Pages

Sunday, May 26, 2013

ரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை -4


முனிவர் சரி என்று சொல்லி எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு கதவை சாத்தினார். பின் ஜனகரை நெருங்கி 'ராஜன் ஏன் இப்படி நிச்சலனமாய் இருக்கிறாய்?' என்று கேட்டார்.
அதற்கு அவர் "ஸ்வாமி, இந்த சரீரத்தின் மீது எனக்கு எந்த சொந்தமும் கிடையாது. இந்தக்கைகள், கால்கள், நாக்கு, காது, கண்கள் ஆகிய ஸர்வேந்திரியங்களும் எனதில்லை. இந்த ராஜ்யம் எனதில்லை. உண்மையாகவே என் உடல், உடம்ப்பு, பொருள் எல்லாவற்றையும் உங்கள் பாதத்தாமரையில் சமர்ப்பித்துவிட்டேன். அதனால் உங்கள் அனுமதி இன்றி எவ்விதமான செயலுக்கும் நான் உரிமை இல்லாதவன். அதனால் இப்படி இருக்கிறேன்” என்றார்.
சிரத்தை பக்தியுடன் கூடிய அந்த சொற்களைக்கேட்டு உளம் மகிழ்ந்த அஷ்டாவக்கிர முனிவர் அந்த மஹாராஜனின் தலை மீது தம் கையை வைத்து 'அப்பனே நீ முக்தி பெறுவதற்கு தக்க அதிகாரிதானா இல்லையா என்று தெரிந்து கொள்ளவே இப்படி பரீட்சை செய்ய வேண்டி இருந்தது. அனுக்ரஹிப்பதற்கு தக்க அதிகாரி நீ இப்போது கிடைத்துவிட்டாய். இப்பொழுது நீ ப்ரம்ஹ ஸ்வரூபம்தான். நீ என்றும் முக்தன். பிறவிப்பயனடைந்தவன். பெறற்கரியது பெற்றவன். ஸதா அகண்ட ஸச்சிதானந்த ஸ்வரூபமே நீ' என்றார்.
அந்த அரசன் 'பேத உணர்ச்சியும் மனோ விகாரமும் போகாத அஞ்ஞானியன்றோ நான்? பிரம்ம ஸ்வரூபம் எப்படி ஆனேன்? ' என்று தன்னுள் தர்கித்துக்கொண்டு முனிவரை நமஸ்கரித்து 'ஸ்வாமி, ஞானம் பெறுவது எவ்வாறு? முக்தி நிகழ்வது எப்படி? வைராக்யம் வருவது எவ்வகையில்? அதை எனக்கு மொழிந்திட வேண்டும்.' என்று ப்ரார்த்தித்தார்.

"இப்படித்தான் அஷ்டாவக்கிர கீதை பிறந்தது. சிஷ்யர்கள் கேள்வி கேட்பதும் குரு விடையளிப்பதுமாக பிரச்சனோத்தர (கேள்வி பதில்) உருவில் இந்த கதை வாயிலாக அஷ்டாவக்கிரர் ஜனகருக்கு உபதேசம் செய்தார். அந்த உபதேசத்தினால் ஜனகருக்கு இரவு முழுதும் ஒரு நொடிப்பொழுதாக கழிந்துவிட்டது.

சூர்யோதயம் ஆனதும் வாயிற் கதவு திறந்திருக்கவே மந்திரி ஸாமந்தர்கள் எல்லாரும் உள்ளே வந்து பரமானந்தத்தினால் நிறைந்திருந்த மன்னனைக்கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். அப்பொழுது முனிவர் ஜனகரைப்பார்த்து 'என்ன! குதிரையின் அங்கவடியில் காலெடுத்து வைத்து ஏறி அடுத்த அங்கவடியில் கால் வைப்பதற்கு முன் ப்ரம்ஹ ஞானம் சித்திக்கும் என்ற சாத்திர வாக்கியத்தில் இன்னும் சந்தேகம் ஏதும் இருந்தால் கேள்' என்று சொன்னார். ராஜா பக்தி நிறைந்த மனதுடன் 'என் மனதில் எந்தவித சந்தேகத்துக்கும் இப்போது இடமில்லை. சாஸ்திர வாக்கியம் உண்மைதான். தங்கள் எல்லையில்லா க்ருபையினால் நான் க்ருதார்த்தனானேன்' என்றார்.

இதுதான் கதை. இந்த அஷ்டாவக்கிர கீதை ரிபு கீதையைப்போலவே அதீதமான கைவல்லிய நிலையை தெரியப்படுத்துகிறது. அதாவது, ஜனகர் உண்மையிலேயே தனது உடல் உள்ளம் பொருளை சமர்ப்பணம் செய்தவுடனேயே தன்னிலையில் ஒடுங்கி சமாதி பெற்றார். 'இந்த நிலையே உனது ஸ்வரூபம். இதிலேயே நீ ஸஹஜமாக அனுபவி!' என்று அந்த கீதையின் மூலம் அஷ்டாவக்கிரர் விளக்கினார்.

-நிறைந்தது- 

Saturday, May 25, 2013

ரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை -3



சூர்யாஸ்தமனம் ஆயிற்று. ராஜா திரும்பி வரவில்லையே என்று மந்திரி ப்ரதானிகள் கவலையடைந்து காட்டிற்கு வந்து பார்த்தால் பல்லக்கு இருந்ததே தவிர அஷ்டாவக்கிரரை காணவில்லை. ராஜா அசையாமல் சிலை போல நின்று கொண்டிருந்தார். எல்லாரும் பயந்து போய் நின்றார்கள். முக்ய மந்திரி அருகில் போய், 'பிரபு இந்த நிலைக்கு காரணமென்ன?' என்று கேட்டார். ராஜா பதில் சொல்லவில்லை. முனிவர்தான் ஏதோ மந்திரம் போட்டுவிட்டார் என்று நினைத்து முனிவரை தேடினார்கள்; கிடைக்கவில்லை. வேறு வழியின்றி ராஜாவை பல்லக்கில் இட்டு அரண்மனைக்கு எடுத்துச்சென்று கட்டிலில் படுக்க வைத்தார்கள். அவர்கள் படுக்க வைத்தபடியே ராஜா சலனமற்று இருந்துவிட்டார். அநேக சேவகர்களை அழைத்து எப்படியாவது முனிவரை தேடி அழைத்து வர வேண்டுமென்றும் அவர் இல்லாமல் திரும்பக்கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டு அனுப்பினார்கள்.

ஜனகர் ஆகாரம்தான் உட்கொள்ளவில்லை என்றால் பேச்சும் இல்லை. ஜலம் வாயில் இட்டாலும் விழுங்கவில்லை. இந்நிலையை கண்டு மஹாராணி மற்றும் ராஜ வம்சத்தினர் மற்றும் பரிவாரங்கள் துக்கத்தில் ஆழ்ந்தார்கள். விஷயம் எங்கும் பரவி விட்டது. பிரஜைகள் கலங்கினார்கள். சூரியோதமான பிறகு கூட ராஜா எழுந்திருக்கவில்லை. முனிவரும் வரவில்லை. சூரியம் அஸ்தமனம் ஆகும் போது ஒரு சேவகன் அஷ்டாவக்கிரரை பல்லக்கில் ஏற்றி அழைத்து வந்தான்.

அவரை பார்த்தவுடன் மந்திரிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஆனால் காரியம் கெட்டுவிடுமோ என்ற பயத்தில் கோபத்தை வெளிக்காட்டாமல் ஸ்வாமி 'எங்கள் பிரபுவுக்கு ஏதேனும் மந்திரம் போட்டீர்களா?' என்று விநயத்துடன் கேட்டார்.
'உங்கள் பிரபு மீது மந்திரம் போடுவதால் எனக்கு என்ன லாபம் அப்பா? ருந்தாலும் அதை உங்கள் பிரபுவிடமே கேட்பதுதானே?' என்றார் முனிவர்.
'நாங்கள் பிரபுவிடன் கேட்டாலும் எந்த பதிலுமில்லையே! இரண்டு நாட்களாக அவர் ஜலபானம் கூட செய்யவில்லை. எப்படியாவது ஆகாரம் உட்கொள்ளச்செய்யுங்கள் ஸ்வாமி' என்றார் மந்திரி.'
முனிவர் ராஜாவை நெருங்கி 'ராஜன்!' என்று அழைத்தார்.
'என்ன ஸ்வாமி ஆக்ஞை?' என்று பதில் கொடுத்தார் ஜனகர்.
'உனக்கு நான் என்ன செய்தேன்?'
'ஒன்றும் செய்யவில்லையே! அப்படி யார் சொன்னார்கள்?'
'அது சரி! அதற்கென்ன? நீ எழுந்து ஆகாரம் எடுத்துக்கொள்!'
அரசர் எழுந்து ஆகாரம் உட்கொண்டு மீண்டும் அசைவில்லாமல் உட்கார்ந்துவிட்டார்.
'கருணை கொண்டு எங்கள் பிரபுவை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள்' என்று வேண்டிக்கொண்டார் மந்திரி. முனிவர் சரி என்று சொல்லி எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு கதவை சாத்தினார். பின் ஜனகரை நெருங்கி 'ராஜன் ஏன் இப்படி நிச்சலனமாய் இருக்கிறாய்?' என்று கேட்டார்.
 

Friday, May 24, 2013

ரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை -2


"கொஞ்ச காலத்துக்குப்பின் அஷ்டாவக்கிர மஹாமுனி பட்டணத்துக்கருகில் வந்து ஒரு மரத்தின் கீழ் இளைப்பாறினார். அங்கிருந்த இரு பிராம்மணர்களிடன் "இந்த பட்டணத்தை ஆளும் ராஜா யார் அப்பனே?” என்று கேட்டார். அவர்கள் 'நீங்கள் இந்த பட்டணத்துக்குள் போக நினைக்கிறீர்களா என்ன?' என்று கேட்டார்கள். 'ஆமாம் அப்பா போக வேண்டும் என்று நினைப்பதால்தான் கேட்கிறேன்' என்றார் மாமுனி. அவர்கள் இருவரும் வினயத்துடன் 'ஸ்வாமி, அந்த பட்டணத்தை ஆளும் ராஜா எத்தனையோ பிராம்ஹணர்களை சிறையில் அடைத்து இருக்கிறார். அதனால் தாங்கள் அங்கே செல்ல வேண்டாம் என்று ப்ரார்த்திக்கிறோம். குதிரையின் அங்கவடியில் காலெடுத்து வைத்து ஏறி அடுத்த அங்கவடியில் கால் வைப்பதற்கு முன் ப்ரம்ஹ ஞானம் சித்திக்கும் என்ற சாஸ்திர வாக்கியத்தை நிரூபிக்க முடியுமா என்று ப்ராம்ஹணர்களிடன் ராஜா கேட்கிறார். முடியாது என்றால் அந்த வாக்கியத்தை சாஸ்திரத்தில் இருந்து எடுத்துவிடச்சொல்லுகிறார் ஸ்வாமி' என்றார்கள்.  
அஷ்டாவக்கிரர் இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, 'ஓஹோ இதுவா சமாசாரம். அப்போது ஒன்று செய்யுங்கள். ஒரு பல்லக்கில் என்னை உட்கார வைத்து அந்த ராஜாவிடன் என்னைக்கொண்டு செல்லுங்கள். அந்த வாக்கியத்தை நான் நிரூபித்து பண்டிதர்களை நான் விடுவிக்கிறேன்' என்றார். அதைக்கேட்டதும் ப்ராம்ஹணர்கள் மகிழச்சி அடைந்து உடனேயே ஒரு பல்லக்கை கொண்டு வந்து அவரை உட்கார வைத்து தாங்களே அவரை சுமந்துபோய் ராஜ சபையில் இறக்கினார்கள்.
" தேஜோ மயமான அந்த முனிவரை கண்டதும் மன்னனுக்கு அவரை பூஜிக்கத்தோன்றியது. சட்டென்று சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்து கைகூப்பி, 'ஸ்வாமி! தாங்கள் இங்கே எழுந்தருளியதற்க்கு காரணம் ஏதும் உளதோ? என்னால் ஆக வேண்டிய காரியம் ஏதுமிருப்பின் தயை கூர்ந்து சொல்ல வேண்டும்' என்றான்.
"அரசனின் விநயமான பேச்சை கேட்டு மகிழ்ந்த முனிவர் 'எந்த அபராதத்துக்காக எல்லா பண்டிதர்களையும் சிறையில் அடைத்தாய்? அதை முதலில் சொல்; அப்புறம் என்னை விசாரிக்கலாம்' என்றார்.
'நான் ப்ராம்ஹணர்களை குதிரையின் அங்கவடியில் காலெடுத்து வைத்து ஏறி அடுத்த அங்கவடியில் கால் வைப்பதற்கு முன் ப்ரம்ஹ ஞானம் சித்திக்கும் என்ற சாத்திர வாக்கியத்தை நிரூபிக்க முடியுமா என்று கேட்டேன். அவர்கள் முடியாதென்று சொன்னார்கள். அதனால் சிறையில் அடைத்தேன். அந்த வாக்கியத்தின் உண்மையை அறியவே இப்படி செய்தேன்' என்று கூறினார் ராஜா.
"சரியாப்போச்சு! சாஸ்திர வாக்கியத்தை நிரூபிக்க முடியவில்லை என்பதால் அது கற்பனை என்று தீர்மானித்துவிடலாமா? அது பொய்யில்லை என்றும், சாஸ்திர வாக்கியத்தின் ஒவ்வொரு அக்ஷரமும் உண்மையே என்று நான் பிரதிக்ஞை செய்கிறேன் என்றார் முனிவர். அபப்டியானால் இப்போழுதே குதிரையை கொண்டு வரச்சொல்கிறேன். தாங்கள் சாஸ்திர வாக்கியத்தை உண்மை என்று நிரூபித்து அனுக்ரஹிக்க வேணுமாய் ப்ரார்த்திக்கிறேன். ' என்றார் ராஜா. 'உன் எண்ணம் உத்தமமானதுதான். சந்தோஷம். ஞானோபதேசம் அதற்கு அருகதை இல்லாதவர்களுக்கு கொடுக்கக்கூடாது என்பதை நீ அறிவாய் அல்லவா? ஆகவே உனக்கு ஞானோபதேசம் பெற சிரத்தை இருந்தால் என் மீது பூரண சிரத்தையுடன் பக்தி செலுத்தி முதலில் சிறையிலுள்ள பண்டிதர்களை விடுதலை செய்வாயாக. பின் குதிரை ஏறி என்பின்னே காட்டுக்கு வா. உன் அருகதையை சோதித்து உபதேசம் செய்கிறேன்' என்றார் முனிவர்.
மிகத்தீர்மானமாக சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளை கேட்டதுமே அரசனுக்கு ஆவல் அதிகமாகியது. அக்கணமே சிறையில் அடைக்கப்பட்ட எல்லா பண்டிதர்களையும் விடுவித்தான். அஷ்டாவக்கிரரை பல்லக்கிலேற்றி அனுப்பி, கூடவே தானும் குதிரையேறி மந்திரி பரிவாரங்களுடன் காட்டுக்குப்போனான்
 ஒரு ஆல மரத்தடியில் பல்லக்கை நிறுத்தி அரசனையும் நிற்கச்சொல்லி, பின் 'இந்த பரிவாரங்களை எல்லாம் அனுப்பிவிடேன். உபதேசத்துக்கு இவர்கள் தேவையில்லையே' என்றார் முனிவர். சரி என்று ஜனகர் எல்லோரையும் அனுப்பிவிட்டார். உபதேசம் பெறுவதில் தாமதத்தை பொறுக்காமல் முனிவர் அனுமதி பெற்று குதிரையின் அங்கவடியில் ஒருகாலை வைத்து ஏறி, இரண்டாவது காலை உயர்த்தும் முன் முனிவர் 'நில் நில்' என்று கர்ஜித்து இரண்டாவது காலை அங்கவடியில் வைப்பதற்கு முன் என் கேள்விகளுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்' என்றார். அரசன் 'ஆஹா! அப்படியே தங்கள் ஆக்ஞைக்கு கட்டுப்பட்டு சொல்கிறேன்' என்றார். 'நீ பரிசோதிக்கும் இந்த சாஸ்திரத்தில் இந்த வாக்கியம் மட்டும்தான் இருக்கிறதா அல்லது இன்னும் இருக்கிறதா?'
'இன்னும் பல வாக்கியங்கள் இருக்கின்றன ஸ்வாமி'
'ஞானம் பெற குரு ஒருவர் வேண்டுமென்று அதில் சொல்லி இருக்கிறதா இல்லையா?'
'ஆஹா! கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லி இருக்கிறது ஸ்வாமி'
'அப்படியானால் என்னை குருவாக வரிக்காமலே ஏன் ஞானம் பெற உபதேசித்து அருளும் படி அவசரப்படுத்துகிறாய்?'
'இல்லையில்லை. சாஸ்திர விதிப்படியே இந்த கணமே உங்களை குருவாக வரிக்கிறேன்.'
'குரு தக்ஷிணை?'
'இதோ இந்த க்ஷணமே என் உடல், உள்ளம். பொருள் எல்லாவற்றையும் தங்கள் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டேன். அனுக்ரஹம் செய்ய வேண்டும் ஸ்வாமி!'
"இதை கேட்ட அஷ்டாவக்கிரர் உடனே அருகில் இருந்த புதரில் மறைந்து காணாமல் போனார். ராஜா குதிரையின் அங்கவடியில் ஒருகாலை வைத்தபடியும், இரண்டாவது காலை பூமியிலிருந்து எடுக்கும் நிலையிலும் அப்படியே நிலை பெயராமல் நின்றான்.

Thursday, May 23, 2013

ரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை

 
அஷ்டாவக்ர கீதை குறித்து பேச்சு எழுந்தது. அந்த கீதோபதேசம் ஏற்பட காரணமாக இருந்த ஜனகர், அஷ்டாவக்கிரர் சம்பாஷணை சுவையாக இருக்கும் என்றார் பகவான். பகவான் அந்த கதையை சொல்ல வேண்டுமென்று வேண்டுகோள் எழ, பகவான் சொல்லத்துவங்கினார்.

"எல்லா மிதிலாதிபர்களையும் ஜனகர் என்றே சொல்வார்கள் இல்லையா? அவர்களில் ஒருவர் ஆத்ம ஞானம் அடையுமுன் அவரது அரசவை பண்டிதர் ஒருவரின் மகன் ஜனகர் முன் சாஸ்திரம் வாசித்துக்கொண்டு இருந்தான். அப்படி இருக்கும் போஓது ஒரு நாள் குதிரையின் மேலே ஏறுகையில் ஒரு அங்கவடியில் கால் வைத்து ஏறி, இரண்டாம் அங்கவடியில் கால் வைக்குமுன் பிரம்ஹ ஞானம் பெறலாம் என்ற வாக்கியத்தை படித்தான். ஜனகர் "இந்த வாக்கியம் உண்மைதானா அல்லது கற்பனையா?” என்று கேட்டார். "உண்மைதான், அதில் அணுவளவும் சந்தேகம் இல்லை!” என்றான் சிறுவன். "அது நடக்கவொண்ணாது என்று தோன்றுகிறது. அது உண்மையானால் என் குதிரையை இப்போதே வரவைக்கிறேன். அதன் முதல் அங்கவடியில் கால் வைத்து ஏறி இரண்டாம் அங்கவடியில் காலை வைக்கு முன் பிரம்ஹஞானம் எனக்கு சித்திக்கும் படி செய்து நிரூபிக்க வேண்டும்!” என்றார் ஜனகர். சிறுவன் "எனக்கு அந்த திறமையில்லை; அது என்னால் முடியாது. ஆனாலும் இந்த வாக்கியம் பொய்யில்லை" என்றான். கோபம் கொண்ட ஜனகர் "அப்படியானால் அந்த வாக்கியத்தை சாத்திரத்தில் இருந்து எடுத்துவிடுங்கள்" என்றார். பையன் சிறிதும் பின் வாங்காமல் மீண்டும் "இந்த வாக்கியத்தின் உண்மை என்பது குறித்து எந்த சந்தேகமுமில்லை" என்றான் .

ராஜா அந்த பையனை சிறையிலிட்டார். பட்டணத்தில் இருக்கிற பண்டிதர்கள் அனைவரையும் அழைத்து சாத்திர வாக்கியத்தை நிரூபிக்கும் படி கேட்டார். அவர்கள் பையன் சொன்னது போலவே சொன்னார்கள். "அப்படியானால் உடனே குதிரையை வரவழைக்கிறேன், நிரூபியுங்கள்" என்றார் ராஜா. 'அதற்கு எங்களுக்கு திறமையில்லை' என்றார்கள். ஜனகர் அனைவரையும் சிறையில் அடைத்து, காவல்காரர்களிடம் பட்டணத்தில் புகும் ப்ராம்ஹணர்கள் யாரானாலும் தன்னிடத்தில் அழைத்து வரும் படி கட்டளை இட்டார். அது முதல் பிராம்ஹணர்கள் யார் வந்தாலும் அவர்களை ராஜாவிடம் அழைத்துப்போவதும், அவர் அதே கேள்வியை கேட்பதும் ப்ராம்ஹணர்கள் அதே பதிலை சொல்வதும் அவர்களை ராஜா சிறையிடுவதுமாக நடந்து கொண்டிருந்தது. நாளடைவில் செய்தி திக்கெட்டும் பரவி பண்டித ப்ராம்மணர்கள் மிதிலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார்கள்.


Wednesday, May 22, 2013

ஸ்ரீ நரஸிம்ʼஹ அஷ்டோத்தரம்


வரும் நரசிம்ஹ ஜயந்தியை முன்னிட்டு....

ஸத்ய ஜ்ஞான ஸுக² ஸ்வரூபமமலம்ʼ க்ஷீராப்³திமத்யஸ்தி²தம்ʼ
யோகா³ரூடமதிப்ரஸன்ன வத³னம்ʼ பூஷா ஸஹஸ்ரோஜ் ஜ்வலம் |
த்ர்யக்ஷம்ʼ சக்ரபினாகஸாபயவரான் பி³ப்ராணமர்கச்ச²விம்ʼ
²த்ரீ பூ ²ணீந்த்³ரமிந்து³ வலம்ʼ லக்ஷ்மீந்ருʼஸிம்ʼஹம்ʼ ஜே ||

ஶ்ரீ நரஸிம்ʼஹாஷ்டோத்தரம்

ஓம்ʼ நரஸிம்ʼஹாய நம:
மஹா ஸிம்ʼஹாய நம:
தி³வ்ய ஸிம்ʼஹாய நம:
மஹா ³லாய நம:
உக்³ ஸிம்ʼஹாய நம:
மஹா தே³வாய நம:
ஸ்தம்பஜாய நம:
உக்³ லோசனாய நம:
ரௌத்³ராய நம:
ஸர்வாத்³புதாய நம:
ஶ்ரீமதே நம:
யோகா³னந்தா³ நம:
த்ரிவிக்ரமாய நம:
ஹரயே நம:
கோலாஹலாய நம:
சக்ரிணே நம:
விஜயாய நம:
ஜயவர்தனாய நம:
பஞ்சானனாய நம:
பர ப்³ரஹ்மணே நம:
அகோராய நம:
கோ விக்ரமாய நம:
ஜ்வாலா முகா² நம:
ஜ்வாலா மாலினே நம:
மஹா ஜ்வாலாய நம:
மஹா ப்ரபவே நம:
நிடிலாக்ஷாய நம:
ஸஹஸ்ராக்ஷாய நம:
து³ர் நிரீக்ஷ்யாய நம:
ப்ரதாபனாய நம:
மஹா ³ம்ʼஷ்ட்ராயுதா நம:
ப்ராஜ்ஞாய நம:
சண்ட³கோபினே நம:
ஸதா³ஶிவாய நம:
ஹிரண்யகஶிபு த்வம்ʼஸினே நம:
தை³த்ய தா³னவ ஞ்ஜனாய நம:
கு³ த்³ராய நம:
மஹா த்³ராய நம:
³ த்³ராய நம:
ஸுபத்³ரகாய நம:
கராலாய நம:
விகராலாய நம:
விகர்த்ரே நம:
ஸர்வ கர்த்ருʼகாய நம:
ஶிம்ʼஶுமாராய நம:
த்ரிலோகாத்மனே நம:
ஈஶாய நம:
ஸர்வேஶ்வராய நம:
விபவே நம:
பைரவாட³ம்ப³ராய நம:
தி³வ்யாய நம:
அச்யுதாய நம:
கவயே நம:
மாதவாய நம:
அதோக்ஷஜாய நம:
அக்ஷராய நம:
ஶர்வாய நம:
வனமாலினே நம:
வரப்ரதா³ நம:
விஶ்வம்பராய நம:
அத்³புதாய நம:
வ்யாய நம:
ஶ்ரீ விஷ்ணவே நம:
புருஷோத்தமாய நம:
அனகாஸ்த்ராய நம:
நகா²ஸ்த்ராய நம:
ஸூர்ய ஜ்யோதிஷே நம:
ஸுரேஶ்வராய நம:
ஸஹஸ்ர பா³ஹவே நம:
ஸர்வஜ்ஞாய நம:
ஸர்வ ஸித்³திப்ரதா³யகாய நம:
வஜ்ர ³ம்ʼஷ்ட்ராய நம:
வஜ்ர நகா² நம:
மஹானந்தா³ நம:
பரந்தபாய நம
ஸர்வ மந்த்ரைகரூபாய நம:
ஸர்வ யந்த்ர விதாரணாய நம:
ஸர்வ தந்த்ராத்மகாய நம:
அவ்யக்தாய நம:
ஸுவ்யக்தாய நம:
க்த வத்ஸலாய நம:
வைஶாக² ஶுக்ல பூதோத்தா² நம:
ஶரணாக³ வத்ஸலாய நம:
உதா³ கீர்தயே நம:
புண்யாத்மனே நம:
மஹாத்மனே நம:
சண்ட³ விக்ரமாய நம:
வேத³ த்ரய ப்ரபூஜ்யாய நம:
³வதே நம:
பரமேஶ்வராய நம:
ஶ்ரீ வத்ஸாங்காய நம:
ஶ்ரீனிவாஸாய நம:
ஜக³த்³ வ்யாபினே நம:
ஜக³ன் மயாய நம:
ஜக³த் பாலாய நம:
ஜக³ன் நாதா² நம:
மஹா காயாய நம:
த்³வி ரூப ப்ருʼதே நம:
பரமாத்மனே நம:
பரஞ் ஜ்யோதிஷே நம:
நிர் கு³ணாய நம:
ந்ருʼகேஸரிணே நம:
பர தத்த்வாய நம:
பரந்தாம்னே நம:
ஸச்சிதா³னந்த³ விக்³ரஹாய நம:
லக்ஷ்மீ நரஸிம்ʼஹாய நம:
ஸர்வாத்மனே நம:
தீராய நம:
ப்ரஹ்லாத³பாலகாய நம: