Pages

Friday, February 4, 2011

காய ஸம்பத்து, இந்திரிய ஜயத்துக்கான உபாயம்:



Patanjali yoga sutra
 रूपलावण्यबलवज्रसंहननत्वानि कायसंपत् ।।46।।

ரூபலாவண்யப³லவஜ்ரஸம்°ஹநநத்வாநி காயஸம்°பத் || 46||

ரூப = கண்ணுக்கு பிடித்த வடிவமும்; லாவண்ய = அழகும்; ப³ல வீர்யமும்; வஜ்ர ஸம்°ஹநநத்வாநி = வஜ்ரம் போல கெட்டியான அவயங்களின் சேர்க்கையுமே; காய ஸம்°பத் =காய சம்பத் என்ற சித்தி.

 ग्रहणस्वरूपास्मितान्वयार्थवत्त्वसंयमादिन्द्रिजयः ।।47।।

க்³ரஹணஸ்வரூபாஸ்மிதாந்வயார்த²வத்த்வஸம்°யமாதி³ந்த்³ரிஜய​: || 47||

க்³ரஹண = சப்தம் முதலானவற்றில் இந்திரியங்களுக்கு உண்டாகும் விருத்தி; ஸ்வரூப = 11 வித இந்திரியங்கள்; அஸ்மிதா = இந்திரியங்களின் காரணங்கள்; அந்வய = சத்வம் முதலிய குணங்கள்; அர்த²வத்த்வ = சுக துக்க ரூபமாக இருக்கும் புருஷார்த்தத்தில்; ஸம்°யமாத்³ =ஸம்யமம் செய்ய; இந்த்³ரிய ஜய​: = இந்திரியங்களின் ஜயம் உண்டாகிறது.
இந்திரியங்களின் சொரூபம் ஐந்து.
1. சாமான்ய,விசேஷ ரூபமான சப்தம் முதலியன. இதில் உண்டாகும் இந்திரிய விருத்தியே க்ரஹணம். அதாவது அந்தந்த விஷய வடிவங்களாகவே மாறுதல்.
2. மேற்கண்டதுடன் ஸத்வ ப்ரதானமான அஹங்காரத்திலிருந்து உண்டாகியிருத்தல் என்பதும் சேர்த்து அதன் சொரூபம்.
3. இந்திரியத்தின் மூலமான சாத்விக அகங்காரம் மூன்றாவதான அஸ்மிதையாகும்.
4. கார்யமான இந்திரியங்களில் இருக்கும் ஸத்வம் முதலான குணங்கள் அந்வயம்.
5. இந்திரியங்களில் இருக்கும் சுக துக்கங்கள் அர்த்தவத்வம்.

 இவற்றில் ஸம்யமம் செய்ய இந்திரிய ஜயம் உண்டாகிறது.