Pages

Thursday, October 31, 2019

#காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 8





4 வது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ ஸத்யபோதேந்திர ஸரஸ்வதி
பிறப்பு இடம்: அம்ராவதி ஆற்றின் கரை (இன்றைய அமராவதி?)
பூர்வாஶ்ரம பெயர்: பலிணிஷா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: தாண்டவ ஶர்மா
பீடாதிபதியாக இருந்த ஆண்டுகள் : 96
சித்தி: 2833 நந்தன மார்கசிர கிருஷ்ண அஷ்டமி (பொது ஆண்டு முன் 0269- நவம்பர் 26)
மற்றவை:
இந்த ஆச்சார்யர் 'பதக ஶதம்' என்ற ஒரு படைப்பை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது, இதன் மூலம் அவர் வைதீக தர்மத்தில் இல்லாதவர்களின் ஆதரவாளர்களால் வேதங்கள் மீது கொடுக்கப்பட்டிருந்த தவறான விளக்கங்களை மறுத்தார். ஶ்ரீ ஆதி ஶங்கரர் அவ்வாறு செய்திருந்தாலும், மற்ற கருத்துக்களின் ஆதரவாளர்கள், ஶங்கரரின் வாதங்களை மறுத்து, தங்களைத் தாங்களே நிறுவிக் கொள்வதற்காக சில படைப்புகளை உருவாக்கியிருப்பார்கள் என்று கருதப்படுகிறது. இந்த ஆச்சார்யரின் படைப்பு இவற்றுக்கு தகுந்த மறுப்பு தெரிவித்து உண்மையில் ஶ்ரீ ஶங்கரர் மட்டுமே வேதங்களின் சரியான கருத்தை கூறியதைக் காட்டுவதாக இருந்தது.

No comments: