तृतीयो विभूतिपादः த்ரு«தீயோ விபூ⁴திபாத³:
மூன்றாம் பாதம்:
விபூதி என்பதற்கு இங்கே திருநீறு என பொருள் இல்லை; சித்தி என்பது பொருள். சாதனா மார்க்கத்தில் கொஞ்சம் ஈடுபாடும் சிரத்தையும் உண்டாகும் பொருட்டு இவை சொல்லப்படுகின்றன. தாரணை, த்யானம், ஸமாதி ஆகியவை மொத்தமாக ஸம்யமம் எனப்படுகின்றன. இந்த ஸம்யமத்தாலேயே சித்திகள் உண்டாக வேண்டும். தாரணை, த்யானம், ஸமாதி ஆகியவை இதே வரிசையில் நிகழ வேண்டும்.
(இந்த ஸம்யமத்தை நன்றாக உள்ளே வாங்கிக்கொள்ளுங்கள். இனி அடிக்கடி வரும்!)
"மனஶ்சஞ்சலம் அஸ்திரம்" என்பது மனதை விளக்குகிறது. மனதானது நிலையற்றது; அலைபாய்வது. அதுதான் அதற்கு இயல்பே. ஆகவே அது எதையாவது பற்றிக்கொண்டால்தான் நிலையாக இருக்கும். நியமம் முதலான பகிரங்க சாதனங்கள் அதை பந்தத்தில் ஆழ்த்தும் எதிலும் பற்றாமல் விரட்டின. மனதுக்கு மாறாமல், பந்தத்தை உண்டு பண்ணாத, நிர்விகல்ப ஸமாதி வரை உள்ள உத்தம பலனை அடைய எந்த வஸ்துவின் சம்பந்தம் இன்றியமையாததோ அதன் சம்பந்தம் ஏற்படுத்தும் முறையான தாரணையை இப்போது உபதேசிக்கிறது.
No comments:
Post a Comment