Pages

Sunday, August 14, 2022

ஶ்ராத்தம் - 53




 


முன் பதிவுகளில் ஒரு விஷயம் விட்டுப்போயிற்று. (இதை பின்னால் மின் நூலாக்கும்போது சரியான இடத்தில் சேர்த்து விடுகிறேன்.)

இந்த ஶ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். இது எல்லா ஸ்நானங்களுக்கு பின் செய்யக்கூடியது. பூணூலை இடம் செய்து கொண்டு… 
 
மேல் வஸ்திரத்தை பிழிய மந்திரம்: யே கே சாஸ்மத்குலே ஜாதா அபுத்ரா கோத்ரஜா ம்ருதா: தே க்ரஹ்ணந்து மயா தத்தம் வஸ்த்ரம் நிஷ்பீடனோதகம். பொருள்: என் குலத்திலோ கோத்ரத்திலோ புத்ரனற்று எவர் இறந்தனரோ அவர்கள் என்னால் கொடுக்கப்பட்ட வஸ்திரத்தை பிழிந்த ஜலத்தை க்ரஹித்துக் கொள்ள வேண்டும்.

கீழ் வஸ்த்ரத்தை பிழிய மந்திரம்:உச்சிஷ்ட பாகினோ தாஸா யே ம்ருதாஸ்தேத்வமந்த்ரகா: துப்யந்து தருதாம் ப்ராப்தா மம ஸம்பந்தினோ ம்ருதா: - பொருள்: ஶ்ராத்தத்தில் உச்சிஷ்டத்தை அடைபவர்களான தாஸர்களும் மந்திரமில்லாமல் எவர் இறந்தவர்களோ அவர்களும் பாபத்தால் மரத்தன்மையை அடைந்தவர்களும் என்னைச்சேர்ந்தவர் எவர் இறந்தனரோ அவர்களும் த்ருப்தி அடையட்டும்.

பிறகு பூணூலை வலம் செய்து கொண்டு ஆசமனம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு பிரம்ம யக்ஞம் செய்ய வேண்டும்.
 

No comments: