Pages

Tuesday, August 16, 2022

ஶ்ராத்தம் - 55 பிண்ட பித்ரு யக்ஞம் -2




அடுத்து பிண்டப்ரதானம்.

அத்வர்யு - ப்ராசீனாவீதி
ஏகோல்முகம் என்னு அக்னியை தக்‌ஷிணாக்னியில்/ ஔபாஸனத்திலிருந்து ஒரு புகையும் விராட்டித்துண்டத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஏகோல்முகத்திலுள்ள அக்னி மறுபடியும் ஔபாஸனத்திற்கு வந்து சேரும் வரையில் அணையாமல் இருக்கவேண்டும். அணைந்தால் மறுபடியும் இதே மந்த்ரத்தால் எடுத்துவைக்கவும், ப்ராயச்சித்தமும் உண்டு. அதற்கு மந்த்ரம்:
அபயந்த்வசுரா: * ப்ரனுதஸ்வ லோகாத்||
(மந்திரங்களுடன் முழு ப்ரயோகம் தேவையானவர் எனக்குத்தெரிவிக்கவும்.)

வலது கையால் தென்கிழக்காக ஸ்ப்யத்தால் ஒரே ஒரு கோடு கிழித்து நீர் தொட்டு
உதீரதாம் அவ * பிதரே ஹவேஷு என்று நீரால் அவோஷணம் செய்து ஏகோல்முகத்தை தென் நுனியில் வைக்க வேண்டும்.
யஜமானனும் அத்வர்யுவும் ப்ராசீனாவீதியாகி கர்மம் செய்க.
பின் யஜமானன் முன்னேயே வைத்த உத கும்பத்தில் இருந்து மார்ஜனம் செய்யவேண்டும். ஒரு முறை மந்திரத்துடம், இரு முறை மந்திரமில்லாது.
மார்ஜயந்தாம் மம பிதர: மார்ஜயந்தாம் மம பிதமஹா: மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹா:
... மூன்று பரிசேஷணம்.
மூன்று பிண்டங்கள் பிடிக்கவும். ஸ்தாலியில் சிறிது மீதி இருக்க வேண்டும்.
வலது கையால் பிண்டம் அளிக்கவும்.
ஏதத்தே ததஸௌ அமுக ஶர்மன்னு அமுக கோத்ர வஸுரூப .. யே சத்வாமனு
ஏதத்தே பிதாமஹாஸௌ அமுக ஶர்மன்னு அமுக கோத்ர ருத்ரரூப... யே சத்வாமனு
ஏதத்தே ப்ரபிதாமாஹாஸௌ அமுக ஶர்மன்னு அமுக கோத்ர ஆதித்ய ரூப
யே சத்வாமனு
மந்திரமில்லாமல் நான்காவது வைக்கலாம் வைக்காமலிருக்கலாம்.
(அமுக என்னுமிடத்தில் தம் கர்மாவுக்கானதை இட்டுக்கொள்ளவும்)
.உபஸ்தானம்:
யன்மே மாதா * அபபத்யதாம்|
பித்ருப்ய ஸ்வதாவிப்ய ஸ்வதா நம:
பிதாமஹேப்ய ஸ்வதாவிப்ய ஸ்வதா நம:
ப்ரபிதாமஹேப்ய ஸ்வதாவிப்ய ஸ்வதா நம: இது உபஸ்தானம்.
அத்ர பிதரோ யதா பாகம் மந்தத்வம்.
இப்படிச் சொல்லி பின் அக்னிக்கு முதுகைக்காட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் உட்காரவும்.
அமீமதந்த பிதரோ ஸௌம்யா: .. என்று மீண்டும் திரும்பிக்கொண்டு அக்னியை பார்க்கவும்.
ஸ்தாலியில் மீதமாக வைத்த சருவை நுகரவும்.அதற்கு மந்திரம்: யே ஸமானாஸ்ஸமனஸ: * வீரம் தத்த பிதர:
பிண்டத்தின் மீது ஜலாஞ்சலி முன் போல.
 

No comments: