Pages

Wednesday, August 17, 2022

ஶ்ராத்தம் - 56 பிண்ட பித்ரு யக்ஞம் -3




பிண்டத்தின் மீது ஜலாஞ்சலி முன் போல.
மார்ஜயந்தாம் மம பிதர: மார்ஜயந்தாம் மம பிதமஹா: மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹா:
மையிடுதல்: ஆங்க்‌ஷ்வ ததா ஸௌ அமுக ஶர்மன்னு
ஆங்க்‌ஷ்வ பிதாமஹா ஸௌ அமுக ஶர்மன்னு
ஆங்க்‌ஷ்வ ப்ரபிதாமாஹாஸௌ அமுக ஶர்மன்னு
நல்லெண்ணை தருதல்
அப்யங்க்‌ஷ்வ ததா ஸௌ அமுக ஶர்மன்னு
அப்யங்க்‌ஷ்வ பிதாமஹா ஸௌ அமுக ஶர்மன்னு
அப்யங்க்‌ஷ்வ ப்ரபிதாமாஹாஸௌ அமுக ஶர்மன்னு
துணியின் நூல் தருதல்:
ஏதானி வ: பிதரோ வாஸாம்ஸி| அதோ நௌன்யத் பிதரோ மா யோஷ்ட
ஏதானி வ: பிதாமஹா வாஸாம்ஸி| அதோ நௌன்யத் பிதாமஹா மா யோஷ்ட
ஏதானி வ: பிரபிதமஹா வாஸாம்ஸி| அதோ நௌன்யத் பிரபிதமஹா மா யோஷ்ட
பின் ஜபம் : நமோ வ: பிதரோ ரஸாய ... பூயாஸம்|
உபஸ்தானம்: க்ருஹான்ன: பிதரோ தத்த ஸதோ வ:பிதரோ தேஷ்ம.
கும்பத்தில் இருந்து நீர் வார்த்தல்: ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் * பித்ரூன்னு
மீண்டும் உபஸ்தானம் :மனோன்வா ஹுவாமஹே * ஸசேமஹி||
பின் நின்று கொண்டு பித்ருக்கள் கிளம்புமாறு ப்ரார்த்தனை - - உத்திஷ்டத பிதர: * பாகதாம் தேவதாஸு
பித்ருக்களை அனுப்பிவைக்க மந்த்ரம் - பரேத: பிதரஸ் * ஸதமாதம் மதந்தி
உபவீதி
ப்ரஜாபதே நத்வ...
கார்ஹ்யபத்யம் /ஔபாஸனாக்னி அருகில் செல்க. அதன் உபஸ்தானம்:
யதந்தரிக்‌ஷம் ப்ருத்வீ * கரோது மாமனேனஸம்|
ப்ராசீனாவீதி
குழந்தை வேண்டி இருந்தால் :
'அபாம் ஸ்தௌஷதீனாகும் * கர்பம் தத்ஸ்வ' என்று சொல்லி மத்திய பிண்டத்தை பத்னிக்கு கொடுத்து உண்ண செய்க.
பத்னிக்கு மந்த்ர ஆவ்ருத்தி:
'ஆதத்த பிதரோ * புருஷோஸத் |
யே ஸஜாதாஸ்ஸமனஸோ * ஶதகும் ஶமாஹா| - இதை சொல்லி யஜமானன் உண்ண வேண்டும். (செய்யாமலும் இருக்கலாம்)
மிகுந்த பிண்டங்களை சேர்த்து எடுக்கவும்.
யே ஸமானாஸ்ஸமனஸ: பிதரோ * தேவேஷு கல்பதாம். என்று சொல்லி தர்ப்பைகளை சேர்த்து அக்னியில் இடுக.

அபூன்னோ தூதோ * புனரப்யேஹி தேவான்
இதைச்சொல்லி ஏகோல்முக அக்னியை தக்‌ஷிணாக்னியில் மீண்டும் சேர்க்க வேண்டும்.
(இதற்கு மேல் ஜீவபிதாக்களுக்கும் உண்டு.)
உபவீதி. பாத்திரங்களை புரோக்‌ஷித்து இரண்டிரண்டாக எடுத்து வைக்கவும்.
முகராத பிண்டங்களை எடுத்து வைக்கவும். இதை ப்ராஹ்மனன் சாப்பிடலாம். ஆனால் சருஸ்தாலீயில் இருப்பது நுகரப்பட்டதால் ப்ராஹ்மணனுக்குக் கொடுக்கலாகாது. கிணறு முதலியவற்றில் தான் சேர்க்கவேண்டும்.
ஏகோல்முக அக்னி நடுவில் அணைந்து இருந்தால்: அஸ்மின் பிண்ட பித்ரு யக்ஞே ஏகோல்முகாக்னி நாஶ ப்ராயச்சித்தார்த்தம் பூர்ணாஹுதி ஹோஷ்யாமி - பூர் புவ.... ப்ரஜாபதய இம்
அஸ்மின் பி.பி யக்ஞே யஜுர் ப்ரேஷ ப்ராயச்சித்தம் ஹோஷ்யாமி - புவ ஸ்வாஹா: வாயவ இதம்.
காயே ந வாசா.. 
 

No comments: