Pages

Thursday, December 2, 2010

பிராணாயாமத்தின் விசேஷ லக்ஷணம்:



பிராணாயாமத்தின் விசேஷ லக்ஷணம்:

स तु बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः ।।50।।
ஸ து பா³ஹ்யாப்⁴யந்தரஸ்தம்ப⁴வ்ரு«த்திர்தே³ஶகாலஸம்°க்²யாபி⁴​: பரித்³ரு«ஷ்டோ தீ³ர்க⁴ஸூக்ஷ்ம​: || 50||

ஸ = அந்த ப்ராணாயாமத்தின்; து பா³ஹ்யாப்⁴யந்தர = உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் விருத்தி உடையதாகவும்; ஸ்தம்ப⁴ வ்ரு«த்திர் = வெளியே அனுப்பாமலும் உள்ளே இழுக்காமலும் அப்படியே நிறுத்துவதாகவும் {ஆகும்.} தே³ஶ கால ஸம்°க்²யாபி⁴​: = (அந்த மூன்று வித ப்ராணாயாமங்கள்) நிற்கின்ற தேச, கால, மாத்திரை (duration) ஆகியவற்றால்; பரித்³ரு«ஷ்டோ = பார்க்கப்பட்டதாக; தீ³ர்க⁴ = நீளமாகவும்; ஸூக்ஷ்ம​: =ஸூக்ஷ்மமாகவும் (ஆகின்றது.)

பிராணாயாமத்தில் மூச்சை உள்ளிழுப்பது பூரகம். இது உள்முக வளர்ச்சி (ஆப்யந்தர விருத்தி). வெளிச்செலுத்துவது ரேசகம். இது வெளிமுக வளர்ச்சி (பாஹ்ய விருத்தி). இந்த இரண்டுக்கும் நடுவில் மூச்சை உடலில் அப்படியே நிறுத்துவது கும்பகம். ஸ்தம்பித்து நின்றேன் என்கிறோமல்லவா? தூண் போல நிற்பது. உடலில் காற்று அப்படி நிற்பதால் இது ஸ்தம்ப விருத்தி. இவை மூன்றும், இவற்றின் தேசம் காலம், கால அளவு இவற்றைப் பொறுத்து நெடியதாகவும், நுட்பமானதாயும் ஆகின்றன. பிராணாயாமத்தில் வழக்கமாக மூச்சை விடுவதை, இழுப்பதை விட அதிக காலமும் தூரமும் விட, இழுக்க பழக வேண்டும். அதே போல மூச்சு நிற்கும் காலத்தையும் அதிகமாக்க வேண்டும். [குரு இல்லாமல் இதை பயிற்சி செய்ய வேண்டாம். வேண்டுமென்றே மேல் தகவல்கள் தரவில்லை.] பயிலப்பயில வாயு அதிக நேரம் நிற்பது தீர்க்க நிரோதம் எனப்படும். இது பின்னர் சூக்ஷ்மமாகிவிடும். மூச்சு ஓடுகிறதா இல்லையா என்று அறிவதே கடினமாகும் படி மெலிதாக ஆகும்.

No comments: