Pages

Thursday, October 23, 2008

கண்ணன் காட்டிய கர்ம வழி -1



பையர் பத்தி மொக்கை போடப்போய் வேற எங்கேயோ போயிட்டோம். இப்ப திருப்பி கர்ம வழிக்கு வரலாமா?
:-))
-------
மறந்திருக்க மாட்டேங்கன்னு நினைக்கிறேன். பகவத் கீதைல 2 ஆம் அத்தியாயத்திலே கண்னன் சில விஷயங்கள் சொன்னான். இப்ப 3 ஆவது அத்தியாயத்திலே மேலே கர்ம யோகத்தைப்பத்தி சொல்லப்போறான்.

முன்னாலே அர்ஜுனன் கேட்டான் ஏம்பா கர்ம யோகத்த விட ஞான யோகம்தானே உசந்தத்துன்னு சொன்னே? பின்ன ஏன் கோரமான யுத்தம் என்கிற கர்ம யோகத்தில ஈடுபடுன்னு எனக்கு சொன்னே?
39 -52 வரை கர்மயோகம் சொல்லி இப்படி கடைபிடிச்சா ஞான யோகம் வரும். அப்படி செஞ்சா ஆத்ம சாக்ஷாத்காரம் கிடைக்கும்ன்னு கண்ணன் சொன்னான். இது கீழ் தளத்திலேந்து பத்தாம் மாடிக்கு போனா அங்கேந்து 20 ஆம் மாடிக்கு போலாம் என்கிறது போல.
ஆனா அர்ஜுனன் கேட்கிறது ஏன் கீழ் தளத்துலேந்து 20 ஆம் மாடிக்கு நேரா போகக்கூடாது என்பது போல. அதுக்கு கண்ணன் பதில் சொல்கிறான். பல விதமாயும் மனிதர்கள் இருக்காங்க. அவங்க அவங்களுக்கு தகுந்தாப்போலதான் வழியும்.

அர்ஜுந உவாச
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஷவ॥ 3.1 ॥
வ்யாமிஷ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே
ததேகம் வத நிஷ்சித்ய யேந ஷ்ரேயோ அஹமாப்நுயாம்॥ 3.2 ॥

நாதா கருமத் தினன்றாகிற் புத்தியினை
யேதாக விக்கருமத் தேவுதி- சூதார்ந்த
வுன்னரையென் னுண்மயக்கு மொன்றுரையென் னன்றியெனத்
தன்னுரைசெய் தான்விசயன் றான்.

நாதா கருமத்தின் அன்றாகில் புத்தியினை
ஏதாக இக்கருமத்து ஏவுதி?- சூதார்ந்த
உன்னரை என்னுள் மயக்கும். ஒன்றுரையி என்னன்றி எனத்
தன்னுரை செய்தான் விசயன்தான்.

(அர்ஜுனன் சொன்னார்: " ஜனார்தன! கர்மத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது என்று உங்களால் கருதப்பட்டால் கேசவ! பின்னர் என்னை பயங்கரமான கர்மத்தில் ஏன் ஈடுபடுத்துகிறீர்கள்?
குழம்பிய போன்ற பேச்சினால் என் புத்தியைக் கலக்குகிறீர்கள் போலிருக்கிறதே! எதனால் நான் மேன்மையை அடைவேனோ அந்த ஒன்றைத் தீர்மானித்துக் கூறுங்கள்.)

சாங்கிய யோகத்திலே பகவான் முக்கியமா ஞான யோகத்தை சொன்னார். நடுவில கொஞ்சம் கர்ம யோகத்தை சொன்னார். ஞானியைப்பத்தியும் ஸ்திதப்ப்ரக்ஞன் என்று சொல்லும்போது ஞானியோட லக்ஷணங்களையும் சொன்னார். அதோட கர்மயோகம் மட்டம் என்று தொனிக்கிற மாதிரி வேற சொன்னார். அதனால அர்ஜுனன் கேட்கிறான்: கர்மங்கள் மட்டம்ன்னு சொல்லிட்டு ஏன் அதில போக சொல்லறே? நான் ஞானியா போகிறேன் என்கிறான் அர்ஜுனன். கோரமான கர்மவை வேற சொல்கிறானே! யுத்தம் செய், கொல்லு என்கிறான்.

கண்ணன் தெளிவாதான் சொல்கிறான். சும்மா கேட்கிறவனை கலக்கறத்துக்காக சொல்லலை. "தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்" (ப.கீ 2:49) என்று சொன்னதுதான் கொஞ்சம் குழப்பும். ஞான யோகத்துக்கு கர்மா வெகு தூரம்ன்னு சொல்லிட்டான். அப்ப அதில ஏன் ஈடுபடச்சொல்றான்?

எந்த ஒரு கர்மாவை தூரம்ன்னு சொல்லி இருக்கு? பலனை கருதி செய்கிற கர்மாவைதான் அப்படி சொன்னது. சம புத்தியோட செய்கிற எல்லா கர்மாவுமே சரிதான். கர்ம யோகத்தையே தூரம்ன்னு சொல்லலை. ஸ்தித ப்ரக்ஞன் ஆவது ஞான யோகத்தாலேயும் முடியும், கர்ம யோகத்தாலேயும் முடியும்.

ஸ்ரீபகவாநுவாச

லோகே அஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்॥ 3.3 ॥


அண்ணலவன் கேட்க வதனியல்க ளங்குரைத்தா
னெண்ணமருஞ் சாங்கியருக் கின்னறிவு- வண்ணநிகழ்
சீருடைய யோகிக்குச் செய்கரும மென்றிரண்டும்
பேருலகிற் சொன்னேன் பிரித்து.

அண்ணல் அவன் கேட்க அதன் இயல்கள் அங்கு உரைத்தான்
எண்ணம் அருஞ் சாங்கியருக்கு இன்னறிவு- வண்ண நிகழ்
சீருடைய யோகிக்குச் செய் கருமம் என்று இரண்டும்
பேருலகில் சொன்னேன் பிரித்து.

(ஸ்ரீ பகவான் கூறினார்: " பாவமற்றவனே! இவ்வுலகில் என்னால் இருவகைகள் கொண்ட நிஷ்டை முன்பே கூறப்பட்டன. அவற்றில் ஸாங்க்ய யோகிகளுக்கு நிஷ்ட ஞானயோகத்தினாலும் யோகிகளுக்கு நிஷ்ட கர்மயோகத்தினாலும் அமைகின்றன.)

அட, ஞான யோகத்தை பத்தி சொன்னா ஏன் குழப்பிக்கிற? இந்த உலகத்திலே எல்லாரும் ஒரே மாதிரியா இருக்காங்க? கர்ம யோகம் செய்யவும் ஞான யோகம் செய்யவும் இரண்டு வித தகுதி உள்ளவர்கள் இருக்கிறதால பிரிச்சு சொன்னேன்.

தத்வ விசாரம் செய்கிறவர்களுக்கு திட வைராக்கியம் உள்ளவர்களுக்கு (பற்றை விட்டவங்களுக்கு) ஞான யோகமும்; செயல் படுகிறவர்களுக்கு - பற்றை திடமா விடாதவங்களுக்கு -மந்த வைராக்கியம் உள்ளவர்களுக்கு- கர்ம யோகமும் சொன்னேன்.
இரண்டும் ஆத்ம சாக்ஷாத்காரம் என்கிற பலன் ஒண்ணிலேயேதான் கொண்டு விடும்.

அர்ஜுனன் இங்கே குழம்பிதானே இருக்கான். தன் கடமையான யுத்தத்தை செய்ய மாட்டேன் என்றுதானே வில்லை கீழே போட்டுட்டு உக்காந்து இருக்கான். அதனால இவன் கர்ம யோகத்துக்குதான் அதிகாரி. அதே மாதிரி நாமும் பற்று இல்லாம போய், அதுக்குன்னு ஒரு காலம் வர வரை ஞான யோகத்தை பத்தி ரொம்ப குழப்பிக்க வேணாம்.

கர்ம யோகம் செய்ய செய்ய சித்த சுத்தி - அதாங்க மனசு சுத்தமாகி- உலக விஷயங்கள்லே பற்று போகும். மனசு பகவானை பற்றி நிக்கும். இதானே வைராக்கியம்? அது வந்தாச்சுன்னா ஞான யோகத்திலே கொண்டு விடும். அதனால நாம் யார் என்கிற ஞானம் வந்துடும்.


6 comments:

R.DEVARAJAN said...

கீதா விவரணம் நன்றாக இருக்கிறது. ஸ்வாமி ராம்ஸுக தாஸ் அருளிய ‘ஸாதக ஸஞ்ஜீவநீ’ உரையிலும் சற்றுக் கண் செலுத்தலாம்.
தெளிவான ஓட்டத்திற்குத் துணை புரியும்.
ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

தேவராஜன்

மெளலி (மதுரையம்பதி) said...

//கர்ம யோகம் செய்ய செய்ய சித்த சுத்தி - அதாங்க மனசு சுத்தமாகி- உலக விஷயங்கள்லே பற்று போகும். மனசு பகவானை பற்றி நிக்கும். இதானே வைராக்கியம்? அது வந்தாச்சுன்னா ஞான யோகத்திலே கொண்டு விடும். //

ஆக, கர்மாக்களை விடாம செய்து கொண்டு வரவேண்டும்....சித்திக்க வேண்டியது, சித்திக்கும் காலத்தில், அதுவாகவே சித்திக்கும். அப்படித்தானே?.

இன்னொரு கேள்வி, நித்ய/நைமித்திக கர்மாக்கள் ஏதாகிலும் வேத வழியில் தான் செய்ய வேண்டும் என்று கீதையில் சொல்லப்பட்டிருக்கிறதா?

ambi said...

கொஞ்சம் ஒவர் டோஸ் ஆன மாதிரி இருக்கு. ரெண்டு பதிவா வந்ருக்கலாமோ? சரி, இன்னொரு தடவை படிக்கறேன். :))

இப்ப பெங்களூர்ல தான் இருக்கேன். வரும் ஞாயிறு தான் சென்னை பயணம். :)

இணைய போட்டோலயாவது புது சட்டை போடுவோமேன்னு தான். இனிமே தான் புதுசு எடுக்கனும். :)

Kavinaya said...

//ஆக, கர்மாக்களை விடாம செய்து கொண்டு வரவேண்டும்....//

ஆனால் பலன் எதிர்பாராது சமபுத்தியோடு - என்பது முக்கியம்.

//ரெண்டு பதிவா வந்ருக்கலாமோ?//

அதான் எனக்கும் தோணிச்சு :)

திவாண்ணா said...

@ தேவ்
அந்த புத்தகம் என்னிடம் இல்லை. மற்றவர்களை கேட்டு பாக்கிறேன்
@ மௌலி
சரிதான். கவிநயா அக்கா சொன்னாப்போல பற்று இல்லாம என்கிறது முக்கியம்.

//வேத வழியில் தான் செய்ய வேண்டும் என்று கீதையில் சொல்லப்பட்டிருக்கிறதா?//

ஸ்வ தர்மத்தை ஒட்டின்னுதான் சொல்லி இருக்கான். பின்னாலே வரும் - உசத்தியான கர்மான்னு தோணாட்டாலும் ஸ்வதர்மமே பர தர்மத்தைவிட உயர்ந்தது. வேதங்கள் சொன்னதைதான் சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதயேதான் இன்னும் எளிதா புராணங்கள் சொல்லுகின்றன. சரியான புரிதல் அவசியம். விரிவா இன்னொரு சந்தர்பத்திலே பாக்கலாம்.

திவாண்ணா said...

@ அம்பி
பெரிசா போயிடுச்சா? அதே அளவுதான் போட்டு இருக்கேன்.
திடீர்ன்னு தடம் மாறினதால படிக்க கொஞ்சம் பிரச்சினை இருக்கலாம். பழசெல்லாம் நினைவுக்கு கொண்டு வரணும் இல்ல?

ஒவ்வொரு செய்யுளா போடணும்னாலும் அப்படியே செய்யலாம். பாக்கிறேன்.
@ கவி அக்கா
முக்கியமான பாயிண்டை நல்லா பிடிச்சுக்கிட்டீங்க! இனி செயல்லே கொண்டு வரப்பாக்கணும்.