Pages

Wednesday, May 11, 2016

அத்வைதம் - 3


இந்த ஜகன் மித்யாவை பார்த்து நகர்த்திடலாம்.....

மித்யா என்கிறதுக்கு பலரும் மாயை, பொய் என்றே பொருள் எடுத்துக்கறாங்க. அப்படி எடுத்துக்கறதாலேயே நேரடியா பார்த்து அனுபவிக்கிற விஷயம் எப்படி பொய்யாப்போகும் என்கிற வாதம் சரியாத்தோணுது.
மித்யா என்கிறதுக்கு சரியான பொருள் தற்காலிகமானது; அதனால அது உண்மையான உண்மை இல்லை.
அதென்ன உண்மையான உண்மை? அப்ப பொய்யான உண்மையும் இருக்கா?
ஆமாம்! பொய்யான உண்மையும் இருக்கு, பொதுவான உண்மையும் இருக்கு!
உதாரணம் பார்க்கலாம். சூரியன் கிழக்கே உதிக்குது.
பொதுவா இதை உண்மைன்னுதானே யாரும் சொல்லுவாங்க.
ஆனா அறிவியல் படிச்ச எல்லாருக்கும் தெரியும். சூரியன் உதிக்கறதில்லை; அது இருக்கற இடத்திலேயேத்தான் இருக்கு. உலகத்தில நாம இருக்கிற பகுதிதான் சூரியன் இருக்கற பக்கமா திரும்பி இருக்கு!
இருந்தாலும் இதை யாரும் பொய்ன்னு சொல்லறதில்லை!
ஏன்னா இது வியவகாரத்தில இப்படி நினைக்கறது தோதா இருக்கு. அதனால பொதுவா இது உண்மை; பொதுவான உண்மை.
உலகத்தில நாலுல மூணு பகுதி தண்ணீரா இருக்கு. இது எப்படி? உம்ம்ம்ம்? மேல் பரப்பில பாத்தா அது உண்மை போலத்தான் இருக்கு. ஆனா கடலுக்குள்ள போங்களேன். போய் போய் ஆழத்தில என்ன வருது? பூமி! அப்ப பூமியின் மேல தண்ணீர் இருக்குன்னு சொல்லறதே சரி. இருந்தாலும் இதையும் உண்மைன்னுதான் நாம ஒத்துக்கறோம். இது பொய்யான உண்மை.
பொதுவான உண்மையும் பொய்யான உண்மையும் பொய்தான்னாலும் இப்படி நினைக்கிறது நமக்கு பல விதங்களிலே வசதியா இருக்கறதால இதை உண்மைன்னே வெச்சுக்கறோம். இதை வியவகார சத்யம் என்பாங்க.
இந்த நாம பார்க்கிற உலகமும் வியவகார சத்யம்தான்.

தோன்றுகிற எல்லாத்துக்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்கு.

No comments: