Pages

Friday, November 21, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 21




தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஷோ மலேந ச।
யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்॥ 3.38


தூமத்தாற் றீயும் துகளாற் றருப்பணமும்
சேமக் கருப்பையா லேசிசுவும்- மாமை
அறப்பொதியப் பட்டதுபோல் ஆசையால் ஞானம்
உறப்பொதியப் பட்டிடுமென் றோர்

தூமத்தால் தீயும் துகளால் தருப்பணமும் (=கண்ணாடியும்) சேமக்கருப்பையாலே சிசுவும்- மாமை அறப்பொதியப் பட்டதுபோல் ஆசையால் ஞானம் உறப் பொதியப் பட்டிடும் என்று ஓர். (மாமை= அழகு)

(எவ்விதம் புகையால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும் மறைக்கப்படுகின்றனவோ மேலும் எவ்விதம் கருப்பையினால் - தசைமூட்டத்தினால் கரு மறைக்கப்படுகிறதோ, அவ்விதமே அந்தக் காமத்தினால் இந்த ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.)

வேற ஜன்மம் எடுத்தாலும் உடலோடேயே எப்பவும் குணங்களும் வந்து கொண்டு இருக்கும். அதில இருக்கிற ரஜோ குணம்தான் இந்த காமத்தை தூண்டுகிறது. இந்த ரஜோ குணத்துக்கு வலிமை மத்த குணங்களைவிட அதிகம். இதனாலதான் காமும் அதிலேந்து வர குரோதமும் ரொம்பவே வலிவா இருக்கு.

அக்னியை புகை மூடினது போல – கொஞ்சம்தான் மறைப்பு, ஊதினா போயிடும்.
கண்ணாடியை அழுக்கு மூடினது போல. கொஞ்சம் அதிக மறைப்பு துடைச்சா போயிடும்.
கர்ப்பபை மூடி இருக்கிற சிசு. சிரமப்பட்டுதான் விலக்கணும். ஆபரேஷன் செஞ்சு குழந்தையை எடுக்கிறாப்போல.

நெருப்பு புகையால மூடப்பட்டு இருக்கு. இது ரெண்டும் ஒண்ணா கூடவேதான் வரும். புகை இருக்கிற இடத்திலே நெருப்பு இருக்கும். நெருப்பு இருக்கும் இடத்திலே புகை இருக்கும். அது போல ஆத்மாவோடயே காமமும் கூடவே வரும். அப்பதான் அது ஆத்ம உணர்வை மறைக்க முடியும். அதுதான் இயற்கை நியதி. அப்பதான் உலகம் என்று ஒன்றுக்கு வாய்ப்பு இருக்கும்.

ஞான வழியில இதை ஆவரண சக்தி என்கிறாங்க. அதை அப்புறம் பாக்கலாம்.

கண்ணடி அழுக்கால மூடப்படும். அதை துடைச்சுட்டா தெளிவா தெரியும். ஆனா தொடர்ந்து துடைச்சுகொண்டே இருக்காட்டா அது திருப்பியும் அழுக்காயிடும். அது போல திருப்பி திருப்பி ரஜோகுணத்தை அழிச்சு காமத்தை தொலைக்க, காமம் திருப்பி திருப்பி வந்து கொண்டேதான் இருக்கும்.

கர்ப்பம் கர்ப்பப்பையை உடைச்சு கொண்டு வெளியே வர வேண்டி இருக்கு. அது தானே அப்படி பண்ண முடியாது. தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டு கர்ப்பப்பை சுருங்கி விரிய ஆரம்பிச்சுதான் அது வெளியே வரணும். அது போல காமத்தை விட்டு வெளியே வந்து ஆத்மாவை தெரிஞ்சுக்க வெளிலேந்து பகவானோட அனுகிரஹம் என்கிற ஒரு சக்தி வேணும்.


3 comments:

Kavinaya said...

//பகவானோட அனுகிரஹம் என்கிற ஒரு சக்தி வேணும்.//

ஆமாம். அதில்லாம எதுதான் நடக்கும்? நானும் வேண்டிக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ரொம்ப அருமையான விளக்கம் ஐயா.

திவாண்ணா said...

நன்றி குமரன்!