகோடி பீடத்தின் வரலாறு மேற்கண்ட மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளுக்குள்ளான குறிப்பாக மூன்று மூத்த படைப்புகளை அடிப்படையாக கொண்டுள்ளது. கூடவே பழைய ஶங்கர விஜயங்களைப் பற்றியும் (புண்ய ஶ்லோக மஞ்சரி என்பது, பழைய ஶ்லோகங்களின் தேதி தொகுப்பு மட்டுமே). இந்த வரலாறு, சம கால ஆர்யபட்டா போன்ற அறிஞர்களின் (மேலே பார்க்கவும்) ஆதாரங்கள், காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள கோவில்களின் ஆதாரங்கள், பல்வேறு புராதன சான்றுகள் போன்ற பல வெளிப்புற சான்றுகளாலும் உறுதி செய்யப்பட்டது.

காஞ்சி காமகோடி பீடம், பாரதத்தில் சனாதன தர்மத்தை காப்பாற்றுவதற்காகவும் உலகம் முழுவதிலும் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் பாதுகாத்து வைக்கவும் ஜகத்குரு என்னும் பட்டத்துக்கு பொருந்த தம்மை அர்ப்பணித்துள்ள ஆச்சார்யர்களின் புகழ்பெற்ற பரம்பரையை இன்னும் கொண்டுள்ளது. நல்ல விசுவாசத்துடனும் நேர்மையுடனும் சேகரிக்கப்பட்ட வரலாற்று விவரங்கள், இந்த ஆச்சார்யர்களின் பெருமைகளை சுட்டிக்காட்டும், தர்மத்தின் நித்திய பாதையில் பயணிக்க எங்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்.

அடுத்த பதிவு முதல் ஆச்சாரியர்கள் பற்றிய தகவல்கள்: ஶ்ரீ கோவிந்த பகவத்பாதர் குறித்த விவரங்கள்:

No comments: