Pages

Wednesday, October 29, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -4



நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:।
ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:॥ 3.8 ॥


நின்றுநீ செய்யு நியதக் கருமத்தை
யென்றுமிது மற்றறிவி லேற்றமுடைத்-துன்ற
னுடனடப்பு மோடா தொருகரும மற்றா
லடலடர்த்த தோளா யறி

நின்று நீ செய்யு(ம்) நியதக் கருமத்தை என்றும் இது மற்று அறிவில் ஏற்றமுடைத்து. உன்றன் உடல் நடப்பும் ஓடாது ஒரு கருமம் அற்றால்; அடல் அடர்த்த தோளா, அறி.

(நீ சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றுவாயாக. ஏனெனில் கர்மங்கள் செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் கர்மங்களை ஆற்றுவது சிறந்தது. மேலும் கர்மம் செய்யாமல் இருப்பதால் உனக்கு உடலைப் பேணுவது கூட ஸாத்யமாகாது.)

கர்மாவையே நீ செய். இல்லைனா சரீர யாத்திரையே நடக்காது. எல்லாத்தையும் விட்டு ஞானம் சித்திச்சபின்தான் சரீர யாத்திரை பற்றி ஒத்தன் கவலை பட மாட்டான். ஞானம் வந்தவன் ஜடபரதர் போல ஒண்ணும் செய்யாம இருப்பான். சுகர் போன்ற ஞானிகள்தான் சாப்பாடு உடை இருக்க இடம் இதல்லாம் கிடைக்குதோ இல்லையோன்னு கவலை படாம இருப்பாங்க.

சன்னியாசிகள்ல ஞானியான சன்னியாசி, ஜிக்ஞாசுவான சன்னியாசி ன்னு இரண்டு உண்டு. (இதெல்லாம் விரிவா ஞான வழில பாப்போம்.)

ஞானம் சித்திச்சுதான் சன்னியாசம் என்று இல்லை. சன்னியாசத்தாலேதான் ஞானம்னும் இல்லை. யாருக்கு குடும்பத்தில் இருந்து கொண்டு ஞானம் தேடறது கஷ்டம்ன்னு தோணுதோ, திட வைராக்கியம் வந்தாச்சோ, சன்னியாச தர்மத்தை கடை பிடிக்க முடியும்ன்னு தன்னம்பிக்கை இருக்கோ அவன் குடும்பத்தை விட்டு விட்டு சன்னியாசம் வாங்கிக்கலாம். இது கஷ்டம் என்கிறதாலதான் சாஸ்திரங்கள்லே கலியுகத்திலே இதை செய்யாதேன்னு சொல்லி இருக்காங்க. குரு பரம்பரையை காப்பாத்தவும் உண்மையா வைராக்கியம் வந்தவங்களும் சிலர் சன்னியாசியா ஆகிறது சரிதான். மத்தவங்க சன்னியாசம் வாங்கிக்கிறது கொஞ்சம் பிரச்சினையானது. பெரும்பாலானவங்க வீட்டிலேயே இருந்து கொண்டேதான் ஞானம் பெற முயற்சி பண்ணணும்.

ஞானிகளை விட ஞானத்தை நோக்கி போகிறவர்கள்தானே -ஜிக்ஞாசு- நிறைய பேர்? இவர்களுக்கு சரீரத்தை காப்பாத்திக்க வேண்டி இருக்கிறதால சன்னியாசிங்களுக்கும் பிக்ஷை எடுத்து சாப்பிட கர்ம தர்மம் சொல்லி இருக்கு. பட்டினி கிடந்து சாகிறதால ஆத்ம சாக்ஷாத்காரம் கிடைக்காது. பசி இருக்கும் போது சாப்பிடாம இருந்தா அது ஆத்ம ஹத்தி தோஷம் ஆகும்.

இப்படி ஞானயோகிக்கும் கர்மம் முழுக்க விடறதில்லையே. மேலும் கர்ம யோகத்திலேயே அறிவும் ஞானமும் உண்டாச்சே!

மனைவி மக்களை விலக்கினாலும் சரீரமே ஒரு வீடா இருக்கு. ஞான கர்ம இந்திரியங்கள் எல்லாம் கூடவே வருதே! அது எல்லாம் மனசு மூலமா வெளியே வரத்தானே வரும்? அப்படி வரும்போது அவை கெட்ட சமாசாரங்கள்ள போகாம இருக்கணுமே! பசி தாகம் இருக்கவே இருக்குமே! அவை தங்களை கவனிக்க வேலை செய்ய தூண்டுமே!

ஞான யோகம் பழக்கம் இல்லாதது. கர்ம யோகம் சின்னதுலேந்து பழகியது.

ஞான யோகத்துக்கு பற்று இல்லாம இருக்கிறது துவக்கப்புள்ளி. அங்கேந்து மேலே முன்னேறலாம். ஆனா கர்ம யோகத்துக்கு அது கடைசி புள்ளி. கொஞ்சம் கொஞ்சம் பற்று இல்லாத நிலையிலேயே கர்ம யோகத்தை ஆரம்பிக்கலாம். அது சுலபமானதும் கூட. அனேகமா எல்லாரும் கொஞ்சம் முயற்சில கர்மாவை செய்துடலாம். இப்படி முயற்சி ஜெயிக்கிறதால மேல மேல தொடர்ந்து சாதனை செய்ய ஏதுவா இருக்கும். செயல்லேந்து நழுவுறது குறைவாவே இருக்கும்.

இப்படி எல்லாம் சொல்லி அர்ஜுனனை கர்மத்திலே ஈடுபாடு கொள்ள சொல்கிறான் கண்ணன்.

2 comments:

Geetha Sambasivam said...

ஜிக்ஞாசுவான சன்னியாசி =desirous to know?????? especially about athma???

திவாண்ணா said...

ஜிக்ஞாசு - ஆத்ம ஞானத்தை தேடுகிறவன்.