Pages

Monday, August 15, 2022

ஶ்ராத்தம் - 54 பிண்ட பித்ரு யக்ஞம் -1





இந்த இழையின் கடைசியில் பிண்ட பித்ரு யக்ஞம். இத்துடன் பதிவுகள் முடியும்.
இதுவும் அமாவாசை தர்ப்பணமும் செய்தால் அந்த மாதன் ஒருவன் செய்ய வேண்டிய ஶ்ராத்த காரியங்கள் வேறெதுவும் இல்லை என்கிறார்கள். (வருஷாப்திகம் தவிர). நீளம் கருதி கொஞ்சம் தந்தி பாஷை.
இதை ஆஹிதக்னியோ ஔபாசனம் செய்பவரோ செய்யலாம்.
தந்தை ஜீவித்து இருப்பவருக்கு கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது.
காலம்: பிண்டபித்ருயஜ்ஞ காலம் -
நல்ல பஞ்சாங்கங்களில் பிண்ட பித்ரு யஜ்ஞம் என்று அமாவாஸ்யை அல்லது அதற்கு அடுத்த நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். அமாவாஸ்யை இன்றும் இருந்து நாளை காலையிலும் சிறிது இருந்தால் நாளை செய்யவேண்டும். மற்றபடி அமாவாஸ்யை அன்றே செய்யவேண்டும்.
பிற்பகல் வேளையிலோ ஸாயம் ஔபாஸனத்திற்கு முன்பு ஸூர்ய ரச்மிகள் மரங்களின் உச்சிகளைத் தொடும் நேரம் வந்தவுடனோ செய்யவேண்டும்.
ப்ராசீனாவிதியாகி ஸங்கல்பம் செய்யவும் - பிண்டபித்ருʼயஜ்ஞேன யக்ஷ்யே .
வித்யுதஸி இல்லை
ப்ராசீனாவீதியாக அடிப்பகுதியுடன் கூடிய தர்பைகளைக் வெட்டி கொண்டுவரவும் - (அபாம் மேத்யம்) (இது ஜீவபிதாக்களுக்குக் கிடையாது.)
ஔபாஸன அக்னிக்கு/ தக்‌ஷிணாக்னிக்கு அப்ரதக்ஷிணமாக பரிஸ்தரணம் போடவும். கிழக்கிலும் மேற்கிலும் தர்பைகளின் நுனி தெற்கு புறம். வடக்கிலும் தெற்கிலும் கிழக்கு புறம். அக்னிக்குத் தெற்கே சில தர்பைகளைப் போட்டு அவைகளின் மேல் பாத்ரங்களை ஒவ்வொன்றாக வைக்கவும். பாத்ரங்களின் நுனி தென்கிழக்கு நோக்கி இருக்கவேண்டும்.
பாத்ரங்களாவன - மரக்கரண்டி, ஆஜ்யஸ்தாலீ, சருஸ்தாலீ, அரிசி எடுக்க கிண்ணம், உபஸ்தரணாதிகளுக்கு தர்வீ, மண்பாத்ரம், ஒரு தொன்னை.
உபவீதி
மண் பாத்திரத்தில் தர்ப்பை ஒன்று வைத்து அரிசி இடவும். - பித்ருப்யோ வோ ஜுஷ்டம் நிர்வபாமி.
இதை சரு ஸ்தாலியில் சேர்க்கவும்.
ப்ராசீனாவீதியாக அக்னியில் அரைவேக்காடு சருவாக்கி இறக்கவும்.
‘அபஹதா அஸுரா ரஷாகும்ஸி பிஶாசா வேதிஷத:’ ஸ்ப்யத்தால் தென் கிழக்காக கோடு போட்டு அப உப...
ஶுந்ததாம் பிதர என்று நீரால் அவோக்‌ஷணம்.
ஆயந்து பிதரோ மனோ ஈஜவஸ: என்று அபிமந்த்ரணம்.
ஸக்ருதாச்சின்னம்* சானுகைஸ்ஸஹ தென்கிழக்காக தர்பைகளை வேதியில் பரப்புக.
ப்ரதான ஹோமம்:
சருவில் அபிகாரம். பின் வேதியில் இறக்கி வைக்கவும். சரு ஸ்தாலீ, மேக்‌ஷணம் சாதனம்.
உபச்சாரத்திற்காக வேதிக்கு தெற்கே படுக்கை, தலையணை, கண்மை, எண்ணை, ஜலகும்பம் ஆகியன வைக்கவும்.
உபவீதியாகி வலது காலை ஊன்றி குத்திட்டு அமர்ந்து ...
மேக்‌ஷணத்தில் உபஸ்தீர்ய. சரு எடுத்து மேலே அபிகாரம் பாதி மட்டும் ஹோமம். மீதியை தொன்னை/ மண் பாத்திரத்தில் சேமிக்கவும்.
ஹோமம் ஸோமாய பித்ருபீதாய ஸ்வதா நமஹ. இதம்
அதே போல் - யமாயாங்கிரஸ்வதே பித்ருமதே ஸ்வதா நமஹ. இதம்.
உபஸ்தரணம் அபிகாரம் இல்லாமல் இந்த சேமித்த மீதியை எடுத்து ஹோமம்: அக்னயேகவ்யவாஹனாய ஸ்வதா நமஹ. இதம்.
மந்திரமில்லாமல் மேக்‌ஷனத்தையும் அக்னியில் இடுக.
(இதுவரையில் தான் ஜீவபிதாக்களுக்கு முக்கிய ப்ரயோகம். இதன்பிறகு ப்ராயச்சித்தாதிகள் மட்டும் உண்டு. அவைகளுக்குக் கடைசியில் பார்க்கவும்.)
அடுத்து பிண்டப்ரதானம்.
 

No comments: