Pages

Tuesday, November 25, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 23


தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப।
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஷநம்॥ 3.41 ॥

ஆகையினால் ஐம்பொறியும் ஆர்த்தடக்கி ஆரமரில்
வாகைபெரு பாரதர்க்கு மாணரசே - மோகமுற
ஞானவிஞ்ஞா னத்தை நலிந்துபவத் திற்கேது
ஆனவிதை விட்டொழிவாய் ஆங்கு.

ஆகையினால் ஐம்பொறியும் ஆர்த்து அடக்கி ஆரமரில் வாகை பெரு பாரதர்க்கு மாணரசே  மோகமுற ஞான விஞ்ஞானத்தை நலிந்து பவத்திற்று ஏது ஆன விதை விட்டொழிவாய் ஆங்கு.

(ஆகவே அர்ஜூன! நீ முதலில் புலன்களை வசப்படுத்தி ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் அழிக்கின்ற இந்தப் பெரும் பாவியான காமத்தை நிச்சயமாக வீறுடன் ஒழித்துவிடு.)
.
இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:।
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:॥ 3.42 ॥

இந்தியங்கள் மேலனவாம் என்றுறைப்ப இந்தியத்திற்
சிந்தைமிக மேலதனிற் சீருடைத்துப்-புந்திதான்
மன்னியவப் புந்தியினும் மாண்புடையான் அன்னானே
கன்னவிலும் தோளாய்நீ காண்

இந்தியங்கள் மேலனவாம் என்றுறைப்பர். இந்தியத்தில் சிந்தை மிக மேல். அதனிற் சீருடைத்துப்-புந்திதான் மன்னி, அவப் புந்தியினும் மாண்புடையான் அன்னானே கன்னவிலும் தோளாய் நீ காண்.

(புலன்கள் உடலைக் காட்டிலும் மேலானவை என்று கூறுகிறார்கள். அவை உயர்ந்தவை; பலமுள்ளவை; நுண்ணியவை. இந்தப் புலன்களைக் காட்டிலும் மனம் மேலானது. மனதைக் காட்டிலும் புத்தி மேலானது. மேலும் எது புத்தியைக் காட்டிலும் மிகவும் மேலானதோ அதுவே ஆத்மா.)

காமம் மட்டுமே திருடனா? வேற இருக்காங்களா? திருடங்க 4 பேர். இந்திரியங்கள், மனசு, புத்தி, காமம். முக்கியமானது காமம்.  மத்தவங்க கொஞ்சம் வலிவு குறைஞ்ச உதவியாளர்கள். இந்த்திரியங்களை விட மனசு வலிவானது. அதைவிட புத்தி வலுவானது. எல்லாத்தையும் விட காமம் வலியது.

 முன் காலத்திலே ஒரு ராஜா இன்னொரு ராஜாவோட சண்டை போடுவார். அப்ப நேரிடையா மத்த ராஜாவை தாக்கமுடியாது. அவரை சுத்தி பல பேர் இருப்பாங்க. அவர்களை முதல்ல ஓரங்கட்டிதான் ராஜாகிட்டே போக முடியும். அப்புறம் அவரோட தேர்பாகனை தீத்து, தேரை உடைச்சு அப்புறமா ராஜா மேலே அம்பு போடுவாங்க. அது போலதான் இதுவும். நேரிடையா காமத்தை ஒழிக்கறது கஷ்டம். அதனால முதல்ல இந்திரியங்களை வசப்படுத்தி, மனசை புத்தியாலே ஜெயித்து அப்புறம்தான் காமத்தை ஜெயிக்கலாம்.

அப்ப காமத்தை ஜெயிக்க முதல்ல அதோட உதவியாளர்களை ஒழிக்கிறது போல இந்திரியங்கள், மனசு, புத்தியை கட்டுப்படுத்தணும்.  காலம், இடம் முதலியனவும் தடையா இருக்கலாம். ஆனா அவை ரொம்ப சின்ன தடைகள்.

 ஏன் இந்திரியங்களை விரோதி என்கிறோம்?
 கை கால் வலுவா இருந்தாதான் நல்ல விஷயங்களை செய்ய முடியும். காது நல்லதையே கேட்கணும். கண் நல்லதை பாக்கணும். ஆனா இவை எல்லாம் எப்பவுமே கெட்டதை நோக்கி போகப்பாக்கும். கெட்டதுக்குதான் இயல்பா ஈர்ப்பு அதிகம்.

ஆனாலும் இதை எல்லாம் ஓரளவு கட்டுப்படுத்தலாம். கெட்டதை கேட்கிற காதை மூடிக்கலாம். கெட்டதை பேசற வாயை மூடிக்கலாம். இப்படி கர்மேந்த்ரியங்களை ஓரளவு  கொஞ்ச திடமா இருந்தாலே கட்டுக்கு கொண்டு வரலாம். ஆனா மனசை எதால மூட முடியும்? அதை ஒரு வழியா தூங்க வெச்சாலும் உள்ளுக்குள்ளே சில விஷயங்களை அனுபவிக்கணும் என்கிற உறுதி இருக்கும்.

 தூங்கறோம். அப்ப மனசு ஓய்வெடுக்க போயிடுத்து. எழுந்திருக்கிறோம். அப்ப சரி நல்ல விஷயங்கள்லே ஈடு படுவோம்ன்னு மனசுக்கு தோணுமா? பழைய படி பல பழக்கமான விஷயங்கள்லேதான் மனசு போகும். ஏன்னா இதைதான் வேணும்ன்னு நாம உறுதியா உள்ளே நினைக்கிறோம். உறுதியா இருக்கிற இதுதான் புத்தி. இந்த உறுதி எங்கேந்து வந்தது? ஜன்ம ஜன்மமா பின்னாடியே வருது. இதைதான் வாசனை என்கிறோம்.

ஒரு வேளை பல விஷயங்களை யோசிச்சு புத்தியை திடப்படுத்திக் கொண்டோம்னாலும் காமம் தடையா இப்ப இருக்கு. அதையும் கட்டுப்படுத்தணும்.

இப்படி எல்லாத்தையும் கட்டுப்படுத்தணும்ன்னு சொல்லியாச்சு சரி, ஆனா எப்படி செய்கிறது,?

இந்திரியங்கள், மனசு, புத்தி இவற்றை கர்ம யோகத்திலே ஈடுபடுத்தி வேலை கொடுக்கணும். இந்திரியங்களை கர்ம யோகத்திலே ஈடுபடுத்தி திசை திருப்பி விடலாம். வேலை இல்லாத ஆசாமிதானே ஏதாவது போட்டு உழப்பிண்டு பிரச்சினைகளை உண்டு பண்ணுவான்? வேலையிலே ஈடு படுகிற ஆசாமிக்கு மத்ததைப்பத்தி யோசிக்க நேரம் இல்லை. ஏதாவது பாக்கணுமா பகவானை பார். கேட்கணுமா, பகவான் நாமத்தை கேளு - இப்படி அதை எல்லாம் திசை திருப்பி கட்டுப்படுத்தலாம்.

ரஜோ குணத்தை சாப்பாட்டை கட்டுப்படுத்தி அதனால கொஞ்சம் மாத்தலாம். அப்ப மனசு சத்துவத்திலே நிக்கும். புத்தியும் நல்லதாகிடும். இப்படி எல்லாம் செய்ய காமத்துக்கு துணையா இருக்கிற கருவிகள் இல்லாம போயிடும். இருக்க இடமே இல்லாம காமமும் ஒழிஞ்சுபோகும்.


No comments: