Pages

Wednesday, May 18, 2016

அத்வைதம் - 6


அப்ப நிரந்தரம் எது?
எல்லாமே ஏதோ ஆட்டம் (atom) களால ஆனதுதான். ஆட்டமோ பொருளாவும் அதே சமயம் சக்தியாவும் இருக்கிறது. இந்த சக்தியே நிரந்தரமா தோணுகிறது. அணுவை பிளக்கிறப்ப சக்தி வெளியாகிற மாதிரி sகதியை ரொம்ப அழுத்தினா பொருளா ஆகிடுமோ? கிடைக்கட்டும். எல்லாத்திலேயும் நிறைஞ்சு இருக்கிற இந்த சக்தியையே ப்ரம்மம் என்கிறாங்க. வெளியிலே பார்க்க இது தனித்தனியா தோணினாலும் ஒரே சக்திதான் பரவலா எங்கும் இருக்கு.
மொத்தத்திலே இந்த சக்தியே நித்தியம். தற்காலிகமான உலகம் எல்லாமே மித்யா!
அதாவது ப்ரம்மம் சத்யம்; ஜகன் மித்யா!
நாம பார்க்கிற எல்லா விஷயங்களும்- ஐம்புலன்களால அறிகிற எதுவும் தற்காலிகம் என்கிறதால வியவகார சத்தியம்; உண்மையான உண்மை இல்லை!
உண்மையான உண்மை எல்லாத்துக்கும் உள்ளே இருக்கிற சக்திதான்!

எல்லாம் கெடக்கட்டும்.இந்த சக்திக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?
யோவ்! எல்லாமே இந்த சக்திதான் என்கிறபோது என்ன சம்பந்தம்ன்னு கேட்டா என்ன சொல்லறது?
சரி சரி, ஏன் இந்த சக்தி எனக்கு தெரிய மாட்டேங்குது?
ஏன்னா ஆரம்பத்திலேந்து வேற விதமா சொல்லிக்கொடுத்துதான் நம்மை வளத்து இருக்காங்க.
பிறந்த குழந்தைக்கு தான்னு ஒண்ணு கிடையாது. நாலஞ்சு குழந்தைகளை ஒண்ணா விட்டு இருந்தா, ஒண்ணு அழும்போது மத்ததும் அழும்! ஒண்ணு சிரிச்சா எல்லாம் சிரிக்கும். கொஞ்சம் கொஞ்சமா வளர வளர நாம்தான் அதுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்(?கெடுக்கிறோம்?) ஹரி ஆரு? ஹரி ஆரு? நான்னு காட்ட வைச்சுடுவோம். நாந்தான் ஹரின்னு காட்டும்போது அவ்வளவு ஆனந்தம் அடையறோம்! இல்லாவிட்டாலும் வாசனைன்னு ஒண்ணு இருக்கில்லையா? காலங்காலமா வரும் பழக்கம், - ரத்தத்தில ஊறிப்போனதுன்னு சொல்வாங்களே, அது- நாளடைவில் நான்னு ஒரு உணர்ச்சியை மேலெழசெஞ்சுடும். இததான் அஞ்ஞானம் என்கிறாங்க.

No comments: