Pages

Tuesday, December 28, 2010

சித்த விருத்திகள் மஹாபூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் பொருந்தும்:



एतेन भूतेन्द्रियेषु धर्मलक्षणावस्थापरिणामा व्याख्याताः ।।13।।

ஏதேந பூ⁴தேந்த்³ரியேஷு த⁴ர்மலக்ஷணாவஸ்தா²பரிணாமா வ்யாக்²யாதா​: || 13||

ஏதேந = மனதின் பரிணாமத்தை உபதேசித்ததாலேயே; பூ⁴தேந்த்³ரியேஷு = (ப்ருத்வீ முதலான) மஹா பூதங்களிலும், (சக்ஷு முதலான) இந்திரியங்களிலும்; த⁴ர்ம லக்ஷணாவஸ்தா² = தர்மம், லக்ஷணம் அவஸ்தை ஆகிய; பரிணாமா: = மாறுதல்கள்; வ்யாக்²யாதா​: = விவரிக்கப்படுகின்றன.

மனதின் பரிணாமத்தை உபதேசித்ததாலேயே ப்ருத்வீ முதலான மஹா பூதங்களிலும், கண் முதலான இந்திரியங்களிலும் தர்மம், லக்ஷணம் அவஸ்தை ஆகிய மாறுதல்கள் விவரிக்கப்படுகின்றன.


பரிணாமம் என்பது மாறுதல் அடைந்த நிலை. அவை தர்ம பரிணாமம், லக்ஷண பரிணாமம், அவஸ்தா பரிமாணம் என மூன்று வகையாகும்.

ஒரு வஸ்து எப்படிப்பட்டது என்பதற்கு அதன் அணுக்கள் காரணமாகும். இது தர்ம பரிணாமம். மண் கட்டியாக இருக்கிறது. அது குடமாகும் போது குடமும் மண்தான் என்றாலும் கட்டி என்ற இயல்பு போய் குடம் ரூபம் என்ற இயல்பாக ஆகிவிடுகிறது. இதே போல சித்தத்தின் வெளிநாட்டம் என்ற தர்மம் போகும்போது அகமுக நாட்டம் (நிரோதம்) என்பது தர்மம் -இயல்பு- ஆகிவிடும். இது தர்ம பரிணாமம்.

மேலும் ஒரு பரிணாமம் காலத்தை ஒட்டி மூன்றாகும். இந்த முக்காலங்களும் லக்ஷணமாகும். அனாகதம் என்பது வரவிருக்கிறது; வர்த்தமானம் என்பது நிகழ் காலம்; அதீதம் என்பது கடந்த காலம். இப்போது மண்ணாக இருப்பது எதிர்காலத்தில் குடமாகும் என்றால் மண்ணாக 'இருப்பது' வர்த்தமான பரிணாமம். இப்போது குடமாக இருப்பது எதிர்காலங்களில் உடைந்து மண்ணாகிவிடும். அது அனாகத லக்ஷணம்.

அவஸ்தை என்பது இருப்பு என்று பொருள் படும். மண் குடமாவது இன்று எனில் அது வர்த்தமான அவஸ்தை; நாளை எனில் அது அனாகத அவஸ்தை; அடுத்த கல்பத்தில் உண்டாகும் என்பது அனாகததமமான அவஸ்தை. இது அவஸ்தா பரிமாணம்.

No comments: