Pages

Friday, May 13, 2016

அத்வைதம் - 5


நம் உடம்பு இருக்கிற வரை இருக்கோம். சந்தேகமில்லை. இறந்து போனாலும் நம்ம உடம்பு அங்கேயேத்தானே இருக்கு? இருந்தாலும் அதை பிணம் என்கிறாங்க. இது வரை பிரச்சினை இல்லாம இருந்த உடம்பு இப்ப அழுக ஆரம்பிக்கிறது. அதனால அத சீக்கிரமா எரிச்சுடு அல்லது புதைச்சுடு என்கிறாங்க.
அப்ப உடம்பு நாம இல்லை. என் பேனா என் பென்சில் என்கிறது போல என் உடம்பு ந்னு சொல்லிக்கொண்டு இருக்கோம். அவ்ளோதான். தோன்றி மறைகிற இந்த உடம்பு மித்யை, தற்காலிகம்.
இதுல என்ன ஆச்சரியம்? உயிர் இருக்கிற வரை உடம்பு நல்லா இருக்கும். உயிர் போயிட்டா உடம்பும் அழுக ஆரம்பிக்கும் ன்னு சொல்லலாம். அந்த உயிர் என்கிறது என்ன? திடீர்ன்னு எங்கேயோ இருந்து வந்து திடீர்ன்னு போகிற இது என்ன?
இதை ஜீவன்…. சரி சரி, தூய தமிழ்னா சீவன்னு சொல்லலாம். ப்ரபஞ்சத்திலேந்து வந்தது ப்ரபஞ்சத்திலேயே லயமாகிறது. திருப்பி வேற உடம்பிலே புகுந்துக்குது. இதை நான் சொல்ல வேணாம். விஞ்ஞானிகளே இந்த பக்கம் திரும்பி ஆராய்ச்சி செய்யறாங்க. க்வாண்டம் மெகானிக்ஸ் வளர வளர இந்த ஆராய்ச்சி எல்லாம் இன்னும் சுவையா போய்கிட்டு இருக்கு!

ஆக இந்த உடம்பு அநித்தியம். ஜீவன் நித்தியம். அநித்தியமான உடம்பு மித்யா.
அநித்தியத்தை மித்யான்னு ஏன் சொல்லணும்? எவ்ளோ நாள் இந்த உடம்பு இருந்தது? இதைப்போய் மித்யான்னு சொல்லலாமா?
சொல்லலாம். இவ்ளோ நாள் - காலம்- என்கிறது ஒரு ஒப்பீட்டு சமாசாரம்தானே?
மின்னல் தோன்றி க்‌ஷண நேரத்தில மறையுது.
லாப்ல ஒரு ஐசோடோப் உருவாக்கி சில மில்லி செகண்ட் கூட இருக்கறதில்லே.
குழந்தை ஊதி விடற சோப் குமிழ் சில வினாடிகளில இல்லாம போகும்.
சாயும் சூரியன் அள்ளித்தெளிக்கிற வண்ணக்கோலம் ஒரு நிமிஷத்தில மாறிடும்.
குடிக்கிற தண்ணீர் 15 நிமிஷத்தில வயத்திலேந்து காணாமப்போகும்.
சாப்பிடுகிற சாப்பாடு இரண்டு மணி நேரத்தில வயத்திலேந்து நகந்துடும்.
மே ஃப்ளை என்கிற பூச்சி ஒரு நாளிலே தம் முழு வாழ்க்கையையே வாழ்ந்து முடிச்சுடும்.
சர்வ சாதாரணமா நாம பார்க்கிற ஈக்கு வாழ்நாள் ஒரு மாசம். எலிக்கு ஒரு வருஷம். முயலுக்கு பத்து வருஷம். மனுஷனுக்கு நூறுன்னு வெச்சுக்கலாம்.
மனுஷன் நிரந்தரம்ன்னு நினைக்கிறது எல்லாம் கூட அப்படி இல்லை. மலை கூட சில நூறு வருஷங்கள்…. – மலைகளை வெட்டி எடுக்கிற மனுஷனோட வேகத்தை பாத்தா சில பத்தாண்டுகளே போதும் போல இருக்கு! :(
பல உள்நாட்டு கடல்களே வத்திப்போயாச்சு! பாலை நிலங்களே காணாமப்போயாச்சு! பல விளை நிலங்களே இன்னும் சில பல வருஷங்களிலே பாலையாயிடும்ன்னு யாரும் சொன்னா அதை மறுக்க முடியாது! ஏன், இந்த உலகமே ஒரு நாள் சிதைந்து போகும்.
மனுஷனோட வாழ்க்கை நூறு வருஷம்ன்னாலும் பிரபஞ்சத்தோட வயசோட ஒப்பிட்டா அது என்ன? தூசு கூட இல்லை. ஒரு பெரிய காட்டில இருக்கற மரம் ஒண்ணுத்தோட ஒரு இலை உதிர்ந்து போனா எவ்வளவு முக்கியமோ அவ்ளோதான் நம் வாழ்கையும் இறப்பும்!
எல்லாமே உரு மாறிக்கொண்டே இருக்கு. இதுல எதையும் நிரந்தரம்ன்னு சொல்ல முடியலை.

அப்ப நிரந்தரம் எது?

No comments: